தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூன்றாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 131 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 27.02.2024 அன்று நடைபெற்ற மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூன்றாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த […]
Category: கீழக்கரை செய்திகள்
தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்; பிரதமர் மோடி புகழராம்..
தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்; பிரதமர் மோடி புகழராம்.. தமிழகத்தில் எம்ஜிஆர் தந்த நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்தால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப் பார்க்கிறார்கள் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் . மதுரை கருப்பாயூரணி டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில், குறுந் தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டை, அவர் துவங்கி வைத்து பேசியதாவது, தமிழகத்தில் எம்ஜிஆர் […]
ரயில் விபத்தை தடுத்த வீர தம்பதியருக்கு வெகுமதி; தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்..
தென்காசி மாவட்ட தம்பதியரின் வீரதீர செயலை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அத்தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வெகுமதியாக தலைமை செயலகத்தில் வைத்து வழங்கினார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் 25-2-2024 அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை-கொல்லம் இரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்ததை தொடர்ந்து, செங்கோட்டை பகுதியிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த இரயிலை அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினர் […]
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு கருப்பு கொடி மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்திய காங்கிரஸார்..
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு கருப்பு கொடியுடன் மாலை அணிவித்து 5வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர் காங்கிரஸார்.. மதுரையில் “கோபேக் மோடி ” கோஷத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலுக்கு 5ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனத்துடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கூறிவந்த நிலையில் […]
முதலியார்பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்..
முதலியார் பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம். முதலியார் பட்டியில் சிறிய வணிக நிறுவனங்களில் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருவதை கண்டித்து தென் பொதிகை வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டியில் உள்ள புரோட்டா கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கடையம், பொட்டல் புதூர், ஆழ்வார் குறிச்சி பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வு என்ற பெயரில் சிறிய வியாபாரிகளுக்கும், பெட்டிக் […]
உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா மையம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கல்..
முதல் தலைமுறையாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை.. ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாக உயர் கல்வி கற்கும் 38 மாணவர்களுக்கு பிப்.25 அன்று கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈஷாவின் கல்வி உதவித் தொகையின் மூலம் கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஈஷாவில் சந்நியாசியாக இருக்கும் மா சந்திரஹாசா, ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியின் […]
மதுரையில் இணை இயக்குநர் பணியிடம்; தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை..
மதுரையில் இணை இயக்குநர் பணியிடம்: தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை.. மதுரையில், தொழில்நுட்ப கல்விக்கு என இணை இயக்குநரை அரசு நியமிக்க வேண்டும், பயிற்று மையங்களுக்கு இடைவெளி வேண்டும், மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.தட்டச்சு தேர்வுக்கு அடிப்படை கல்வி ஆறாம் வகுப்பை வைக்க வேண்டும், 2025 தட்டச்சு தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரவேண்டும், நிரந்தரமான தேர்வு மையங்களை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் நடைபெற்ற […]
மதுரை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் கைது..
டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்து மதுரை வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் கைது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் SKM (NP) அமைப்பின் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதை கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நிரந்தர சட்டம் கொண்டு வரவும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிடவும், கடன் முழுவையும் தள்ளுபடி செய்திடவும் […]
சிவகங்கையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ; திமுகவினர் தெரு முனைப் பிரச்சாரம்
சிவகங்கையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ; திமுகவினர் தெரு முனைப் பிரச்சாரம்.. சிவகங்கை நகர் திமுக சார்பில் நகர் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில், இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற அடிப்படையில் வீதி வீதியாக சென்று திமுகவினர் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர். தமிழக முதல்வரின் கட்டளை படி, கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அறிவுறுத்தலின் படி, சிவகங்கை நகர திமுக சார்பில் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான துரை ஆனந்த் தலைமையில், […]
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் ஆனைய்குடி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது, இதில் திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம்.கே.அமர்லால் தெரிவித்ததாவது, விவாசாயிகளிடம் பருத்தியில் தாக்கும் வாடல்நோய்களின் பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும் என்றும்நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும் என்றும் வளர்ந்த செடியில் நோய் தொற்றினால் அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறி பின் வாடி உதிர்ந்து விடும் என்றும் தண்டின் அடிப்பகுதி […]
இரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தம்பதிகளை பாராட்டி ஐந்து லட்சம் வெகுமதி; தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு..
இரயில் விபத்தை தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்ட தம்பதிகளை பாராட்டி வெகுமதி; தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு.. இரயில் விபத்து ஏற்படாமல் தடுத்தி நிறுத்திய தென்காசி மாவட்டம், புளியரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், எஸ்-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில் 25.02.2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை […]
கீழக்கரையில் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் !
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தமாக உணவு கடைகள் பேக்கரிகள் ஹோட்டல் பெட்டிக்கடைகள் மளிகை கடைகள் ஆகியோர்க்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வியாபாரத்தின் அளவுகள் பற்றியும் வாடிக்கை யாளர்களின் அணுகுமுறை பற்றியும் பொருட்களின் […]
இராமநாதபுரம் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விற்பனைக்குழு விபரம் ! விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள் !!
இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராஜசிங்கமங்கலம், மற்றும் திருவாடானை ஆகிய ஆறு (6) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளின் விளை பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வாயில் முறையில் (Farm Gate) நேரடியாக வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் விளைவித்த விளைபொருளின் தரநிர்ணயம் ஆனது ஒழுங்குமுறை விற்பனைக்கூட தரம்பிரிப்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பகுப்பாய்வு செய்து அதனை e-NAM திட்ட […]
கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வி திறன் போட்டி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் வாரந்தோறும் வினாடி வினா போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தாளாளர் கார்த்திக் தலைமையில் முதல்வர் சுரேஸ் கண்ணன் முன்னிலையில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி ஒன்றிய துணைத் தலைவர் சிவலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் சுந்தரபாண்டி […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் !
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000க்கு மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் : 10 மாதங்களுக்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 3 […]
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. மதுரை கோட்டத்தில் இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடுக்கல் நாட்டப்படும் விழா நடந்தது. இதில் சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும் ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் சுமார் 49 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கான காணொளி நிகழ்ச்சி விழா சோழவந்தான் […]
மதுரை அருகே அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; போலீசார் தடியடி..
அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; மதுரை அருகே பரபரப்பு.. கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலம் மதுரை, சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து சிந்தாமணி திரும்பும் போது அரசு பேருந்து மீது திடீரென கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சொட்ட தட்டி சென்ற சென்ற 47 எண் கொண்ட அரசு பேருந்து மதுரை சிந்தாமணி அருகே சென்ற போது ராமர் பாண்டியன் […]
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (26.02.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் […]
சமயநல்லூர் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..
சமயநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; ஆர்பி உதயகுமார் சிறப்புரை.. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சமயநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் […]
ரயில்வே துறையில் புது யுக்தியை கண்டுபிடித்து அசத்திய மாணவன்..
ரயில் பெட்டியில், மேலடுக்கில் முதியோர் படுக்கை இருக்கைக்கு செல்ல அறிவியல் கண்காட்சியில் புது யுக்தியை கண்டுபிடித்த மாணவன்.. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற்ற 38 மாவட்டங்களிலிருந்து வந்த 64 மாணவர்களின் அறிவியல் கண்காட்சி. (சிறந்து விளங்கிய 8 மாணவர்களை தேர்வு செய்து , தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க தேர்வு – இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களாவர்) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி […]