என் மனம் கொண்டான் மற்றும் கோரவள்ளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரவள்ளி மற்றும் என் மனம் கொண்டான் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை என்ற திட்டத்தினை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இம்முகாம்  வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா வரவேற்புரை வழங்கினார். உழவரைத் தேடி வேளாண்மை என்ற பெயருக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அந்தந்த கிராமங்களில் மாதத்தின் இரண்டாம் […]

வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய 7 பேர்கள் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு..

தென்காசி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் பதவி உயர்வுடன் துணை வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, தென்காசியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருக்மணி கோசலை ராணி வீரகேரளம் […]

திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்.!

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் […]

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ‘பனிச்சகுடி’ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு கருப்பன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவிழாவை ஒட்டி பரபரப்பு நிலவி வருகிறது. கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு […]

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும் நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் முகூர்த்த நாளான இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!

பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..! மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் […]

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!!

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..!     ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென […]

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் […]

போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…

‘போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்… ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி தாலுகா பெருநாழியில் செயல்பட்டு வரும் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கம் (பதிவு எண் – 137/2021) கல்விச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இன்று (மே 24, 2025) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய தலைவராக K. பாலமுருகன், செயலாளராக P. முத்துக்குமார், மற்றும் பொருளாளராக A. ஜெகதீஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி […]

நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி:5 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அண்ணாமலைநகரில், மணிமுத்து (65) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இன்று காலை தனது ஆடுகளைக் கொட்டகையில் கட்டிவிட்டு வெளியே சென்றிருந்த மணிமுத்து திரும்பி வந்து பார்த்தபோது, நாய்கள் ஆடுகளைக் கடித்து குதறியதைக் கண்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டியடித்ததால் நாய்கள் ஓடிவிட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு ஆர்.எஸ். மங்கலம் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பகுதியில் […]

ஆர். எஸ். மங்கலம் ஜமாபந்தி: தாமதமாக வந்த அதிகாரியால் மக்கள் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளான இன்று, வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி நடந்து வரும் நிலையில், இறுதி நாளான இன்று அவர் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தங்கள் மனுக்களை அளிப்பதற்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த தாமதம் அப்பகுதியில் சலசலப்பை […]

திருவாடானையில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் உத்தரவின் பேரில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் […]

பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து […]

ஆலங்குளத்தில் தொழிலாளர் சிறப்பு முகாம்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் 20.05.2025 செவ்வாய்க் கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார்.   இது பற்றிய செய்திக் குறிப்பில் திருநெல்வேலி தொழிலாளர் நலத் துறை, தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் […]

ராமநாதபுரம் போலீசாரின் தரமான சம்பவம்.!

பூட்டிய வீட்டை உடைத்து தடையமின்றி தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளையன்.! ஊரு விட்டு ஊரு மாநிலம் வீட்டு மாநிலம் தேடி சென்று கைது செய்த போலீசாரின் தரமான சம்பவம்.!! ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அமிர்தா நகரில் தனது கணவர் அரபு நாட்டில் வேலை செய்வதால், தனது மகனுடன் ‘லோக அம்பாள்’ என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 12.04.2025-ம் தேதி இரவு 09.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டில் இருவரும் […]

மோர் பண்ணை கிராமத்தில் 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

ஆர்எஸ் மங்கலம் அடுத்த மோர் பண்ணை கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா மோர் பண்ணை மீனவ கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் […]

ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியை தாக்கிய ஆறு பேர் கொண்ட கும்பல்.!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய வீட்டு ஒன்றை கட்டியுள்ளார். புதிய வீட்டை முரளி ஜெகன் பெரியப்பா ராமச்சந்திரன் அபகரிக்க முயற்சிப்பதாக முரளி ஜெகனின் தாய் […]

அதிகாரிகளின் அலட்சியம்.! நீதிமன்றத்தில் போராடி வெற்றி .!!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலாகும் நாட்டுப் படகு கரைவலை மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கடற்கரையை ஒட்டிய சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை அந்தப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் சிலர் ஆக்கிரமித்து தோப்பு வைத்து அதன் பின்னர் அந்த வழியே மீனைப் பிடித்து கரைக்கு கொண்டு செல்லும் மீனவர்களுக்கு அதிக […]

தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம், புளியங்குடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி அங்காடி மற்றும் வாசுதேவ நல்லூரில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட […]

மாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடத்தப்பட்ட பாய்மர படகு போட்டி..!

கடலில் படகுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு வகை பந்தயப் போட்டியான இப்போட்டியில், பாய்மரங்களின் உதவியுடன் படகுகளை இயக்கி, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வீரர்கள் போட்டியிடுவர். இப்போட்டி பல இடங்களில், குறிப்பாக மீனவ கிராமங்களில் கோயில் திருவிழாக்கள், ஆடி பொங்கல் போன்ற விழாக்களின் போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் 24 படகுகள் கலந்து கொண்டன. ஒரு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!