வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தென்காசி மாவட்ட கலெக்டர் மரியாதை..

தென்காசி மாவட்டத்தில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை.. வீர வாஞ்சிநாதன் 113வது நினைவு நாளினை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி, நகர் மன்ற உறுப்பினர்கள் ரஹீம், மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, செங்கோட்டை நூலகர் ராமசாமி, வீர வாஞ்சிநாதன் வாரிசு ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி கோபால கிருஷ்ணன், சுதந்திர […]

தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடிய மாணவ மாணவிகள்..

தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடிய மாணவ மாணவிகள்.. “நான் முதல்வன்” மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய SCOUT திட்டத்தில் இங்கிலாந்தின் டர்ஹம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று தாயகம் திரும்பிய 25 மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது ஈரோடு, எம்.பி.நாச்சிமுத்து ஜெகன்நாதன் பொறியியில் கல்லூரியில் ECE துறையில், மூன்றாவது வருடம் படித்து வரும் மாணவி பேசியதாவது: நான் அரசு பள்ளியில் படித்ததால், புதுமைப்பெண் திட்டத்தின் […]

ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்த இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள்..!

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும் என்றும் அரசு பஸ்களில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். […]

மதுரையில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

மதுரையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல். மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி முருகன் என்பவரின் மகளான ரம்யா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்று தற்போது […]

மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை..

மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “நபி வழி திடல் தொழுகை நடத்தினர். 300 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ ஸ் மகால் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ” பக்ரீத் பண்டிகையை ” முன்னிட்டு […]

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் கலை பதிப்பகம் இணைந்து பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையிலான 50 இலக்கிய கூட்டங்கள் பள்ளிக் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் என 100 கூட்டங்களை நடத்தி முடித்தனர். அந்நிகழ்வில் நிறைவு விழா […]

நபி­களாரின் போதனைகள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக பெருநாள் வாழ்த்து..

நபி­களாரின் போத­னை­கள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக திருநாள் வாழ்த்து.. நபி­களாரின் போத­னை­கள் மனி­தர்­கள் தங்களது அன்றாட வாழ்­வில் கடை­பி­டிக்க வேண்­டிய அறவழிக்கான அறிவுரைகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் தியாக திருநாள் வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்! ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி […]

கீழக்கரையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை ! உலக மக்கள் அமைதிக்காக கூட்டுப் பிராத்தனை !

,  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஓடக்கரை பள்ளி ஜமாத் சார்பில் 18 வாலிபர்கள் தர்கா அருகில் அமைந்துள்ள திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும்  கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். பக்ரீத் திருநாள் என்பது இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் […]

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை..

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை.. பெத்தநாடார்பட்டியில் அரவிந்த் கண் மருத்துவமனை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்பு விழிப்புணர்வு குழு இணைந்து கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 93 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெத்தநாடார்பட்டி தொழிலதிபர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனர் இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் ஆகியோர் […]

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க தென்காசி மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை..

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி தெற்கு திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், […]

தென்காசி மாவட்டத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் […]

அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்..

அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன் வலியுறுத்தல்.. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத கனிமவள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே. ரவி அருணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செல்லும் […]

திப்பணம்பட்டி அரசு நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா; பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

திப்பணம்பட்டி அரசு நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா; பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்.. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கோடை கால இலவச ஆங்கில வகுப்பு மற்றும் பொது அறிவு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் […]

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்; சிபிஐஎம் மாநில செயலாளர் கண்டனம்..

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்; சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதலுக்கு சிபிஐஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய கண்டன அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் […]

சங்கரன்கோவிலில் காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது..

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே கேட் அருகே பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுபோதையில் இருந்த மூவரும் காவல்துறையினரிடம் தங்களை எப்படி நிறுத்தி சோதனை செய்யலாம் என்று பிரச்சனை செய்து அவர்களை […]

அரியமானில் மாபெரும் கடற்கரை திருவிழா !  பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்திட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !! 

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் இன்று (15.06.2024) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கடற்கரை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இவ்விழா இன்று துவங்கி 17.06.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் கடற்கரை கைப்பந்து போட்டிகள், கால்பந்து போட்டிகள், இரவு மின்னொளி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், வகை வகையான உணவு கூடாரங்கள், படகு சவாரி, டிஜே மியூசிக், தண்ணீர் விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்று 15.06.2024, 16.06.2024, […]

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்; காவல் துறையினர் பாராட்டு.

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு. சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரின் நற்செயலை காவல்துறையினர் பாராட்டினர். நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர்குளம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார் (40) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து […]

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு சரக்குந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்..

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு சரக்குந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.. தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சரக்குந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், தென்காசி அருகே குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் சரக்குந்து மோதி ஒரு […]

தென்காசியில் குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு..

தென்காசியில் உலக குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர்களை பாராட்டும் விதமாக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு அதிக ரத்த தானம் வழங்கிய குருதிக் கொடையாளர்களை பாராட்டி சிறப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கினார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் […]

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை !

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில்  காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்ச பணம் பெறுவதாக இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கணக்கில் இருந்து வராத ரூ.1,38,000 பணம்  கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சுரேஷ்பாபு, மேலாளர் , ஹரிஹரன் , தற்காலிக பணியாளர்  சதீஸ், இளநிலை உதவியாளர் , அருளானந்தம் அலுவலக கண்காணிப்பாளர் ஆகிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!