முதலியார்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பங்கேற்பு..

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் பங்கேற்பு.. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டார். தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. காந்தி நகரில் உள்ள, பக்கீர் […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு; காவல்துறையினர் பங்கேற்பு.. தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் வருகின்ற 01.07.2024  அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு […]

சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் […]

இலங்கை பொருளாதரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது ! இலங்கை அமைச்சர் அஹ்மத் சாதிக் பேட்டி !!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது என்று இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் கூறினார்.தஞ்சை பூக்கார 1-ம் தெருவைச் சேர்ந்தவர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ். இவர் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி […]

தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டம் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் 10.05.2024 அன்று வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிலை பொதுத்தேர்வினை […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2024 எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு […]

சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 414 மற்றும் 412 மதிப்பெண்கள் எடுத்து சாதனை

சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 97.02% ஆகும். இது மாநில அளவிலான தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிலும் இதே இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை அருகே பழமலை நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 500 -க்கு 414 மற்றும் 500 […]

கோனேரி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி வீ.தாமரைச்செல்வி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் செய்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகள் குறித்தும் , மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும், இயற்கையில் கிடைக்கும் விவசாயக் […]

குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 வருடம் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம்; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்பு உடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை, ரூ. 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் […]

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுக்கான  பயிற்சி வகுப்பு ! மாவட்ட கலெக்டர் பங்கேற்பு !!

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி IV க்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்பொழுது தொகுதி-IV க்கான போட்டி தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நோக்கம் தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் எளிதாக […]

இராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி ! 

இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7761 மாணவர்களும், 7931 மாணவிகளும் என மொத்தம் 15,692 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி 7372 மாணவர்களும், 7749 மாணவிகளும் என மொத்தம் 15,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி […]

தேவர்குளம் காவல் நிலைய பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; வைகோ அறிக்கை..

தேவர்குளம் காவல்நிலையப் பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல்நிலையத்திற்கு வழக்கு சம்மந்தமாக வரும் பொதுமக்களிடம் அங்கு பணியாற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் அத்துமீறி நடந்து, இளைஞர்கள், மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. தேவர்குளம் காவல்நிலைய செயல்பாடுகளைக் கண்டித்து 08.05.2024 அன்று குறிப்பிட்ட […]

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை 14 வயது சிறுமிக்கு மேம்பட்ட சிகிச்சை முறை

மீனாட்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மேம்பட்ட சிகிச்சை. எலிக்கொல்லி விஷத்தில் இருந்து 14 வயது சிறுமியை காப்பாற்றியுள்ளது பல்துறை சார்ந்த முக்கிய சிகிச்சை மற்றும் பிளாஸ்மாஃபெரிசிஸ் எனப்படும் மேம்பட்ட சிகிச்சை முறையின் வருகையால், டெல்டா பகுதியில் கடந்த 15 முதல் 2 ஆண்டுகளாக எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பலதுறை முக்கிய சிகிச்சை பிரிவைக் கொண்ட முதல் மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, மிகவும் கொடிய எலிக்கொல்லிய […]

திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ! கீழக்கரை தாசில்தார் விரைந்து வந்து உதவி !!

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற ஒன்றாம் நம்பர் அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று சைடு கொடுக்காமல் சென்றதால் அதனை முந்த முற்பட்ட அரசு பேருந்து சருக்கலில் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கவிழ்ந்த பேருந்தில் இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் வட்டாட்சியர் வாகனத்தில் […]

கீழக்கரையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கைது !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனி முகம்மது என்பவரின் மகன் கை என்ற முகமதுகான் (வயது 32) இவரும் கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சதாம் என்ற சதாம் உசேன் (34) என்பவரும் தொடர்ந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு […]

வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி USP கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால் ட்ரோன்கள் (Drones), ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System RPAS) பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் […]

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்திற்கான விருது; ஒன்றிய அரசின் காயகல்ப் மதிப்பீட்டில் முதலிடம்.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 2023 24 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வழங்கும் மாநில அளவிலான அனைத்து மருத்துவமனைகளின் காயகல்ப் மதிப்பீட்டில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று ரூபாய் 50 லட்சத்திற்கான விருதினை தட்டிச் சென்றுள்ளது. ஒன்றிய அரசானது மாநில அளவில் அரசு மருத்துவமனைகளின் […]

ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திரு விழா..

சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா.. தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் மண்டகப்படி ஜமீன்தாரால் நடத்தப்பட்டது. 2ஆம் நாள் மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3ஆம் நாள் மண்டகப்படி செட்டியார், பிள்ளைமார் சமூகத்தினர் சார்பிலும், 4ஆம் நாள் மண்டகப்படி நாடார் சமுதாயமும், 5ஆம் நாள் மண்டகப்படி […]

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவி மூ.சூரிய லட்சுமி தெரிவிக்கையில் :- விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி பருத்தி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் . பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி […]

தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைபள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு.. தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதிய 131 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!