கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையின் அவலத்தை தீர்க்க 11/01/2025 அன்று ஜனநாயக வழி நடைபயணம்..

கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலை கடற்கரையோர முக்கிய ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.  ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமை மற்றும் சமீபத்தில் பெய்த கடும் மழையாலும் நெடுஞ்சாலை குண்டும், குளியுமாக மாறி பல விபத்துக்களுக்கு காரணமாகி வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தும் எந்த வகையான தீர்வும் கிடைக்கவில்லை. சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் […]

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை -பாரதி உலா 2024..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை 10ம் ஆண்டு பாரதி உலா 2024 நிகழ்வு கல்லூரி தாளாளர் அக்ரி. எஸ் .வெங்கடசலபதி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ரேகா ரெட்டி, உரத்த சிந்தனை பொது செயலாளர் உதயம் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பேச்சரங்கம் […]

நேர்மைமிக்க காவல் துறை டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு..

நேர்மை மிக்க காவல் துறை டி.எஸ்.பி குப்புசாமி ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர், உளவுப் பிரிவு டி.எஸ்.பி, மின்வாரிய குற்றங்கள் தடுப்பு, என பல்வேறு பதவிகள் மற்றும் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர் குப்புசாமி. மதுரை டி.எஸ்.பியாக உள்ள குப்புசாமிக்கு தீவிரவாத தடுப்பு ஏ.எஸ்.பி பதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரை உள்ள அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் வரும். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், […]

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதுமைப்பெண் திட்டத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று துவக்கி வைத்து 1,725 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விரிவாக்கத்திட்டத்தை தூத்துக்குடியில் இன்று (30/12/2024) துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக […]

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார். இத்திட்டத்தின் படி அரசு உதவி பெரும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாடு.!

ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் மீலாது நபி விழா சமய நல்லிணக்க மாநாடு அகமது இப்ராஹிம் மிஸ்பாஹி மற்றும் முகமது ஜலாலுதீன் அன்வாரி தலைமையில் வட்டார ஜமாஅத் உலமா சபைகள் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் சமுதாயம் மத நல்லிணக்கத்தையும் சமூக நல்லினத்தையும் ஒற்றுமையும் பேணி பாதுகாக்கும் மார்க்கம் என்று விளக்க உரை வழங்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை காஜி சலாவுதீன் ஜமாலி பாஜில் உமரி இந்திய யூனியன் […]

தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் மறுப்பு செய்தி..

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் மறுப்பு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும், முதல் நிலை காவலர் பிரபாகரன் என்பவர் பெயரில், கையொப்பமிடாத பணியிலிருந்து விடுவிக்க கோரும் மனுவும், தொலைக் காட்சிக்கு காணொளி வாயிலாக பேட்டி கொடுத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் பரவி வந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக M.ரமேஷ், தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு மூலம் விசாரணை மேற்கொண்டதில், […]

திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும்; கனிமொழி எம்.பி பேச்சு..

திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும் என கனிமொழி எம்.பி உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவின் போது தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அமர் சேவா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்ட விழா, கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று (28/12/2024) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். […]

கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி காலங்களில் வேலைவாய்ப்பை அடைதல் என்ற தலைப்பில் இன்போசிஸ் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐசிடி அகடமின் மேலாளர் பூர்ண பிரகாஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினார் முஹம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை […]

பெண்களின் பாதுகாப்பு திராவிட மாடல் அரசுக்கு மிக முக்கியமானது; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..

பெண்களின் பாதுகாப்பும் முன்னேற்றமும் திராவிட மாடல் அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு நன்றிகள், பாராட்டுகள். ஏனென்றால், நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகள். இவ்வாறு பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால் தான் குற்றச் செயல்கள் […]

தொடர் கன மழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா பகுதியில் தொடர் கனமழையால் நெற்கதிர்கள், நெல் பயிர்கள், கடலை பயிர்கள் என பல ஏக்கர் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இடைப்பழம் நோய் தாக்கப்பட்ட நெல் கதிர்கள் மற்றும் பயிர்களுடன் சென்று ஆட்சியரிடம் பயிர்களை காண்பித்து உரிய அரசு நிவாரணமும், காப்பீடு செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு […]

தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்..

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.12.2024 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிய விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தேவையான நலத் […]

இராமநாதபுரம் – கீழக்கரை வரை சேதமான சாலையை செப்பனிட தவ்ஹீத் ஜமாத் புகார் மனு..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (தெற்கு) இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில், மாவட்டச்செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச்செயலாளர் உஸ்மான் மற்றும் ஃபாரூக் ஆகியோர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இராமநாதபுரம் அலுவலக தலைமை அதிகாரி தினேஷிடம் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை மிகவும் சேதமடைந்த சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும் புகார் கடிதம் வழங்கினர். இச்சாலை தற்போது பெரும் பள்ளம், உடைப்பு […]

தென்காசி நகர முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..

தென்காசியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சம்சுதீன் கிராத் ஓதினார். மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில், நகர பொருளாளர் முகம்மது யூசுப், மாநில வர்த்தக அணி தலைவர் […]

கீழக்கரையில் தொடரும் மின்வெட்டு: மின்வாரியத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரையில் முன்னறிவிப்பின்றி தொடர்ச்சியாக மின்தடை செய்வதை கண்டித்தும், மின்கணக்கு எடுக்கக்கூடிய கணக்காளர்கள் கால தாமதமாக கணக்கெடுப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழக்கரை துணை மின்நிலையத்திற்கு கீழ் மொத்தம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மின் ஊழியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின் கம்பியாளர், ஊழியர்கள் பற்றாக்குறை […]

புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

தென்காசி நகராட்சியில் தூய்மை காவலர்களுக்கு சமபந்தி விருந்து..

தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், […]

“டாம்ப்கால்” நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் “டாம்ப்கால்” நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தினை (24.12.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]

கீழக்கரையில் 27/12/2024 அன்று தொடங்கும் வர்த்தக கண்காட்சி (CENTENARY FAIR 2024)..

கீழக்கரையில் 27/12/2024 முதல் வர்த்தக கண்காட்சி ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கீழக்கரையின் பாரம்பரியம் மற்றும் சிறப்பை பறைசாற்றும் வகையில் கீழக்கரையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள்,  சரித்திரம் சொல்லும் இராமநாதபுரம், கீழக்கரையும் வணிகமும், எங்கள் ஊரும் எங்கள் வாழ்வும், இறந்தும் இரந்த சீதக்காதி என்ற தலைப்புகளில் பேச்சு போட்டி, வினாடி வினா நிகழ்ச்சி, குறும்படம், வியாபார சிந்தனையை தூண்டும் SHARK TANK நிகழ்வு புகைப்பட போட்டி மற்றும் பல்வேறு அறிவு சார்ந்த மற்றும் […]

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச மாட்டு தீவனம் வழங்கும் நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ,தஞ்சாவூர் ஒன்றியம், ஆலக்குடி கிராமத்தில் சில்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக கால்நடை மாட்டு தீவனம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு ஆலக்குடி கிராமத்தின் கால்நடை உதவி மருத்துவ அலுவலர் த சுகன்யா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மாட்டுத்தீவனம் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாட்டுத் தீவனம் வாங்கி சென்றனர் . கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடை மாட்டு தீவனம் வழங்கும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!