ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க். முபாரக் மதனி INTJ கீழக்கரை நகர் தலைவர் ஹாஜா அனீஸ் , 1வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா , தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாஹ் கான் , KECT தலைவர் மன்சூர் Committee Of Mif நிர்வாகிகள் மற்றும் MYFA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ISOUQ நிறுவனத்தின் தலைவர் அஹமது மற்றும் நிர்வாகிகள் யாசின் அக்ரம் […]
Category: கீழக்கரை செய்திகள்
சத்திரக்குடி கலை ஸ்போர்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது கலை ஸ்போர்ட்ஸ் அகடாமி இங்கு கராத்தே மாஸ்டரும் அகடாமியின் நிறுவனருமான கலைக்குமார் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, செஸ், பரதநாட்டியம், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள உப்பூர் டோனி நர்சரி அண்ட் ப்ரைமரி பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கராத்தேவில் குமித்தே சண்டை பயிற்சி, சிறப்பு கராத்தே கட்டா பயிற்சிகளும் மாணவர்களுக்கு […]
நெல்லையில் இலச்சினை வெளியீட்டு விழா..
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று […]
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!
இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]
மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!
மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]
கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]
அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4 கிலோ திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல்.! ஆறு பேர் கைது.!!
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..! ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு […]
பாவூர் சத்திரம் பகுதியில் அரசு கலை கல்லூரி; முதல்வருக்கு வைகோ கோரிக்கை..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், பாவூர்சத்திரம் பகுதி கல்வியிலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. கீழப்பாவூர் பேரூராட்சி, குலசேகரப் பட்டி, கல்லூரணி ஊராட்சிகள் உட்பட நூற்றுக் கணக்கான கிராமங்களுக்கு மையப் பகுதியாக பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது. இவ்வட்டாரத்தில் உள்ள 11 அரசு […]
மது அருந்தும் கூடாரமாகும் பயணிகள் நிழற்குடை..
தென்காசி மாவட்டம் வைத்திலிங்கபுரம் பகுதியில் திறந்த வெளியுடன் புதிதாக கட்டப்படுள்ள பயணிகள் நிழற்குடை மது மற்றும் சீட்டு விளையாட்டு பயிற்சி கூடமாக மாறி வருவதாகவும், இந்நிலையை தடுத்து நிறுத்தி, பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை […]
கொண்டலூர் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா..
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பூலாங்குடியிருப்பு பகுதியில் உள்ள S.S.ஆர்கானிக் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைக்கு கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ மாணவியர் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர். அங்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் நடவு, வீட்டுத் தோட்டம் & மூலிகை கொத்து (பொக்கே) பற்றிய செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. S.S.ஆர்கானிக் பண்ணை நிர்வாக இயக்குனரும், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலருமான மு.சேக் முகைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கொண்டலூர் […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ! தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு .!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே […]
தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை […]
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா.!
மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அவரின திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேரன் சீவாபாவாணர் […]
தென்காசியில் சுகாதாரத்துறை மாதாந்திர ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 05.02.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, புகையிலை தடுப்பு பணி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வது, பருவ கால நோய்கள் தடுப்பு பற்றிய நடவடிக்கைகள், இள வயது திருமணம் மற்றும் இள வயது கர்ப்ப தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொது […]
கீழக்கரையில் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அல் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா நிறுவனர் வழக்கறிஞர் நஃபீல் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஹஜ் உம்ரா சேவை மற்றும் ஹலால் ஷாப்பி மற்றும் டவுன்ஷோர் கார்மெண்ட்ஸ் என்ற ஆண்கள் ஆடையகம் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு கீழக்கரை துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் , திமுக அயலக அணி மாவட்ட தலைவர் ஹனீஃபா ,தமுமுக மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ் […]
ஹைதராபாத் நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷன்; கீழக்கரை மாணவன் சாதனை
ஹைதராபாத்தில் நடந்த நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷனில் மூன்றாவது இடம் பெற்று கீழக்கரை மாணவன் அப்துல்லா சாதனை படைத்துள்ளார். நேஷனல் அகாடமி பள்ளியில் பயிலும் ஷகீல் மைதீன் என்பவரது மகன் அப்துல்லா என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த குவிஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இரு பள்ளிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி மற்றும் மதுரையைச் சார்ந்த மற்றொரு […]
செங்கோட்டை அரசு பள்ளியில் அழகிய ஓவிய கண்காட்சி..
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியரின் அழகிய ஓவியப் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி 05.02.2025 புதன் கிழமை நடைபெற்றது. மின்நகா் ஹியூமன் அப்லிப்ட் டிரஸ்ட் இயக்குநா் ரெங்கநாதன் தலைமை தாங்கி ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்தார். மின்நகா் சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜய லெட்சுமி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்ல இயக்குநா் திருமாறன் மற்றும் தேசிய பசுமைப் படையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி […]
டெல்லியை நோக்கிய பயணத்தில் திமுக மாணவரணி..
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக […]