தேர்ச்சி பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கீழக்கரை சமூக ஆர்வலர் வாழ்த்து ! 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 105 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 99 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  இது தொடர்பாக கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் முன்னாள் துணைத் தலைவரும் சமூக ஆர்வலருமான முகம்மது அஜிஹர் கூறுகையில் :- கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத்துக்கு கீழ் இயங்கி வரும் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் 13 மாணவ மாணவிகள் 500/600 ம் நான்கு மாணவ […]

இராமநாதபுரம் மாவட்ட அளவில் 94.89% மாணவர்கள் தேர்ச்சி !

இராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6302 மாணவர்களும், 7247 மாணவிகளும் என மொத்தம் 13,549 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று தேர்வு முடிவுகள் வெளியிட்ட முடிவின்படி 5850 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 92.83% தேர்ச்சி அடைந்துள்ளனர். 7007 மாணவிகள் தேர்ச்சி பெற்று 96.69% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 94.89% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 19 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளனார் .இந்த தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற்று வரும். இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக மே 9ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் இருந்து தர்ஹா ஹக்தார்களால் மவ்லிது ஷரீப் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறும் இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 9ல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தனக்கூடு திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கும் அமைதியான வழியில் திருவிழாவை நடத்துவதற்கு வருவாய் கோட்டாட்சியர் […]

ராமநாதபுரத்தில் நிலம் மோசடி செய்த நபர் மீது நடிகை கௌதமி குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நடிகை கௌதமிடம் ரூபாய் 3 கோடி பணம் பெற்றுள்ளதாகவும். இந்நிலையில் சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ 57 லட்சம் மதிப்பில் மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் , அந்த நிலமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது . எனவே நிலத்தை போலியாக வாங்கிக் கொடுத்தது பணத்தை […]

ராமநாதபுரத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ! நடுரோட்டில் அமர்ந்திருந்த பெற்றோர்கள்!!   

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்களில் சுமார் 2229 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த நிலையில் ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் சுமார் 900 பேர் மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் . தற்போது கொளுத்துகின்ற அக்னி நட்சத்திரம் வெயில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையத்தின் வெளிப்பகுதியில் சாமியானா பந்தல் போதுமான அளவுக்கு போடப்படவில்லை அதனால் மாணவ மாணவிகள் வெயிலில் நீண்ட […]

கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை..

கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி பிரதான சாலையில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே சாலையில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார். இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த பணம், செல்போன் […]

நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..

நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.. நெல்லையில் ரயில்வே மேம்பாலத்தை திறக்கக்கோரி மமக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜா நகர் உழவர் சந்தைப் பகுதி சாலையில், தினந்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து சுமார் 26 கோடியே 30 லட்சத்தில் நெல்லை திருச்செந்தூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த 2016 ல் […]

கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் காட்டுமாடுகளைக் கட்டுப்படுத்தும் முறையை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் ஹெர்போலிவ் என்னும் மருந்து குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. மேலும் மாணவி தாமரைச்செல்வி கூறுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெர்போலிவ் என்னும் மருந்தினை தெளிப்பதினால் காட்டு விலங்குகளான காட்டு மாடு எருமை காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் […]

இராமேஸ்வரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்காக நீர், மோர், தர்பூசனி பழம் உட்பட தாகம் தீர்க்கும் வகையில் பந்தல் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமீம், பரமக்குடி நகர் நிர்வாகிகள் அர்ஜீன், துரை மருது, பார்த்திபன், சுரேஷ், இராமேஸ்வரம் நகர்தலைவர் கோவிந்தராஜ் நகர்செயலாளர் கோபிசாரதி நகர் பொருளாளர் கோபிகிருஷ்ணா இளைஞரணி பொருளாளர் ஸ்டீபன் , நகர் இளைஞரணி செயலாளர் ராஜிவ்(எ)நாகேஸ்வரன் நகர் இணை […]

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32பேர் படுகாயம் ! சிறுவன் பலி !!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் குஞ்ச பண்ணை அருகே உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தததாகவும் சிறுவன் பலியானதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1 ம் தேதி மேட்டுப்பாளையம் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு ! 

இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், […]

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்..

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.. கனிமவளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அம்பை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி, நெல்லை, குமரி, கோவை […]

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், நலத்திட்ட உதவிகள், தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தென்காசி பொறுப்பாளர் முகமது அலி தலைமையில் […]

ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டிய பீடித் தொழிலாளி மகள் இன்பா..

ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டிய பீடித் தொழிலாளி மகள் இன்பா.. தென்காசி மாவட்டத்தில் பீடித்தொழிலாளி மகள் இன்பா ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் […]

சுரண்டையில் பீடி தொழிலாளர் மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் சுரண்டை பீடி தொழிலாளர் நல மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார்கள் உறவின் முறை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார் தலைமை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்கேடி ஜெயபால், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏகேஎஸ்டி சேர்மச்செல்வன், கவுன்சிலர் உஷா பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறைவிட மருத்துவர் அஞ்சலி வரவேற்று தொழிலாளர் தினம் […]

பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..

தென்காசியில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்; சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான […]

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி?; கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி..

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி?; கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி.. தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி? என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு […]

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ! விவசாயிகள் பங்கேற்பு !!

இராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  பனையடியேந்தல் கிராமத்தில்   ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் என்ற தலைப்பில் பாரம்பரியமான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயம் செய்வது எப்படி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை  இறுதி ஆண்டு படிக்கும்  மாணவி  மூ.சூரிய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் முறையினை எவ்வாறு மானாவாரி நிலங்களில் (1 எக்டர்) அமைப்பது பற்றியும் , ஆடு மாடு வளர்ப்பு […]

தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..

தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு.. தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக் கிழமை பழைய குற்றாலம் சாலையில் உள்ள கே ஆர் டைகர் ரிசாட்சில் நடைபெற்றது. இதில், கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வசந்தம் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட தலைவராகவும், மேலகரம் பொறியாளர் கீதம் கன்ஸ்ட்ரக்ஷன் சங்கரநாராயணன் மாவட்ட செயலாளராகவும், ஆலங்குளம் சஞ்சய் பில்டர்ஸ் சிவகுருநாதன் பொருளாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களுடன் உடனடி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!