தமிழகத்தில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், வட மாவட்டங்களில் இன்று 103°F வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டிலும் இன்று வெயில் சுட்டெரிக்கும்.   குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்ப நிலை அதிகரிக்கும். பகல் நேர வெப்ப நிலை அதிகரித்தாலும் தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பதிவாக […]

கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்: ஆபத்தான வயர்களை அகற்றக் கோரிக்கை..!

கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்: ஆபத்தான வயர்களை அகற்றக் கோரிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மின் கம்பங்களில் தனியார் இணையதள வயர்கள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், கீழக்கரை நகர் முழுவதும் மின்வெட்டுகள் ஏற்பட்டு அவ்வப்போது பழுது பார்க்க வரக்கூடிய ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மின்வாரியத்தூருக்கு தகவல் கொடுத்தால் கண் துடைப்பிற்காக அரசு கேபிள்களை துண்டித்து விட்டு தனியார் கம்பிகளை விட்டு செல்கின்றனர் என […]

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி தேவகோட்டை முகமதியார் பட்டினம் பகுதியில் தனியார் மஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் அஸ்ரி சஹ்ரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் பாஸ்டர் மார்க், தமுமுக மாநிலத் தொண்டர் […]

இராமநாதபுரத்தில் தொடங்கியது 7வது புத்தகத் திருவிழா.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முகவை சங்கம், மாவட்ட நிர்வாகம் பள்ளிகல்வித்துறை பொது நூலக இயக்கம்,மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தக திருவிழாவானது பத்து நாட்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறும் இந்த 7-வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இதில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் முன்னதாக மாவட்ட ஆட்சியரை […]

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மண்டல அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுத் திறன் போட்டி.!

இளைஞர் பாராளுமன்ற பேச்சு போட்டி மதுரை மண்டல அளவில் அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் நிகழ்வில் திட்ட அலுவலர் முனைவர். யேசுராஜன் பிரார்த்தனை செய்தார். மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அமெரிக்கன் கல்லூரித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆ. செல்வன் வரவேற்புரை வழங்கினார். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர். ம. தவமணி கிறிஸ்டோபர் தலைமை உரை ஆற்றினார் மாணவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற கட்டமைப்பு பற்றியும் விளக்க உரையாற்றினார். […]

மேட்டுப்பாளையம் மகாஜன சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி .!

மேட்டுப்பாளையம் சின்ன மத்தம்பாளையம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கட்டிடத்திற்கு SMT. K.கல்யாணசுந்தரம் 20 லட்சம் ரூபாய் நன்கொடை நிதியுதவி கோவை மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அமைப்புகளால் சின்னமத்தம் பாளையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளையின் அறங்காவலரும் காரமடை எஸ் எம் டி குழும நிர்வாக இயக்குனருமான கே கல்யாணசுந்தரம் அவர்கள் கட்டிட நிதி நன்கொடையாக இருபது 20 லட்சம் ரூபாய் வழங்கினார் இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து […]

கடும் மழையிலும் மீட்பு பணியை மேற்கொண்ட கோவை மேட்டுப்பாளையம் காவல்துறையினர்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மாலை பரவலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது இதனால் மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையான ரயில் நிலையம் சாலையில் சிவன் தியேட்டர் அருகில் மிகப் பிரமாண்டமான மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்துவிட்டது இந்த சாலையை கடந்து தான் மேட்டுப்பாளையத்தில் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் இதனால் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சின்னக்காமணன் தலைமையில் காவல்துறையினர் பலத்த மழை இருக்கிடையே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக […]

ஷாம்பியன்ஷிப் கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறை; துணை முதலமைச்சர் பாராட்டு..

இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றது. கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறையினருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். 25-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் […]

இலஞ்சி பி.எட் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில், தென்காசி வி.டி.எஸ்.ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் கல்லூரி மாணவிகள் இடையே நடந்தன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) கலா வென்சிலா வரவேற்றார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதலை தடுத்தல், வனப் பாதுகாப்பு, போதை தடுப்பு ஆகியவற்றை […]

தேவகோட்டையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை.!

தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ முளைக்கொட்டு பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழா ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு காமாட்சி அபிராமி சரஸ்வதி சந்தான லட்சுமி பகவதி அம்மன் மீனாட்சி வைஷ்ணவி போன்ற சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் […]

தென்காசியில் இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம்..

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி, பணி மற்றும் சிகிச்சைக்குச் செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் (22.03.2025) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. […]

பிள்ளையார்பாளையம் ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா.!

மதுரை மாவட்டம் வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோடு பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் பதினோராம் ஆண்டு வருடாபிஷேக விழா மதுரா பில்டிங்ஸ் உரிமையாளரும் கோவில் அறங்காவலருமான வி கே தர்மராஜ் தலைமையில் மதுசூதனன் என்ற கணேஷ்ஐயங்கார் முன்னிலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மதுர விநாயகர் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் தீபாரதனையும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிழவகராஜன் பாண்டியன் ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி […]

சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் மனு.!

மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாமில் மேட்டுப்பாளையத்தில் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து மனுவாக பெறப்பட்டது நகராட்சியில் நடைபெற்ற முகாமில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக […]

மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாம்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி வட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்,  தலைமையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன, மகளிர் சுய உதவி மூலமாக பயனாளிகளுக்கு கடன் உதவி , வேளாண்துறை சார்பாக விவசாய பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு இணைய வழி […]

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை.!

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தில் ஆலிம் நகர் புதிய பள்ளி வளாகத்தில் எஸ்டிபிஐ கட்சி ஜிபி கமிட்டி சார்பாக அதன் தலைவர் நசீர் மைதீன் தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் ஒற்றுமையோடு வாழ்வதற்கும் நாட்டின் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கு தீர்வு ஏற்றுவதற்கும் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் நோய் இல்லாமல் வாழ்வதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. நோன்பு திறப்பதற்கு உண்டான பழங்கள் பேரிச்சம் பழங்கள் […]

அவதூறு பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் துணைத் தலைவர் அஜ்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளரும் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளரும் கீழக்கரை நகராட்சியின் 19வது வார்டு உறுப்பினருமான சப்ராஸ் நவாஸ் என்பவரை சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பிய முத்து வாப்பா கீழக்கரை விசுவாசி போன்ற பெயரில் கள்ளத்தனமாக ஐடி உருவாக்கி அவதூறு பரப்பிய நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா.!

இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா மற்றும் பாதுகாப்பான ஊட்டச்சத்துமிக்க உணவு அனைத்து நுகர்வோருக்குமான அடிப்படை உரிமை கருத்தரங்கு கிரியேட் அமைப்பு சார்பில் நடந்தது. கிரியேட் தலைவர் முனைவர். பி. துரைசிங்கம் தலைமை வகித்தார். கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத் தலைவர் மு.செய்யது இப்ராஹீம் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டலத் தலைவர் மு. மதுரைவீரன், கிரியேட் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் […]

ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!

ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு..! ராமநாதபுரம் நகர அஇஅதிமுக சார்பில், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு தனியார் மஹால்களில், அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் மதியம் முதல் மாலை வரை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், கழக அம்மா பேரவை இணைச் […]

அதிமுக கழகத்தில் இணைந்த இளைஞர்கள்..!

ராமநாதபுரம் தனியார் மகாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்டக் கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் 137 இளைஞர்கள் தன்னார்வமாகவும், திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகியும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜ வர்மன், கழக அமைப்பு செயலாளர் […]

கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

திருவாடானை அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ‘தேளூர் கிராமத்தில் 52 குடும்பங்கள் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஆறு வருடமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது பணம் செலவு செய்து விலை கொடுத்து குடிநீர் வாங்குவதாகவும் அப்படி வாங்கி குடிக்கும் தண்ணீரினால் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!