ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது !   

இராமநாதபுரம் வசந்த் நகரில் ரேசன் அரிசி கடத்துவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட போது டாடா நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் 18 மூட்டை கொண்ட 630 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடத்திய வாகனங்களை கைப்பற்றப்பட்டது. மேலும்  குமாரவேல் , குகன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது […]

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வருகை ! அரசின் மெத்தன போக்கு தான் கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு காரணம் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21 எஸ் டி பி ஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எஸ் டி பி ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வருகை புரிந்தார். மேலும் சமீபத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவித் தொகையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பெரியபட்டினம், மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், நம்புதலை, திருப்புல்லாணி இராமநாதபுரம் நகர் […]

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நெல்லையில் நடத்தப்பட வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நெல்லையில் நடத்தப்பட வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்.. தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக பாளையங்கோட்டையில் நடந்த இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வில் பேசிய கவிஞர் பே.இராஜேந்திரன் “தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியை இந்த ஆண்டு திருநெல்வேலியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்திப் பேசினார். தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 100 கல்லூரி மாணவ மாணவியர் […]

தென்காசி கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.. தென்காசி இலத்தூர் விலக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம். செங்கோட்டை வட்டம், இலத்தூர் விலக்கு அருகில் கடந்த 13.06.2024 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தென்காசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், கொல்லத்திலிருந்து திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்து கொண்டிருந்த […]

எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி..

திருப்பரங்குன்றம் வில்லாபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலவரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் சம்சுதீன் மற்றும் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தனர். டிராவல்ஸ் ஆசிப் மற்றும் முகமது இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினர். மதுரை மாவட்ட […]

சோழவந்தான் அருகே விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்..

சோழவந்தான் அருகே விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி முத்துலட்சுமி இவர்களின் மகன் நாகரத்தினம் வயது 28. இவர் இந்திய ராணுவத்தில் நாக்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த நாகரத்தினம் நேற்று முன்தினம் அங்கு நடந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடல் இன்று காலை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அவரது சொந்த […]

சட்டமன்ற கவன ஈர்ப்பு தீர்மானம்; பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை..

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இங்கு பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. செல்வப்பெருந்தகை, திரு. வேல்முருகன், திரு. கோ.க.மணி, திரு. ஈஸ்வரன், திரு. வீ.நாகைமாலி, திரு. நயினார் நாகேந்திரன், திரு. வைத்திலிங்கம், திரு. சதன் திருமலைக்குமார், திரு. சிந்தனைச்செல்வன், திரு.ராமச்சந்திரன், […]

வீ.கே.புதூர் தாலுகாவில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு..

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வீ.கே.புதூர் தாலுகாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.. “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வீரகேரளம்புதூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற […]

ராமநாதபுரத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் திருவாடானை வட்டாட்சியர் K. கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , கமுதி வட்டாட்சியர் V. சேதுராமன் பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , கடலாடி வட்டாட்சியர் N. ரெங்கராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும் […]

பரமக்குடி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் கைது ! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நடவடிக்கை ! !

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஆர்.எஸ் மங்களம் சாலையில் காடடர்ந்தகுடியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கிஷோர் என்பவர் TN 72 BS 6979 பதிவெண் கொண்ட நான்கு சரக்கு வாகனத்தில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. உடனே கடத்திய ரேசன் […]

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து..

சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள கம்போடியா நாட்டிற்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து தெரிவித்தார். போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதியான குருநாதன் – மாரீஸ்வரி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கமும் 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை […]

மதுரை வந்தடைந்த இராணுவ வீரரின் உடல்..

மதுரை வந்தடைந்த இராணுவ வீரரின் உடல்.. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆட்டோ விபத்தில் பலியான முள்ளிப்பள்ளம் ராணுவ வீரரின் உடல் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் நாகரத்தினம் (வயது 28) இவர் ராஜஸ்தான் (டெல்லி ) ஆறாவது கார்டு ரெஜிமென்ட் படை பிரிவில் லேன்ஸ் நாயக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அலுவல் பணி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள […]

கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக கூட்டத்தில் தீர்மானம்..

கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக வலியுறுத்தல்.. பொட்டல்புதூர் கடையம் வழியாக கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்லும் ராட்சத கனரக லாரிகளால் விபத்துக்களும், போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டு வருவதால், கனிமவள லாரிகள் கடையம் பொட்டல்புதூர் சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுமுக-மமக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தமுமுக-மமக பொட்டல் புதூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் பொட்டல்புதூர் அலுவலகத்தில் மமக மாவட்ட செயலாளர் சலீம் […]

கலைஞர் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்..

கலைஞர் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.. தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி மேலபட்டமுடையார்புரம் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வழங்கினார். தென்காசி கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலபட்டமுடையார்புரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த […]

சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..

சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்குட்பட்ட சூரங்குடியில் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தையும், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் கால் மற்றும் வாய்நோய், கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தையும் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாடுகளின் உரிமையாளரின் ஆதார் கார்டு […]

ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு..

ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு.. இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் கல்வி கற்பித்தலில் 17 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்றுள்ளது எனவும், இக்கல்லூரியில் பயின்ற பலர் அரசு அதிகாரிகளாக மாறி வருவதாகவும் கூறி நெல்லை பேராயர் பர்னபாஸ் கல்லூரி நிர்வாகத்தை பாராட்டினார். கல்லூரியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் […]

ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

ராமநாதபுரம்  நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி  வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2  அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் […]

தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்..

தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்.. கலைஞர் ஆட்சியின் நீட்சியாகத் தமிழகத்தில் முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்தியதன் மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது என சுயமரியாதை திருமண விழாவில் பேசிய எம்.பி. கனிமொழி கருணாநிதி புகழாரம் சூட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் நடைபெற்ற மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் த.செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் திமுக துணைப் […]

திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18.06.2024 இன்று சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வுப்பணிகளை காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் […]

டூவீலர்கள் தொடர் திருட்டு ! 3 வாலிபர்கள் அதிரடி கைது..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக, கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!