இராஜபாளையம் அதிமுக வடக்கு ஒன்றியம் கழகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 பிறந்தாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம்; முன்னாள் அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.. அனைவரும் நம் கட்சியில் உள்ளனர், ஸ்டாலின் கூட நம் கட்சியில் உள்ளார் என இராஜபாளையம் அதிமுக பொதுக் கூட்டத்தில் கே.டி. ராஜேந்திர பாலாஜி நகைச்சுவையாக பேசினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூர் முத்துசாமிபுரத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குருசாமி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் […]
Category: கீழக்கரை செய்திகள்
மதுரை சேர்மதாய் வாசன் கல்லூரியில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..
மதுரை பெரியார் நகர் சேர்மதாய் வாசன் கல்லூரியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளிடம் குழந்தை புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோயியல் துறை தலைவர் Dr. ராஜ சேகர், குழந்தைகள் புற்றுநோய் மண்டல இயக்குநர் (Cankids) லலிதா மணி, சேர்மத்தாய் வாசன் கல்லூரி முதல்வர் கவிதா மற்றும் கல்லூரி இணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் கலந்து […]
1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா; அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்..
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து நூறு மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக் குடியிருப்பு, ஏனாபுரம், […]
மாநில சிலம்பம் போட்டி; முத்து நாயகி சிலம்பம் அணி சாம்பியன் பட்டம் வென்றது..
பரவையில் மாநில சிலம்பம் போட்டி; சாம்பியன் பட்டம் பெற்ற முத்துநாயகி சிலம்பம் அணி.. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை கற்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எஸ் கே.எம் உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து நடத்தும் நான்காம் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு சிவகங்கை ராஜ்குமார் மகேஸ் துரை தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் ராமு, வழக்கறிஞர் படேல் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். மாவட்ட விளையாட்டு துறை […]
தென்காசி மாவட்ட காவல் செய்திகளின் தொகுப்பு..
தென்காசி மாவட்ட காவல் செய்திகள்.. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.. செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனத்துறை சோதனை சாவடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆலங்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் தங்கராஜ்(59) மீது சார்பு ஆய்வாளர் இளவரசி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2600 மதிப்பிலான 63 லாட்டரி சீட்டுகள் […]
தென்காசி அருகே தங்கச் செயினை பறித்து சென்ற இருவர் கைது; மாவட்ட எஸ்.பி அதிரடி..
மேலகரம் பகுதியில் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை.. தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் பஞ்சாயத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவர், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி கைது செய்யப்பட்டனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலகரம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வரும் புவனேஸ்வரி என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது 25.02.24 காலை […]
கீழக்கரை பள்ளியில் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனபோகார சங்கம் சார்பில் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோரை போற்றி வணங்கும் விழா பொதுச் செயலாளர் நாகு என்ற நாகராஜன் தலைமையில் பள்ளியின் தாளாளர் கார்த்திக் மற்றும் கல்வி கமிட்டி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பிள்ளையின் மீது வைத்திருக்கும் அன்பையும் பிள்ளைகள் பெற்றோர்களின் அன்பை உணர்ந்து அவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிள்ளைகள் […]
தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவருக்கு குதிரை பரிசளிப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பல்லபச்சேரியில் ஊராட்சி மன்றத்தில் கிராமங்களில் அடிப்படை தேவைகளை சிறப்பாக பணிகளை செய்ததர்க்கு ஒன்பது விருதுகளை தாதனேந்தல் ஊராட்சிக்கு பெற்றுத் தந்த ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரனை பாராட்டி கௌரவிக்கும் விதமாக அனைத்து கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 2.50 லட்சம் மதிப்புள்ள குதிரை ஒன்றை வாங்கி ஊராட்சித் தலைவருக்கு வழங்கினர். சுற்றியுள்ள கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இவ்விழாவை தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளான கபடி போட்டிகள் […]
கீழக்கரையில் பி ஹியூமன் நடத்திய இரத்ததான முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் பி ஹியூமன் மற்றும் கிரசண்ட் இரத்த வங்கி மற்றும் விம் பெண்கள் அமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சகினா பேகம் கலந்து கொண்டார். பி ஹியூமன் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களால் துவங்கப்பட்டு கிடைக்கும் நேரங்களில் பொதுமக்களுக்கு சேவை பணிகளை செய்து வருகின்றனர். இளைஞர்களின் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை […]
தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு..
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு.. தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலரை நேரில் அழைத்து நெல்லை காவல் ஆணையர் பாராட்டினார். தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13-02-2024 முதல் 17-02-2024 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் முதல் நிலை காவலர் 1515 […]
நெல்லையில் “கலைஞர் கண்ட தமிழ்நாடு” சிறப்பு சொற் பொழிவு; நினைவுப் பரிசு வழங்கல்…
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரும் தமிழும் – கலைஞர் கண்ட தமிழ்நாடு சிறப்பு சொற்பொழிவு; நினைவுப்பரிசு வழங்கல் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 32வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரும் தமிழும்’ எனும் தலைப்பில் சுப்புலட்சுமியும், ‘கலைஞர் கண்ட தமிழ்நாடு’ எனும் தலைப்பில் […]
கடையநல்லூர் பகுதியில் ஜெயலலிதா 76வது பிறந்த தினவிழா; அதிமுகவினர் உறுதி மொழி ஏற்பு..
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே இந்நாளின் நோக்கம்; ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் உறுதி ஏற்பு.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே நோக்கம் என்பதை மொழிந்து ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. கடையநல்லூர் நகர அதிமுக 1-வது வார்டு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா குமந்தாபுரம் பகுதியில் கொடியேற்றத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா..
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி […]
கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு..
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு.. மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக […]
3 லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு..
மூன்று லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு.. இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மதுரையின் பரபரப்பான பகுதி. அங்கு கார் ஒன்று வருகிறது. அதன் வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போல செல்கிறார்கள் சிலர். அதிலிருந்து இறங்கும் ஒரு நபர் காரில் அடுக்கி வைத்திருக்கும் உணவு டப்பாக்களை கொடுக்கிறார். வாஞ்சையோடும் கண்களில் நன்றியோடும் பசி தீர்ந்த மகிழ்வோடும் வாங்கி செல்கிறார்கள் அந்த மக்கள். உணவைக் கொடுத்த அந்த நபர் […]
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலி பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்..
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலியாக பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி பங்களா. இங்கு செல்லையா மகன் மூர்த்தி என்ற பங்களா C.மூர்த்தி என்பவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நிலத்தை வாங்கி விற்கும் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் […]
பரவை பேரூராட்சியில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி..
பரவை பேரூராட்சியில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி.. மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சமுதாய கூடத்தில் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் பெட்கிராட் இணைந்து பெண்களுக்கு சணல் பைகள் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். பரவை பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து […]
வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை வசதிகள் துவக்கம்..
திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டியில் செயல்படும் வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய அதிநவீன லேசர் இயந்திரம் மூலம் 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை […]
மாநில அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..
திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளில் விருதுகளை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்; டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு.. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய நிர்வாக இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் பரிசுகளை வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், கல்லூரி முதல்வர் […]
நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; அரசாணை வெளியீடு..
நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் […]