தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஐந்து […]
Category: கீழக்கரை செய்திகள்
தென் மாவட்ட பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிக்கையில், தெற்கு இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. (23.11.2025) இன்று மாலை அல்லது இரவு முதல் மீண்டும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும். வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலூர், நாகை, மயிலாடுதுறை, இராமநாதபுரம்,, தூத்துக்குடி, […]
அரசு பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு..
தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22.11.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானி (முன்னாள் மாணவி 1974-1981) நிகர்ஷாஜி ரூ. 24 இலட்சம் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் 2 கூடுதல் வகுப்பறை […]
SIR: தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் முக்கிய தகவல்..
தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் SIR-படிவம் தொடர்பாக முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர். பொது (தேர்தல்) அறிவுரையின் படியும், தென்காசி மாவட்டத்தில், 01.01.2026 ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு […]
மாநில அளவிலான எரி பந்து போட்டிக்கு கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தகுதி பெற்றது..
இன்று (11/11/2025) நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்ட அளவிலான எரிபந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான போட்டியில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தைப் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தவ்ஹீத் ஜமாத் சார்பில் S.I.R விழிப்புணர்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் சார்பாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள தீவிர வாக்காளர் திருத்த நடைமுறைகள் SIR குறித்த கருத்தரங்க கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஸலாம் தலைமையில் கடையநல்லூர் தவ்ஹீத் நகர் மர்கஸ் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் SIR-ன் நடைமுறைகள் குறித்தும் அதில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பின்வருமாறு எடுத்துரைத்தார். SIR படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருந்து […]
கீழக்கரை அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இலவச இயன்முறை மருத்துவ முகாம்..
சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இலவச இயன்முறை மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவடைந்தது. கடந்த மூன்று நாட்களாக (நவம்பர் 2,3 மற்றும் 4 ம் தேதிகளில்) நடைபெற்ற இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாம் சிறப்பாக நடைபெற இடம் வழங்கி ஆதரவு அளித்த வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும், அத்துடன் ஊடக மற்றும் பத்திரிக்கைத் துறை நண்பர்களின் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த […]
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
ஜித்து எனும் ஆண் காட்டு யானை உயிரிழப்பு..
கோவை வனக்கோட்டம் மேட்டுப் பாளையம் வனசரகத்தில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஜித்து என்னும் பேர் கொண்ட ஆண் காட்டு யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி யானை இறந்த பகுதிக்கு விலங்குகள் உடற் கூறாய்வு மருத்துவ குழு வந்தடைந்தது. தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் கவனத்தை எதிர் நோக்கி பொது மக்கள்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 […]
“அன்பு” எனும் கரங்கள் தந்து அரவணைத்த முதல்வருக்கு மனதார நன்றி..
தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகள் 18-வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2025 அன்று அன்புக் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற […]
தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரம்..
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். 12.10.2025 இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை, […]
உலக முதியோர் தினம் குறித்து கவிஞர் பேரா..
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட முதியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் பே. இராஜேந்திரன் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், “முதியோர்களை மதிப்பதும், அவர்களைக் காப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்த ஐக்கிய நாட்டு சபை 1990- ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் நாளை உலக முதியோர் நாளாக அறிவித்தது. அதன்படி 1991-ஆம் ஆண்டு முதல் அக்டோபர்-1 உலக முதியோர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதியோர்களின் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்து மதித்தல் இளைய சமுதாயத்தினருக்கு […]
வாகன விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு..
தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 22.09.25 அன்று இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி விபத்து ஏற்படுத்தியதில் விபத்தில் காயம் அடைந்த நபர் மரணம் அடைந்தார். இது குறித்து தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டதில் […]
தென்காசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]
மணிமுத்தாறு வன பகுதியில் விதைப் பந்து வீசும் பணி…
மணிமுத்தாறு மலை அடிவார பகுதியில் பசுமையை பாதுகாக்கும் விதமாக 9-வது போலீஸ் பட்டாலியன் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து 50,000 விதைப் பந்துகள் விதைக்கும் பசுமை பணி நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த ஒரு லட்சம் விதைப் பந்துகளில் பாதியான 50,000 பந்துகளை மாணவிகள், மணிமுத்தாறு மலைப்பகுதி வனத்திற்கு நேரடியாக சென்று அர்ப்பணித்தனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் இந்த பசுமை நிகழ்விற்கு மணிமுத்தாறு 9-வது போலீஸ் […]
மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 475 மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை […]
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழி முறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், […]
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; பரிசு மற்றும் சான்று வழங்கல்..
தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (18.09.2025) இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி […]
40வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 40-வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு.செல்வ பாலா ஆகியோர் தலைமையில், கண் மருத்துவர் ராஜலட்சுமி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மூத்த கண் மருத்துவர் மரு.ராஜலட்சுமி, மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் […]
You must be logged in to post a comment.