நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு […]
Category: கீழக்கரை செய்திகள்
ஆதரவற்ற பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் அமைப்பினர்; பொதுமக்கள் பாராட்டு..
குற்றாலம் பகுதியில் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த ஆதரவற்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி, கவுன்சலிங் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சாலையில், ராகிணி என்ற 55வயது பெண் ஆதரவற்ற நிலையில் குற்றாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆதரவற்று இருந்த இந்த பெண்மணி மீட்கப்பட்டு குற்றாலம் கலைவாணர் […]
துபாயில் கிரீன் குளோப் மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்..
இன்று (22-12-2024) Green Globe மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், துபாயின் ஜதாஃப் பகுதியில் உள்ள Dubai Health Blood Donation Centreல் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர். Green Globe சார்பில், இரத்த தானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துபாய் ஹெல்த் மையத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாடுகளை Green Globe அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் […]
நெல்லையில் பழிக்கு பழி நடந்த கொலை; காவல்துறை விசாரணையில் தகவல்..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திருநெல்வேலி மாநகரம் பாளையங் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு 20.12.2024 ஆம் தேதி […]
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான […]
கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம்… காரசாரமான விவாதம்… உறுப்பினர்கள் அடுக்கடுக்கான கேள்விகள்..வீடியோ..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பாக 21 வது வார்டு உறுப்பினர் சேக் உசைன் எழுந்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பதற்கு முன் தகவல் பலகையில் பதிவது இல்லை என்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்றும் நகர்மன்றத்தில் மாதமாதம் வைக்க கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை […]
தென்காசியில் புதிய இ-சேவை மையம் திறப்பு..
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய கட்டிடத்தில், தமிழ்நாடு அரசின் புதிய இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தினை 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் புதிய இ-சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தில், சாதிச் சான்றிதழ், […]
திமோர் நாட்டிற்கு தமிழக மாணவ மாணவியர் கல்விப்பயணம்..
திமோர் நாட்டில் மருத்துவம் படிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கல்விப் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிறப்பாக மருத்துவ கல்வி பயின்று முழுமையான மருத்துவராக தாயகம் திரும்பி மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டுமென பீஸ் மருத்துவப் பல்கலைக்கழக இயக்குனர் ஐசக் பாஸ்கர், சமூக நல ஆர்வலர் திருமாறன், தினமலர் தினேஷ் ஆகியோர் மாணவ மாணவியரிடம் அறிவுறுத்தினர். நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் உருவாகும் உன்னத நோக்கத்துடன் தமிழக மாணவ […]
90 ஆடுகள் உயிரிழந்த பெரும் சோகம்; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரின் தோப்பில், கம்பிளி பகுதியை சேர்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சேர்ந்த குத்தால ராமன் ஆகிய இருவரும் ஆட்டு பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு […]
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தென்காசி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் சாதனை..
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி […]
சம வேலைக்கு சம ஊதியம் : ரேஷன் கடை பணியாளர்கள் தீர்மானம்..
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநிலச்செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வர வேற்றார். மாவட்டத்தலைவர் தினகரன் தலைமையில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, ஆர் எஸ் மங்கலம், நயினார்கோவில், வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை, சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், உணவுப் […]
தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : இலங்கை அதிபரிடம், பிரதமர் மோடி வலியுறுத்தக்கோரி ராமநாதபுரம் எம்பி கடிதம்
இராமநாதபுரம் : பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் கனி எம்பி கடிதம் எழுதிய கடிதத்தில்:- இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. இலங்கை அதிபர் நம் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையான […]
தேசிய மக்கள் மன்றத்தில் 999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 தீர்வுத்தொகை..
இராமநாதபுரம் : தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, A.K.மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி K.கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் C.மோகன்ராம், சார்பு நீதிபதி M. அகிலா தேவி. சார்புநீதிபதி S. பிரசாத், நீதித்துறை நடுவர் எண்-1 N.நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண்-II G.பிரபாகரன், […]
இராமநாதபுர மாவட்டத்தில் மணல் கொள்ளை தடுக்க இரவு பகலாக தீவிர சோதனை..
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப உத்தரவுபடி திருப்பாலைக்குடி காவல் சரகத்தில் தீவிர வாகன சோதனை இரவு முழுவதும் நடை பெற்றது. அப்போது தனிப்பிரிவு தலைமை காவலர் சந்திர சேகருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சார்பு ஆய்வாளர் அர்சுன கோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமை காவலர்கள், சரவணகுமார், சரவனன் முதல்நிலைகாவலர் சிக்கந்தர், காவலர்கள் செல்வகுமார், சுரேஷ் ஆகீயோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது காலை 3.45 மணி அளவில் […]
மண்டபத்தில் இலவச கண் , பொது மருத்துவ முகாம்…
இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹெல்பேஜ் இந்தியா சார்பில் இலவச கண், பொது மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி திருமண மஹாலில் இன்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜா துவக்கி வைத்தார். கவுன்சிலர் முபாரக் தலைமை வகித்தார். அக்வா அக்ரி மண்டபம் கிளை முருகேசன், பரம்பரை விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஆஸாத் முன்னிலை வகித்தனர். டாக்டர் அழகுவேல் மணி தலைமையில் பொது மருத்துவம், டாக்டர் ரம்யா தலைமையில் கண் […]
ராமேஸ்வரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு சிற்ப்பு பிரார்த்தனை..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று (13/12/2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நகர கழகச் செயலாளர் சுதாகர் ஏற்பாட்டில் டிடிவி தினகரன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஆயுஷ் ஹோம விழாவில் ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முருகன் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்… மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலை யூனியன் பஸ் ஸ்டாப் அருகில் இரு காளை மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதில் அவ்வழியாக சென்ற முதியர் சுந்தரம் மீது முட்டியதில் கால் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் சாலையில் அடிக்கடி மாடு சண்டையிட்டு கொள்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மண்டபம் மேற்கு வாடி வடக்கு கடற்பகுதியில்தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி அமைச்சரிடம் மீனவர்கள் மனு..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்குவாடி வடக்கு கடல் டி -நகர் முதல் மண்டபம் அரசு டீசல் பங்க் பழைய டி – ஜெட்டி வரை கடற்பகுதியை தங்கு தளமாக கொண்டு 300 விசைப்படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதியில் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது. இதனால் மீனவர்களுக்கு பொருளாதார செலவு ஏற்பட்டு மீனவர் பலன் மீன்பிடி தொழில் செய்ய […]
ராமநாதபுரத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்..
இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பி ஆர் பாபு தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் எம்.கபிலர், துணைத் தலைவர் ஜி.இளங்கோவன், துணைச்செயலர்கள் ராஜா, வெள்ளைச்சாமி, நகர் செயலர் கணேச மூர்த்தி முன்னிலை வகித்தனர். இதைமுன்னிட்டு ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. […]
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் 19 பேருக்கு ரூ.59.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்…
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீனவளக் கூட்டுறவு இணையம் (டாப்கோபெட்), மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு வரிவிலக்கு அளித்த டீசல் விற்பனை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை) முருகேசன் (பரமக்குடி) […]
You must be logged in to post a comment.