ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழ சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மருத்துவ சமுதாய மக்கள் சார்பில் இராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் நடைபெற்ற விழாவில் நகர் மன்ற தலைவர் நாசர் கான் கலந்து கொண்டு விஸ்வநாததாஸ் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் இந்திய சுதந்திரத்திற்காக தனது பாடல்கள் மூலம் சுதந்திர போராட்டத்தின் போது […]
Category: உலக செய்திகள்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி..
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி 30.06.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 01.07.2025 […]
ராமநாதபுரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே சலசலப்பு.!
ராமநாதபுரத்தில் ஜல் ஜீவன் திட்டப் பெயர் மாற்றம் குறித்த சர்ச்சை: கொடுமையாக எதிர்த்த பாஜக நகர்மன்ற உறுப்பினர்! ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ குடிநீர் திட்டத்தின் பெயரை ‘சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம்’ என மாற்றியதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் ஆர்.கே. கார்மேகம் தலைமையில், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மொத்தம் 63 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த […]
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு படாத பாடுபடும் சுற்றுவட்டார பொதுமக்கள்!
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஆனால் பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறவும் சான்றிதழ்கள் […]
கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மற்ற ஊராட்சிகளில் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிந்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மட்டும் பணி வழங்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் […]
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்!
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பேருந்து நிறுத்தம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன் தலைமையில் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் ஒன்றிய கழக […]
திருவாடானை அருகே அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!
திருவாடானை அருகே பாண்டுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் படி திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் […]
தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகெங்காராம் தலைமை வகித்தார். முனைவர் மு. சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவி கலைச் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் ராஜேஸ்வரி, குருக்கள்பட்டி மருத்துவ அலுவலர் விஷ்ணு, சேர்ந்தமரம் மருத்துவ அலுவலர் முகமது ஜாஃபர் அலி ஆகியோர் பங்கேற்று மலேரியா தடுக்கும் முறைகளை விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர், ராமலிங்கம் […]
திமுக கூட்டணி வெற்றி பெறும்; IUML தேசிய தலைவர் பேட்டி..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மணிச்சுடர் சாகுல் ஹமீது இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திருமண நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், திமுக-முஸ்லிம் லீக் இடையே இருப்பது கொள்கை ரீதியான கூட்டணி எனவும் IUML தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். தென்காசி […]
நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை உழவர்நலத்துறை” திட்டம் முகாம் நடைபெற்றது. வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள், வேளாண் விலைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், இடுபொருட்கள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்துதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள், பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்தல், உயிர்ம வேளாண்மையின் அவசியம், உழவர் செயலி […]
கீழக்கரை கடற்கரை அருகே உயர் ரக கஞ்சா பறிமுதல்: ராமநாதபுரம் சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை:
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம் வேதாளை, களிமண்குண்டு, கீழக்கரை, நரிப்பையூர் உள்ளிட்ட தெற்கு கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் நாட்டுப்படகில் கடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்கள் சாலை மார்க்கமாக கடத்தி வந்து பின்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதற்கும், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வரும் கடத்தல் தங்கத்தை சாலை மார்க்கமாக திருச்சி, மதுரை […]
IUML மகளிர் அணி சார்பில் பரிசளிப்பு விழா..
கடையம் அருகே உள்ள ரவண சமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், முதலியார் பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆகிய அரசுப் பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ரவண சமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. IUML மகளிர் அணி மாவட்ட செயலாளர் நாகூர் அலி பாத்திமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடையம் ஒன்றிய […]
அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பால்குட உற்சக விழா.!
திருவாடானை அருகே அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பால்குட உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவிலின் ஏழாம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மே 26 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று 600க்கும் மேற்பட்ட […]
திருவாடானை அருகே மாவிலங்கையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரர் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலின் ஆறாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சிறப்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரமிக்க காளைகள் பங்கேற்றன. அதேபோல, இந்தக் காளைகளை அடக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துடிப்புமிக்க காளையர்களும் கலந்துகொண்டனர்.வீரர்களின் கரகோஷங்களுக்கிடையே மஞ்சுவிரட்டு களைகட்டியது. கடுமையான பலப்பரீட்சைக்குப் பிறகு, […]
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்)தேசிய மக்கள் நீதிமன்றம் .!
இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின்படி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். மேலும் 112 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 1,83,62,412/-ஒரு கோடியே எண்பத்தி மூன்று லட்சத்து அறுபத்தி இரண்டு ஆயிரத்து நானூற்றி பன்னிரெண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த இளம் வழக்கறிஞர்கள் […]
தொண்டியில் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் .!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்ப பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை இணைந்து நடத்தும் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் சமகால சுற்றுச்சூழல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெ.ஜே. லியோன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் புல்லூர் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் போது ராஜா ஆகியோர் முன்னிலை […]
18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் க.கு ஜப்பார், இபுறாஹிம் முஹம்மது முபாரக் ஆகியோர் தலைமையில் காதர் சாஹிப் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலி அஹமது கிராத் ஓதி துவக்கி வைத்தனர். மன்சூர் ஆலிம் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களிடையே கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து […]
குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை உழவர் நல துறையின் கீழ் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று பற்றி விளக்க உரையாற்றினார். உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் […]
கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பொதுமக்களின் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோன்று சிசிடிவி […]
கெமிக்கல் பால்; மூவர் கைது..
தென்காசி அருகே கெமிக்கல் பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த நபர் பாலில் கெமிக்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து பால் தயாரித்து அது […]