இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) […]
Category: கீழக்கரை செய்திகள்
மங்கலங்குடி கிராமத்திற்கு அடிப்படை தேவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாக்கு உட்பட்ட மங்களக்குடி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர் நியமித்தல் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தல் பள்ளிகளில் வகுப்பறைகளை பராமரித்தல் துணை மின் நிலையம் அமைத்தல் உட்பட அடிப்படை தேவை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பாக கிளைத் தலைவர் முகவை அப்பாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினார். […]
தமிழியக்கம் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பகத்சிங் மணிமண்டபத்தில் கே.எம்.எஸ். சிந்தனைச் சோலை கூட்ட அரங்கில் தமிழியக்கம் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் லண்டன் முருகேசன் பிள்ளை தலைமையில் நடந்தது. சிந்தனைச் சோலை நிறுவுநர் பாரதி புகழ் வாணன் தெய்வசிகாமணி வரவேற்றார். தமிழியக்கம் பொது செயலாளர் அப்துல்காதர், செயலாளர் சுகுமாறன், அமைப்பு செயலாளர் வணங்காமுடி, இணை அமைப்பு செயலாளர் சிதம்பர பாரதி, மண்டல செயலாளர் கார்த்திகேயன் நோக்கம் செயல்பாடுகள் பற்றி பேசினர். மணிபாரதி தொகுத்து வழங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இலங்கை வாலிபர் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மண்டியிட்டு தர்ணா.. வீடியோ..
இராமநாதபுரம் : தன்னை தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லையேல் உரிய அடையாள அட்டை வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இலங்கை வாலிபர் மண்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இலங்கையில் கடந்த 1983 ல் ஏற்பட்ட உள் நாட்டு போர் காரணமாக 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் (30) தனது 9 வயதில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடி வந்தார். இதையடுத்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு […]
சுற்றுச்சூழலுக்கு எதிரான கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்க! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..
டங்ஸ்டன் கனிம சுரங்கம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது எனவும், மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! என்றும் மக்களவையில் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் கனிமொழி எம்.பி பேசியதாவது: “தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் […]
கடை வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் :வணிக நிறுவனங்கள் செலுத்தும் கடை வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், உள்ளாட்சி சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு 10.10.2024 முதல் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உள்ளாட்சிகளுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரியை கடைகளுக்கு 100% வரை 2022-2023 காலத்தில் உயர்த்திய தமிழக அரசு தற்பொழுது ஆண்டுக்கு ஆண்டு 6% உயர்த்தி உள்ளது, தாமதமாக செலுத்தும் சொத்து வரி மீது ஒவ்வொரு […]
வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலர்களுடன் ஆலோசனை..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஓரிரு தினங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுசுகாதாரம், நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட […]
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..
சாம்பவர் வடகரை பகுதியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு 05 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் சாம்பவர் வடகரை மூக்கன் என்பவரின் மகன் மாடசாமி @ சங்கிலி மாடன் (48) என்பவரை சாம்பவர் வடகரை காவல் […]
இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா..
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அக்காள்மடம் தொடக்கப்பள்ளி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகாகவி பாரதி பிறந்த தின விழா இன்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை பெட்ரீசியா தலைமை வகித்தார். ஆசிரியை அமுதா வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் வாழ்த்துரை வழங்கினார். பாரதியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து வினாக்கள் கேட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் பாரதி முகமூடி அணிந்து இருந்தனர். இனிப்பு வழங்கப்பட்டது. இல்லம் தேடிக் […]
திருப்புல்லாணி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.18 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகள்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் ரெகுநாதபுரம் ஊராட்சி கிராம மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 180 முன் மனுக்கள் மீது அரசின் பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கை எடுத்து 146 பயனாளிகளுக்கு ரூ1.18 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன். வட்டாட்சியர் ஜமால் […]
பாம்பன் கடலில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்..
இராமநாதபுரம் : இராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடை, 18 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் இன்று காலை கரை ஒதுங்கியது. இதனை வனத்துறையினர் கைப்பற்றி உடற்சுறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைக்க ஏற்பாடு செய்தனர். இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடற் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடலவாழ் […]
துவக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி : ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் துவக்கப் பள்ளியில் ரூ.29 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.
அங்கன்வாடி மைய குழந்தைகளின் தகவல்கள்: ராமநாதபுரம் ஆட்சியர் சரிபார்ப்பு..
இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங் களூர் அங்கன்வாடி மைய பதிவேடுகளில் உள்ள தகவல் படி குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து சரி பார்த்தார். எடை குறைவான குழந்தைகள் மீது சிறப்பு கவனம் எடுத்து உரிய ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன் தாய்மார்களுக்கு தக்க அறிவுரை அடிக்கடி வழங்கி குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க அங்கன்வாடி பணியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி […]
பேவர் பிளாக் சாலையின் தரம் ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சியில் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து சாலையின் இரு புறத்தையும் பலப்படுத்தி நன்கு அமைக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.
ராமநாதபுரத்தில் டிச.13ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் :மாவட்ட ஆட்சியர் தகவல்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது: தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை நாடும் இளையோர் பயன்பெறும் பொருட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு […]
இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்…
இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சாரபாக விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் உலகில் மனித நேயம் தழைத்தோங்கவும், மனித நேயம் காக்கப்படவும், மனித குலத்தின் மாண்புகள் உயரவும், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயர்ந்த சிந்தனை அனைவரின் மனதிலும் […]
இராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளில் இலவச டியூஷன் சென்டர்கள் திறப்பு…
இராமநாதபுரம் : அமிர்தா குழுமமானது கல்வி மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மாதா அமிர்தானந்தமயி ஆசியுடன் இராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் உயர் நோக்கில் இராமநாதபுரம்) அருகே ஆர்.எஸ். மடை, எம்.கே.நகர், இராமேஸ்வரம் , ஜெ.ஜெ.நகர் ஆகிய இடங்களில் அமிர்தா ரைட் இலவச டியூஷன் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக திகழ்கிறது. பெற்றோரின் வேண்டுதலுக்கு இணங்க வழுதூர், வேதாளை ஆகிய இடங்களிலும் இலவச டியூஷன் […]
தனுஷ்கோடி ஆற்றில் மீன்பிடி உரிமம்: சமரச கூட்டத்தில் உடன்பாடு..
இராமநாதபுரம் :தனுஷ்கோடி ஆற்றில் சேராங்கோட்டை கிராம மக்கள் மீன்பிடித்தல் தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி முன்னிலை வகித்தனர். தனுஷ்கோடி ஆற்றில் ஒரு சாரார் மட்டும் மீன்பிடிக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் தனி நபர் ஒருவருக்கு முறைகேடாக வழங்கிய உள் குத்தகை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நகர் செயலாளர் ஹபீப் முஹமது தம்பி மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும் நகர் ஆலோசகருமான நைய்னா முகம்மது ஆகியோர் தலைமையில் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை பற்றியும் செவிலியர்கள் பணிகளைப் பற்றியும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்து அவர்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் பழங்கள் வழங்கி […]
கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலனக் கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஜனாப் ஹாஜா ஜலாலுதீன் செயலாளர் ஜனாப் ஷர்ஃப்ராஸ் நவாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் புதிய தாளாளராக அந்த ஜமாத்தை சேர்ந்த வழக்கறிஞர் M.நாதியா ஹனிபா Bsc, MBA LLB தேர்வாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய கல்வி குழு மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது .இதில் […]
You must be logged in to post a comment.