தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 810 மனுக்கள் பெறப்பட்டதுடன், ரூ. 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. […]
Category: உலக செய்திகள்
ராமநாதபுரத்தில் மூன்று வயது மாணவன் சாதனை
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோப்பாஸ் மழலையர் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்குபெறச்செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளியில் படித்து வரும் க.தெய்ஜன் என்ற 3 வயது மாணவன், Rubik’s Cube யை 45 வினாடிக்குள் முடித்து World Wide Book Of Record மற்றும் Indian Book Of Record ல் இடம்பெற்றுள்ளார். மேலும் மாணவனின் பரிசு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்திஷ் IPS பார்வையிட்டு […]
கீழக்கரை 18 வாலிபர்கள் தர்காவில் கந்தூரி விழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்திருக்கும் 18 வாலிபர்கள் தர்ஹாவின் 850ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜமாத் தலைவர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஜூன் 7 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக 18 நாட்கள் மௌலித் என்றும் ( புகழ் மாழை) ஓதி உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது, அதனைத் தொடர்ந்து கந்தூரி விழாவான இன்று முஹம்மது காசிம் இஸ்லாமிய இசை கச்சேரி தர்காவின் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை மௌலித் என்றும் ( […]
ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்ப்பாட்டம் ராமாபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்க பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழு இணைந்து ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் தனபால் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா […]
ராமநாதபுரத்தில் சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக 200க்கும் மேற்பட்ட சி ஐ டி யு போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும் , 2022 டிசம்பர் முதல் […]
பெரியபட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் திடலில் இருந்து குதிரைகள் நாட்டியமாட பச்சை வண்ண பிறை கொடி கொண்டு வான வேடிக்கைகளுடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஊர்வலமாக புறப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக மவுலீது என்னும் (புகழ் மாலை) ஓதப்பட்டது. […]
புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை; காவல் துறையினர் விசாரணை..
புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை; காவல்துறையினர் விசாரணை.. புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் உமாதேவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிக்குமாரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உமாதேவி வெள்ளிக்கிழமை […]
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெறும் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெறும் சிறப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் இலவச பஸ்பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன்.25 ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ்பாஸ் […]
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: அதிரடி காட்டிய கீழக்கரை வட்டாட்சியர்..
!ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அதிகமாக விற்கப்படுகிறது என, தொடர்ந்து புகார் வந்ததையடுத்து இன்று காலை கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமையில் அனைத்து கடைகளுக்கும் திடீர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் புகார் கூறப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தியதில் அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இதனையடுத்து […]
ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது !
இராமநாதபுரம் வசந்த் நகரில் ரேசன் அரிசி கடத்துவதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட போது டாடா நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் 18 மூட்டை கொண்ட 630 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடத்திய வாகனங்களை கைப்பற்றப்பட்டது. மேலும் குமாரவேல் , குகன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது […]
ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வருகை ! அரசின் மெத்தன போக்கு தான் கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு காரணம் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு !!
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 21 எஸ் டி பி ஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எஸ் டி பி ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வருகை புரிந்தார். மேலும் சமீபத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவித் தொகையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பெரியபட்டினம், மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், நம்புதலை, திருப்புல்லாணி இராமநாதபுரம் நகர் […]
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நெல்லையில் நடத்தப்பட வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நெல்லையில் நடத்தப்பட வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்.. தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக பாளையங்கோட்டையில் நடந்த இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வில் பேசிய கவிஞர் பே.இராஜேந்திரன் “தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியை இந்த ஆண்டு திருநெல்வேலியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்திப் பேசினார். தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 100 கல்லூரி மாணவ மாணவியர் […]
தென்காசி கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.. தென்காசி இலத்தூர் விலக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம். செங்கோட்டை வட்டம், இலத்தூர் விலக்கு அருகில் கடந்த 13.06.2024 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தென்காசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், கொல்லத்திலிருந்து திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்து கொண்டிருந்த […]
எஸ்டிபிஐ கட்சி சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கி செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி..
திருப்பரங்குன்றம் வில்லாபுரம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 16ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலவரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் சம்சுதீன் மற்றும் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தனர். டிராவல்ஸ் ஆசிப் மற்றும் முகமது இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினர். மதுரை மாவட்ட […]
சோழவந்தான் அருகே விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்..
சோழவந்தான் அருகே விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி முத்துலட்சுமி இவர்களின் மகன் நாகரத்தினம் வயது 28. இவர் இந்திய ராணுவத்தில் நாக்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த நாகரத்தினம் நேற்று முன்தினம் அங்கு நடந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடல் இன்று காலை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அவரது சொந்த […]
சட்டமன்ற கவன ஈர்ப்பு தீர்மானம்; பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை..
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இங்கு பேசிய மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. செல்வப்பெருந்தகை, திரு. வேல்முருகன், திரு. கோ.க.மணி, திரு. ஈஸ்வரன், திரு. வீ.நாகைமாலி, திரு. நயினார் நாகேந்திரன், திரு. வைத்திலிங்கம், திரு. சதன் திருமலைக்குமார், திரு. சிந்தனைச்செல்வன், திரு.ராமச்சந்திரன், […]
வீ.கே.புதூர் தாலுகாவில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு..
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வீ.கே.புதூர் தாலுகாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.. “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வீரகேரளம்புதூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற […]
ராமநாதபுரத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் திருவாடானை வட்டாட்சியர் K. கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , கமுதி வட்டாட்சியர் V. சேதுராமன் பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , கடலாடி வட்டாட்சியர் N. ரெங்கராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும் […]
பரமக்குடி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் கைது ! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நடவடிக்கை ! !
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஆர்.எஸ் மங்களம் சாலையில் காடடர்ந்தகுடியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கிஷோர் என்பவர் TN 72 BS 6979 பதிவெண் கொண்ட நான்கு சரக்கு வாகனத்தில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. உடனே கடத்திய ரேசன் […]
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து..
சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள கம்போடியா நாட்டிற்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து தெரிவித்தார். போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதியான குருநாதன் – மாரீஸ்வரி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கமும் 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை […]