காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ‘கட்டிவயல்’ ஊராட்சி தலைவராக முத்துராமலிங்கம் (45) என்பவர் கடந்த 5 வருடமாக ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில்  எட்டுகுடி கிராமத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம் (42) என்பவரிடம் தனது தேவைக்காக 3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக காசோலை ஒன்றை கொடுத்து அந்த காசோலை மூலம் இரண்டு மாத காலத்திற்குள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று உறுதி அளித்துள்ளார். அதை நம்பிய […]

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா.!

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 45 வது ஆண்டு விழா  மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது  தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தூக்கத்தில் கல்லூரியின் வளர்ச்சி குறித்து உடற்கல்வி இயக்குநர் […]

நீலகிரிக்கு வருகை புரிந்த முதலமைச்சர்.! திமுகவினர் உற்சாக வரவேற்பு.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் உதகமண்டலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தல் அதன்பின்னர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சிறப்புரையாற்ற உள்ளார் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

முதலமைச்சர் உடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள் .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கு குஞ்சப்பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை, தீயணைப்புத்துறை, திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் தனது பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி குழந்தைகளிடம் அன்பாக பேசி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் […]

ராமேஸ்வரத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.!

இந்தியப் பிரதமர் வருகின்ற ஏப்ரல் 06, 2025 அன்று  இராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் (NH) செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால்  இராமேஸ்வரத்திற்கு வரும் வாகனங்கள் குறித்த நேரத்தில் அனுமதி கிடையாது என்றும் இராமேஸ்வரம் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவசர சேவைகள் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் […]

மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய ஜமாஅத்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 24 பள்ளிவாசல்கள் ஒருங்கிணைந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈதுகா மைதானத்திற்கு ஊர்வலமாக செல்வது வழக்கம் இந்த ஆண்டும் சிறப்பு தொழுகைக்காக ஊர்வலமாக இஸ்லாமியர்களுக்கு எவ்வித வாகன நெரிசலும் ஏற்படாத வண்ணம் மற்றும் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை எவ்வித வாகனங்களும் அவ்வழியாக வரவில்லை இதனால் தொழுகைக்காக செல்லும் பொழுதும் தொழுகை முடிந்து […]

இ பாஸ் முறையை கண்டித்து உதகையில் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் முறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் பகுதியில் வணிகா் சங்கங்கள் சாா்பில் வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்  நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் வாரநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரம் இறுதி […]

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இ.பாஸ் ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடி பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர்லட்சுமி பவ்யா தண்ணீரு இ.பாஸ் ஆய்வு மேற்கொண்ட போது நெகிழி ஒழிப்பு ஆய்வு செய்தார் வாகன சோதனையின் போது நெகிழி தண்ணீர் கேன்கள், குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது  நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 97 குடி தண்ணீர் மின் இயங்கி இயந்திரங்கள் அமைத்துள்ளோம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிதண்ணீர் நெகிழி கலன்கள் மற்றும் […]

மேட்டுப்பாளையத்தில் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி,ஐ,டி,யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக  வசதி இல்லாத மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஃபித்ரா அரிசி 200 க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும் […]

தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி .! ஊருக்கே அறுசுவையுடன் உணவு வழங்கி மகிழ்ந்த பிள்ளைகள் .!!   ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் கருப்பையா வேலம்மாள் இவர்களது மூத்த பிள்ளையான சாத்தையா இவர் கடந்த 50 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழக தீவிர பற்றாளராக இருந்து வந்தது மட்டுமின்றி அப்பகுதி சுற்று வட்டார மக்களுக்கு உரிமைக்குரலாய் இருந்து வந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பாட்டு பாடுவது, கும்மியாட்டம், ஒயிலாட்டம்,கற்றுத் தருவது போன்ற பன்முகத் திறமைக்கு சொந்தக்காரராக […]

மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.! அனைத்து சமுதாய மக்களின் நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டதுஇஸ்லாமியர்களின் மிக புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது.  இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறதுஇந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும்.ரம்ஜான் பண்டிகையானது, இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் தலைமையில் ஒன்று […]

தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில், தென்காசி, பொட்டல் புதூர், முதலியார் பட்டி, செங்கோட்டை, அச்சன் புதூர், வடகரை, வீராணம், சங்கரன் கோவில், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், திரிகூடபுரம், உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.   நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெருநாள் சிறப்பு தொழுகை […]

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

ரம்ஜான் பண்டிகை: ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்புத் தொழுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, ராமநாதபுரம் கீழக்கரை புதுமடம் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈத்கா திடலில் […]

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய விழா.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முன்நின்று நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் இலக்கிய விழா  நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா மொழிதான் நம் உயிர் மொழிதான் நம் வாழ்வு என்பதை உணர்ந்து இலக்கிய வாசிப்பில் மாணாக்கர்கள் ஈடுபடவேண்டும்  அதன் மூலம் ஒரு நல்ல அறிவுச் சமூகத்தை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் சிந்துவெளியும் தமிழும் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு.!

*மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு*     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள TECTUS INFRA Pvt லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எடுத்திருந்தது மேற்படி ஒப்பந்த நிறுவனத்திடம் சுமார் 180 க்கு மேற்பட்ட ஆண் பெண் உட்பட தூய்மை பணியாளர்கள் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு […]

மேட்டுப்பாளையத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் தொழில் சார்ந்த மையங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன நகர்ப்புற உள்ளாட்சி விதிப்படி புதிதாக தொழில் தொடங்குபவர்கள் புதியதாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் ஏற்கனவே தொழில் உரிமம் பெற்று தொழில் செய்பவர்கள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் தொழில் உரிமம் இல்லாமல் வியாபாரம் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்.!

*மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா அவர்களின் மேற்பார்வையில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி சம்பந்தமாகவும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தும் போக்சோ சட்டம் […]

பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் ராம்நாட் ஓலை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் பனை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் 20 பனை ஓலை கைவினைஞர்களுக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியினை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் ராம்நாட் […]

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு.!

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2-6 தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி கவிஞர் யுகபாரதி எழுதி, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் இசைகோர்வையில், தம்மா தி பேண்ட் குழுவினர் பாடிய மாநாட்டு முன்னோட்ட பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிபேழை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஒலிப்பேழையை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு […]

தமிழகத்தில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், வட மாவட்டங்களில் இன்று 103°F வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டிலும் இன்று வெயில் சுட்டெரிக்கும்.   குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்ப நிலை அதிகரிக்கும். பகல் நேர வெப்ப நிலை அதிகரித்தாலும் தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பதிவாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!