கிழக்கு ஆசிய நாடான தைவானின் தலைநகரான தைபேவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஹூவாலியன் நகரில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக தைவான் அரசு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பையொட்டிய பகுதியில் 32 கி.மீ ஆழத்தில் 7.4 புள்ளிகளை கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது […]
Category: உலக செய்திகள்
எனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி: பகீர் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்! பல்வேறு அதிரடி நடவடிக்கையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்..
பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த பிப்ரவரி 8-ந்தேதி அந்நாட்டில் பொது தேர்தல் நடந்து முடிந்தது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில், நீண்ட இழுபறிக்கு பின்னர் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவருடைய தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ந்தேதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கூட்டம் நடந்தது. இதில், வெளிநாடுகளிடம் […]
அலங்காநல்லூர் தேர்தல் பிரச்சாரத்தில் செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என பேசிய டிடிவி தினகரன்..
மதுரை அலங்காநல்லூரில் டிடிவி தேர்தல் பிரச்சாரம்; செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என டிடிவி தினகரன் பேச்சு.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆர் பி உதயகுமாரை பபூன் என்றும், செல்லூர் ராஜுவை விஞ்ஞானி என்றும் டிடிவி தினகரன் கூறினார். அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் […]
சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொது மக்கள் அவதி..
சோழவந்தானில் முன் அறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்கள் அவதி.. சோழவந்தான் ரயில்வே கேட் முன் அறிவிப்பு இன்றி மூடியதால் அன்றாட வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது மட்டும் அல்லாது ரயில்வே கேட்டுக்கு வடபகுதியில் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதால் இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்கின்றனர். இவர்களுடைய அன்றாட தேவைக்கும் அடிப்படை தேவைக்கும் தென்பகுதிக்கு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது இவர்கள் பெரும்பாலும் நடந்து செல்லக் கூடியவர்கள். சுமார் 75 ஆண்டுகளுக்கு […]
நாட்டு வெடி குண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது; மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை.. தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்களை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினரை கண்டதும் தப்பித்து ஓட […]
தென்காசி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்.. தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 30.03.2024 அன்று தென்காசி தனி நாடாளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை பார்வையாளர் பங்கஜ் நைன், பாராளுமன்ற […]
தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பேட்டி !
தஞ்சாவூர் விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாஜகவில் இணைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து சம்மந்தப்பட்ட விசிக மைய மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராசாத்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :- கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மைய மாவட்ட மகளிர் அணி செயலாளரான ராசாத்தி , பாஜக பிரமுகர் ஒருவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது […]
நெல்லையில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிக் குழு அலுவலகம் திறப்பு விழா..
இந்தியா கூட்டணி நெல்லை தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா.. இந்தியா கூட்டணியின் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நெல்லை பைபாஸ் சாலையில் மத்திய மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார். மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான், தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஞானதிரவியம் M.P. பாளை சட்டமன்ற […]
தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு..
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் மேலதாளங்கள் முழங்க காவல் துறையினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் பகுதியில் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், […]
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் !
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டுமென பேசினர்.
ஐ.நா சபையின் பாராட்டு சான்று பெற்ற சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்கள்..
சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு ஐ.நா சபை பாராட்டு சான்று; பொதுமக்கள் பாராட்டு.. சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களின் சுற்றுச்சூழல் சேவையை பாராட்டி ஐ.நா. சபையின் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய பசுமை படையுடன் இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஸ்ரீ பவானி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, கடையநல்லூர் நகர் பகுதி மற்றும் சுற்று […]
தம்பி அண்ணாமலை எனது வெற்றிக்காக பாடுபடுகிறார்; சீமான் பரப்புரையில் பேச்சு..
பாஜகவில் இருந்து கொண்டு எனது வெற்றிக்காக மறைமுகமாக பாடுபடுகிறார் அண்ணாமலை; கடையநல்லூரில் சீமான் பேச்சு.. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், போட்டியிடும் வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசியதாவது, ஒரு காலம் வரும், நேர்மை என்பது உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைப்பதற்கு சமமாக இருக்கும் என்கிறார் நபிகள் நாயகம். அந்த காலம் இந்த காலம் தான் என் அன்பு மக்களே. […]
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..
ராஜபாளையம் அருகே ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை.. ராஜபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வங்கியில் இருந்து கொண்டு வந்த வசூல் பணம் ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் முகவூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக […]
தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் பேச்சு..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமான ஆட்களும் பாராளுமன்றத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவுடைய தலையெழுத்தை மாற்றி […]
அதிமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; மதுரையில் பரபரப்பு..
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரச்சாரம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா நூறு ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் நாராயணசாமி. இவர் தேனி […]
தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் இருசக்கர வாகன பேரணியும், மனிதச்சங்கிலி பேரணியும், ஆய்க்குடி பேரூராட்சியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி […]
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை..
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை.. கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான், தாழையூத்து மற்றும் ராம்நகர் பகுதிகளில் பேட்டரிகள், மின் வயர்கள், நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் ஆடுகள் என தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் கடையம் காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் […]
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு..
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை; 26 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு.. தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் நடந்தது. இதில் 37 வேட்பு மனுக்களில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு 28.03.2024 அன்று […]
பட்டதாரிகளே மிஸ் பண்ணிடாதீங்க! குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு..
குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதன்படி, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. 16 துணை கலெக்டர்கள், 23 துணை போலீஸ் […]