தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் தகவல்.. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II-ல் உள்ள உதவி […]

குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; 3 பேர் அதிரடி கைது..

குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; கேரள மாநிலத்தை சேர்ந்த மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள RGB ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

தென்காசி வடக்கு மாசி வீதி குடிநீர் தொட்டியினை மாற்றியமைக்க கூடாது; நகராட்சி துணைத் தலைவர் பரபரப்பு மனு..

தென்காசி வடக்கு மாசி வீதி குடிநீர் தொட்டியினை நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது; நகராட்சி துணைத் தலைவர் அனுப்பிய பரபரப்பு மனு.. தென்காசி வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியினை நகராட்சி நிர்வாகம் மாற்றியமைக்க கூடாது என தென்காசி நகராட்சி துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அரசு முதன்மை செயலர் D.கார்த்திகேயன் IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம் சென்னை, மாவட்ட ஆட்சியர் தென்காசி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், […]

கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா  போராட்டம் 

ராமநாதபுரம் மாவட்டம்  மேலக்கோட்டை ரமலான் நகர் அருகாமையில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அப்பகுதி கிராம மக்கள்  தெரிவிக்கையில் .ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர்கள் குழாய் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கின்றது. இந்த நிலையத்திலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளிப்பகுதியில் திறந்து விடுவதால் அதை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதாலும் தொற்று நோய் பரவுவதாலும் […]

ராமநாதபுரத்தில் மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !

இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தார். உலகளவில் போதைப் பொருளின் பயன்பாட்டை தடுத்து நிறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. . அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால் உண்டாகும் தீமைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு […]

போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி; தென்காசி மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

தென்காசியில் சர்வேதேச போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி; மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வேதேச தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில் இன்று (26.06.2024) நடத்தப்பட்ட பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார். […]

தென்காசி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தீவிரம்..

தென்காசி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்.. தென்காசி நகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர், திருநெல்வேலி- விஜயலட்சுமி உத்தரவின் படியும், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் ஆலோசனையின் படியும், தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் அறிவுரையின் படியும், நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தலைமையில் ஆய்வாளர்கள் மகேஸ்வரன், ஈஸ்வரன் மற்றும் […]

மதுரை விமான நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு..

மதுரை விமான நிலையத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு.. மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறையினரால் வைக்கப்பட்ட போதை விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் இன்று போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதை ஒழிப்பு குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் போதை […]

மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு; ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம்..

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.. முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயர்ந்த கோட்பாட்டின் வழியில் ‘எல்லோருக்கும் எல்லாம் என்ற சமுதாய சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, தனது சமூகநீதிப் பயணத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகிறது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதில் […]

மது கஞ்சா லாட்டரி விற்பனை செய்த 84 நபர்கள் ஒரே நாளில் அதிரடி கைது; மாவட்ட எஸ்.பி நடவடிக்கை..

மது கஞ்சா லாட்டரி விற்பனை செய்த 84 நபர்கள் ஒரே நாளில் அதிரடி கைது; மாவட்ட எஸ்.பி நடவடிக்கை.. தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 84 நபர்கள் மாவட்ட எஸ்.பியின் அதிரடி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் […]

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 810 மனுக்கள் பெறப்பட்டதுடன், ரூ. 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. […]

ராமநாதபுரத்தில் மூன்று வயது மாணவன் சாதனை

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோப்பாஸ் மழலையர் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்குபெறச்செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் படித்து வரும் க.தெய்ஜன் என்ற 3 வயது மாணவன், Rubik’s Cube யை 45 வினாடிக்குள் முடித்து World Wide Book Of Record மற்றும் Indian Book Of Record ல் இடம்பெற்றுள்ளார். மேலும் மாணவனின் பரிசு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்திஷ் IPS பார்வையிட்டு […]

கீழக்கரை 18 வாலிபர்கள் தர்காவில் கந்தூரி விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்திருக்கும் 18 வாலிபர்கள் தர்ஹாவின் 850ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜமாத் தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஜூன் 7 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக 18 நாட்கள் மௌலித் என்றும் ( புகழ் மாழை) ஓதி உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவான இன்று முஹம்மது காசிம் இஸ்லாமிய இசை கச்சேரி தர்காவின் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை மௌலித் என்றும் ( […]

ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம் ராமாபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்க பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழு இணைந்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் தனபால் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா […]

ராமநாதபுரத்தில் சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக 200க்கும் மேற்பட்ட சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும் , 2022 டிசம்பர் முதல் […]

பெரியபட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் திடலில் இருந்து குதிரைகள் நாட்டியமாட பச்சை வண்ண பிறை கொடி கொண்டு வான வேடிக்கைகளுடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஊர்வலமாக புறப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக மவுலீது என்னும் (புகழ் மாலை) ஓதப்பட்டது. […]

புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை; காவல் துறையினர் விசாரணை..

புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை; காவல்துறையினர் விசாரணை.. புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் உமாதேவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிக்குமாரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உமாதேவி வெள்ளிக்கிழமை […]

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெறும் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெறும் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் இலவச பஸ்பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன்.25 ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ்பாஸ் […]

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: அதிரடி காட்டிய கீழக்கரை வட்டாட்சியர்..

!ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிகமாக விற்கப்படுகிறது என, தொடர்ந்து புகார் வந்ததையடுத்து இன்று காலை கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அனைத்து கடைகளுக்கும் திடீர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் புகார் கூறப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தியதில் அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இதனையடுத்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!