கடையில் பணம் திருடிய நபர் அதிரடி கைது..

புளியங்குடி பகுதியில் கடையில் இருந்து பணம் திருடிய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள ஓர் கடையில் கடந்த 16.08.2025 அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் மற்றும் சார்பு […]

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.08.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது […]

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக சுதந்திர தின நிகழ்வு..

வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை – நாசா வின் சார்பாக இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 8 மணியளவில் கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள நாசா அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ அன்புடன் வாழ வேண்டும், பிரிவினைவாத கருத்துக்கு […]

மாற்றுத்திறன் படைத்தோரை மகிழ்வித்த வனத்துறை..

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அருவியில் குளிக்க செய்து மகிழ்வித்த தென்காசி மாவட்ட வனத்துறையை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் பொதிகை மலையின் வனப் பகுதிகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்கும் குற்றால அருவிகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அருவிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குளிப்பதற்கு வந்திருந்தனர்.   இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் […]

ம.சு.பல்கலை கழக விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெறாத மாணவி..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்து துணை வேந்தரிடம் மாணவி பட்டம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650-க்கும் மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்நிலையில் ஜீன் […]

புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு..

தென்காசி மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் பொறுப் பேற்று கொண்டார். முன்னதாக தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த லாவண்யா அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்காசி புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தென்காசி உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் 11.08.2025 அன்று பொறுப் பேற்றுக் கொண்டார். புதிய கோட்டாட்சியருக்கு அரசு அலுவலர்கள் […]

குற்றாலத்தில் இரவில் குளிக்க பணம் வசூல்?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே பொது மக்களை குளிக்க அனுமதித்து வரும் நிலையில், இரவு 8.00 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வனத் துறையினர் குளிக்க அனுமதித்து வருவதாக பொது மக்களிடயே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத் துறையினர் […]

திமுக சார்பில் கல்வி உதவித் தொகை..

தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவியை பாராட்டி திமுக சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இலத்தூரில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர், +2 பொதுத் தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சீவநல்லூர் மாணவி கார்த்திகா உயர் கல்வி படிப்பதற்கான முதலாம் ஆண்டு செலவை […]

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு சிறை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததோடு நகராட்சி ஊழியரை மிரட்டிய இரண்டு பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைத்தெரு தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் அதற்குரிய பணத்தையும் கட்டாமல் நகராட்சி தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம்..

இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்வுக்கு […]

ஆர்எஸ்எஸ்-ன் ஊது குழலாக தமிழக ஆளுநர் செயல்படுவதா?

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்-ன் ஊது குழலாக செயல்படுவதாகவும், தமிழகத்தின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் முடக்கி வருவதாகவும் கூறி ஆளுநருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை முடக்குகின்ற வகையில் நாள்தோறும் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்-ன் நச்சுக் […]

போக்குவரத்து மாற்றம் பற்றிய காவல்துறை அறிவிப்பு..

சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழாவை (07.08.2025) முன்னிட்டு போக்கு வரத்தில் பின்வருமாறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.   1. திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் ராஜபாளையம், மதுரை செல்லும் வழி: திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் சண்முக நல்லூர் விலக்கு வழியாக சின்ன கோவிலான் குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக் குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கை மேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன் கோவில், ரயில்வே பீடர் ரோடு, TB junction […]

5 லட்சம் விதை பந்துகள்; பள்ளி மாணாக்கர்கள் சாதனை..

நெல்லையில் ஒரே நாளில் பள்ளி மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து ஐந்து லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கியது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளம் பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் சிபிஎஸ்இ, பள்ளிகள் மற்றும் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று கூடி ஐந்து லட்சம் விதைப் பந்துகள் ஆர்வத்துடன் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் நடந்த விதைப் பந்து தயாரிப்பு பணியின் போது மண், தண்ணீர், மர விதை […]

கல் குவாரியை தடை செய்க! கையெழுத்திட்டு பொது மக்கள் போராட்டம்!

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி பொது மக்கள் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகா மேலக்கலங்கல் பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடினமான பாறைகள் வெடி வைத்து உடைத்து எடுக்கப்படுகிறது. அப்போது இப்பகுதியில் உள்ள வீடுகள் நில நடுக்கம் ஏற்படுவது போன்று நடுங்குவதாகவும், வீட்டு சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்   மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம […]

துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி.!

  துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் வழமையாக காலை 12:10 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றங்களின் அடிப்படையில் இந்த விமானத்தின் புறப்பாட்டு நேரம் முதலில் மாலை 5:10 ஆக மாற்றப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மாலை 6:10 ஆக மாற்றப்பட்டதற்கும் தொடர்ச்சியான நேர மாற்றங்களுக்கும் விமான பயணிகள் கடும் வேதனையை எதிர்கொண்டு வருகின்றனர்.   தொடர்ச்சியாக எந்த […]

ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு .!

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை அறிமுக கூட்டம் நடைபெற்றது புதிய தலைவராக நந்திகா செயலாளராக ஆசிபா  பொருளாளராக ஹாசினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திர கலந்துகொண்டு மாணவிகளிடையே தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி உதவி […]

கீழே கிடந்துள்ள தங்கச் செயின்; உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை மிக்க காவலர்..

தென்காசி மாவட்டத்தில் தவறவிட்ட தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் சுடலை கண்ணு, பணி நிமித்தமாக தென்காசி வந்துவிட்டு மீண்டும் வாசுதேவ நல்லூர் செல்லும் வேளையில், தென்காசியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற போது அங்கு கீழே தங்க செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த தலைமைக் காவலர், செயின் உரிமையாளர் இங்கே வந்தால் எனது […]

ராமநாதபுரத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு.!

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாம்பூரணி வடக்கரை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தட்சணாமூர்த்தியின் மனைவி கீதா என்பவர், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக தனது கருப்பை அகற்ற நேர்ந்துள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டிய மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தற்போது ஒரு குழந்தையின் தாயான கீதா, இரண்டாவது குழந்தை […]

கமுதி பேரூராட்சியில் தூய்மை பணிகள் பாதிப்பு.!

கமுதி பேரூராட்சியில் சாதி வேறுபாடுகள் காரணமாக தூய்மை பணிகள் பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாக்கு உட்பட்ட கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பணியிடங்களில் சாதி வேறுபாடுகள் நடைபெறுவதால் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்று வழங்கினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 தூய்மை பணியாளர்கள் கமுதி பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடன் பணியாற்றும் குருதாம், ராமமூர்த்தி, மாரி, விஜயராகவன், […]

வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு.!

வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் 20 ஆண்டுகளாக பட்டா கோரி போராடுகின்றனர்: மாவட்ட ஆட்சியரிடம் மனு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள வேதாளை பஞ்சாயத்தின் கீழ் functioning அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் பட்டியல்வகுப்பு மக்களுக்கு நில உரிமை (பட்டா) கிடைக்காமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டா கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கியும், எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!