வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கல்..

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை வகித்து புத்தகங்கள் வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், மாணவர்கள் அறிவு மேம்பட அதிகமாக புத்தகங்கள் வாசித்தல் மிகவும் அவசியம். பள்ளி பாடங்களோடு நூலக புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். நிகழ்ச்சியில் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி, தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி […]

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருதிற்கு தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல்” என்னும் பெயரில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் இவ்விருது வழங்கப்பெறுகிறது. இவ்விருதுக்கு தெரிவு செய்யப்படுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25,000 (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) தகுதியுரையும் வழங்கப்பெறும். இவ்வகையில் […]

சமூகங்களிடயே நல்லிணக்கம் ஏற்படுத்துவோம்; பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்..

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள இருதயகுளத்தில் வைத்து, சமய உணர்வுகளின் பரிமாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இயேசுவின் புனித இருதய சகோதரர்கள் சபை, காசனல் சபை, இணைந்து, ஏற்பாடு செய்த (ஐ.ஏ.ஆர்.எஃப்) பன்னாட்டு மத சுதந்திர அமைப்பின், சமய உணர்வுகளின் பரிமாற்றம் கலந்துரையாடல் நிகழ்ச்சி, காசனல் சபை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியப் பிரிவின் முன்னாள் தலைவர் சுப்பிரமணிய ராஜா தலைமையில் […]

நெல்லையில் ஜூலை 23 (நாளை) மின்தடை..

நெல்லையில், 110/33-11KV மேலப்பாளையம் துணை மின் நிலையம், 33/11 KV புதிய பஸ் நிலையம் மற்றும் 33/11 KV ரொட்டியார்பட்டி உப மின் நிலையங்களில் 23.07.2024 (நாளை) மாதாந்திர பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9.00 முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி) செ. முருகன் அறிவித்துள்ளார். மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர் புரம், மத்திய […]

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை யுபிஎஸ்சி தலைவர் எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார் அவர் பதவியேற்று ஓராண்டு கூட ஆகவில்லை அவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான […]

மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் ரயில்வே மேம்பாடு சம்பந்தமாக சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடி வாராந்திர ரயில் மேட்டுப்பாளையம் போத்தனூர் புதிய ரயில்கள் சேவை துவக்கம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் கோவை ரயில்வே பாதையை இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும் மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை மேலும் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா உள்ளிட்ட வட […]

அடவிநயினார் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்வரின் ஆணையின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அமிர்தலிங்கம் 19.07.2024 இன்று தண்ணீர் திறந்து வைத்தார். அடவிநயினார் பாசன திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம் கால், இலத்தூர் கால், நயினாகரம் கால், […]

தென்காசி ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்..

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்கின் பால் சுசி, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் […]

தென்காசி மாவட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருட்டு, வழிப்பறி, போக்சோ தொடர்புடைய பின்வரும் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான கரிவலம்வந்தநல்லூர் பெரியூர் […]

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு (Spot Admission) 31.07.2024 வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), […]

திருப்புல்லாணி வேளாண்மை துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், கழிவு வைக்கோல் மற்றும் இதர பால் கழிவுகளைப் பயன்படுத்தி […]

நல்லிருக்கை கிராமத்தில் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் பேசுகையில் விவசாயிகள் மண் பரிசோதனை […]

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான (15.07.2024) அன்று உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை […]

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி டிஎஸ்பியிடம் திமுகவினர் புகார்..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினரால் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலைஞரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடம் தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர் மனு அளித்தார்.    அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் […]

தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டம்; நாளை துவக்கம்..

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் 17,349 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது 15.07.2024 முதல் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் கீழச்சேரி கிராமத்தில் உள்ள […]

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையானூர், பொடியனூர், சின்னநாடானூர், சாலடியூர், கோட்டை விளையூர் ஆகிய பகுதிகளில் 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரான குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி முருகன், வார்டு உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்கள் பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு […]

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்..

மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுமக்களிடம் […]

ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர்; விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை..

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர் உள்ளது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிபள்ளம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்று சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். […]

கலைஞர் குறித்த அவதூறு பாடல்; சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே-டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை..

கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி, அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை; அதன் தொனி, சாதாரண மனிதர்களின் தொனியல்ல! அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே.! என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அவர்களை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவோ புனையப்பட்டதாகக் கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது […]

கடையம் பகுதியில் விவசாய சேவை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள கடையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையத்தை 13.07.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து விவசாயிகளுக்கு கால்நடை தீவன விற்பனையை தொடங்கி வைத்தார்.    தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் தயாரிப்புகளான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!