தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குற்றாலத்திலுள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து முதியோர்களும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் தேர்தல் தொடர்பான […]

திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; போலீசார் விசாரணை..

திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; ரயில்வே போலீசார் விசாரணை.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 28). இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயில் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த ரயில்வே எஸ் ஐ சையது குலாம் மற்றும் போலீசார் […]

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு.. தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில், நகர கழக செயலாளர் ஆர்.சாதிர் முன்னிலையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி […]

சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்..

சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்.. சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ.கே.டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். மதுரை புறநகர் மேற்கு […]

இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..

இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 78800 பறிமுதல் செய்யப்பட்டது. டாடா இண்டிகேஸ் ATM மிஷினில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு..

சேலம் மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை இயற்கை ஆர்வலர்.. மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா நிறைவில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு […]

தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகின்ற 20 ஆம் தேதி பொதுத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 12) 25.03.2024 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ள […]

ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேர் கைது..

ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேரை கைது – 15.45 லட்ச ரூபாய் வசூல்..!! தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023 முதல் 2024 மார்ச் 20 தேதி வரை ரயில் பயணத்தின் போது தேவையில்லாமல் ரயிலின் அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை பாதியிலே நிறுத்திய விவகாரம் நேற்று வரை சுமார் 2632 வழக்குகள் பதிவு – 2618 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அபராத தொகையாக இதுவரை […]

தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்.. ஆட்டோவிற்கு வழி விடக் கூறியதால் கல்லால் தாக்கிய நபர் கைது.. சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாமல் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பிரச்சனை செய்துள்ளார். ஏன் இப்படி பிரச்சனை செய்கிறாய் என்று சங்கரன் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி கல்லால் தாக்கியுள்ளார். அதனை […]

தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் துவங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார்.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் முகாமினை 20.03.2024 அன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். ஜனநாயகம், கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது […]

அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு..

அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு.. சோழவந்தானில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆர்பி. உதயகுமார் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மத்திய […]

மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூபாய் 78,500 பறிமுதல்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூபாய் 78,500 பறிமுதல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும் படை C டீம் , மாநில தணிக்கைத்துறை அலுவலர் தேன் மாரிகனி தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளம் பகுதியை சேர்ந்த முகம்மது ஹனிபா என்பவரின் மகன் அப்துல் பத்தாஹ் (வயது 50) என்பவர் சிலைமான் அருகே தாஜ் பிரிக்ஸ் கோட்ஸ் என்ற பெயரில் செங்கல் தயாரித்து […]

துணை ராணுவப்படை அணிவகுப்பு ! மாவட்ட எஸ் பி பங்கேற்பு !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலில் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்திகை நடைபெற்றது. குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது.   ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதால் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும்  தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,தேர்தலில் வாக்களிப்பது […]

தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்..

தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்.. தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக சங்கரன்கோவில் அரசு மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான […]

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு.. தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 19.03.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூன்று இலட்சம் வாக்காளர்களின் கையெழுத்து பெறும் மாபெரும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் […]

பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர்கள் தேர்வு..

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர்கள் தேர்வு.. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முத்தலைவர்கள் தேர்வு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலமரம் வட்டாரத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் சசி ஞானசேகரன், முன்னாள் செயலாளர் R.கலைச்செல்வன் மற்றும் உறுப்பினர் R.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் வரவேற்றார். […]

ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் […]

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; கவிஞர் பேரா வரவேற்பு..

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்பு.. சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் கவிஞர் பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பான் […]

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்.. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (15.03.2024) நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 38604 ஹெக்டேர், சிறுதானியங்கள்- […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!