ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் விருது விழா !

ராமநாதபுரம் தனியார் மஹாலில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சேர்மன் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா முன்னிலை வகித்தார். இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் […]

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை; பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பின்வரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய […]

கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி வேளாண்மை கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் […]

மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..

இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்.. இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் […]

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி […]

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..

தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (2024) எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் […]

தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா..

பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ.. கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடியாரின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் மாவட்ட கழகம் சார்பில் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முன்னாள் எம்பி முருகேசன் […]

பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி குறித்து செய்முறை விளக்கம் ! விவசாயிகள் பங்கேற்பு !!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் […]

முதலியார்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பங்கேற்பு..

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் பங்கேற்பு.. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் கலந்து கொண்டார். தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. காந்தி நகரில் உள்ள, பக்கீர் […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்ற புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு; காவல்துறையினர் பங்கேற்பு.. தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் வருகின்ற 01.07.2024  அன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பு […]

சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் […]

இலங்கை பொருளாதரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது ! இலங்கை அமைச்சர் அஹ்மத் சாதிக் பேட்டி !!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது என்று இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் கூறினார்.தஞ்சை பூக்கார 1-ம் தெருவைச் சேர்ந்தவர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ். இவர் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி […]

தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டம் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் 10.05.2024 அன்று வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிலை பொதுத்தேர்வினை […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2024 எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு […]

சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 414 மற்றும் 412 மதிப்பெண்கள் எடுத்து சாதனை

சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 97.02% ஆகும். இது மாநில அளவிலான தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிலும் இதே இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை அருகே பழமலை நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 500 -க்கு 414 மற்றும் 500 […]

கோனேரி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி வீ.தாமரைச்செல்வி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் செய்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகள் குறித்தும் , மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும், இயற்கையில் கிடைக்கும் விவசாயக் […]

குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 வருடம் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம்; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்பு உடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை, ரூ. 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் […]

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுக்கான  பயிற்சி வகுப்பு ! மாவட்ட கலெக்டர் பங்கேற்பு !!

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி IV க்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்பொழுது தொகுதி-IV க்கான போட்டி தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நோக்கம் தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் எளிதாக […]

இராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி ! 

இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7761 மாணவர்களும், 7931 மாணவிகளும் என மொத்தம் 15,692 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி 7372 மாணவர்களும், 7749 மாணவிகளும் என மொத்தம் 15,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!