மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 475 மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழி முறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், […]

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; பரிசு மற்றும் சான்று வழங்கல்..

தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (18.09.2025) இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி […]

40வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 40-வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு.செல்வ பாலா ஆகியோர் தலைமையில், கண் மருத்துவர் ராஜலட்சுமி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மூத்த கண் மருத்துவர் மரு.ராஜலட்சுமி, மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் […]

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; செப்.06 (நாளை) மின்தடை

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் வரும் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.09.2025  அன்று பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி பகிராமான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.   திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் […]

இலஞ்சி பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..

இலஞ்சி பி.எட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலா வின்சிலா தலைமை வகித்தார். நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்களை மாணவ ஆசிரியர்கள் வாழ்த்தினர். தொடர்ந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், […]

புகையிலை பொருட்கள் கடத்திய நபர் கைது..

கேரள மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை புளியரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 496 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.   தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை […]

TNUSRB-TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத […]

தென்காசி செங்கோட்டை பகுதிகளில் காவல்துறை அணிவகுப்பு..

விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது மக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், தென்காசி மற்றும் செங்கோட்டையில் காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி யானை பாலம் சிக்னல், மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காசி விஸ்வநாதர் கோவில், சுவாமி சன்னதி வீதி, ஜெமினி லாலா […]

தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் சங்கம் முக்கிய கோரிக்கை..

தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனக் கூறி, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் […]

கடையில் பணம் திருடிய நபர் அதிரடி கைது..

புளியங்குடி பகுதியில் கடையில் இருந்து பணம் திருடிய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள ஓர் கடையில் கடந்த 16.08.2025 அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் மற்றும் சார்பு […]

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.08.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது […]

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக சுதந்திர தின நிகழ்வு..

வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை – நாசா வின் சார்பாக இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 8 மணியளவில் கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள நாசா அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ அன்புடன் வாழ வேண்டும், பிரிவினைவாத கருத்துக்கு […]

மாற்றுத்திறன் படைத்தோரை மகிழ்வித்த வனத்துறை..

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அருவியில் குளிக்க செய்து மகிழ்வித்த தென்காசி மாவட்ட வனத்துறையை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் பொதிகை மலையின் வனப் பகுதிகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்கும் குற்றால அருவிகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அருவிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குளிப்பதற்கு வந்திருந்தனர்.   இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் […]

ம.சு.பல்கலை கழக விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெறாத மாணவி..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்து துணை வேந்தரிடம் மாணவி பட்டம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650-க்கும் மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்நிலையில் ஜீன் […]

புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு..

தென்காசி மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் பொறுப் பேற்று கொண்டார். முன்னதாக தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த லாவண்யா அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்காசி புதிய வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தென்காசி உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியராக வைஷ்ணவி பால் ஐஏஎஸ் 11.08.2025 அன்று பொறுப் பேற்றுக் கொண்டார். புதிய கோட்டாட்சியருக்கு அரசு அலுவலர்கள் […]

குற்றாலத்தில் இரவில் குளிக்க பணம் வசூல்?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே பொது மக்களை குளிக்க அனுமதித்து வரும் நிலையில், இரவு 8.00 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வனத் துறையினர் குளிக்க அனுமதித்து வருவதாக பொது மக்களிடயே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிப்பது உள்ளிட்ட அத்து மீறல்களில் ஈடுபடும் வனத் துறையினர் […]

திமுக சார்பில் கல்வி உதவித் தொகை..

தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவியை பாராட்டி திமுக சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இலத்தூரில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர், +2 பொதுத் தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சீவநல்லூர் மாணவி கார்த்திகா உயர் கல்வி படிப்பதற்கான முதலாம் ஆண்டு செலவை […]

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு சிறை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததோடு நகராட்சி ஊழியரை மிரட்டிய இரண்டு பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைத்தெரு தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் அதற்குரிய பணத்தையும் கட்டாமல் நகராட்சி தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம்..

இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்வுக்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!