இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் முன்னாள் மாணவ ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவ ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏஞ்சலின் வரவேற்றார். முன்னாள் முதல்வர் முனைவர் சகுந்தலா இஸ்ரேல், முன்னாள் பொறுப்பு முதல்வர் சில்வியா கேத்தரின், முன்னாள் பேராசிரியர்கள் ஜான்சி தேவநேசம், மெர்சி ஜோகன்னா, அலுவலக முன்னாள் அலுவலர்கள் வெற்றி, பிரிசில்லா சுகி ஆகியோர் […]

அரசியல் வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பதா?; டிஜிபி தேவாரம் எழுதிய நூலில்..

தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், தம் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் குறிப்புகள் பற்றிய நூல் ஒன்றினை எழுதியுள்ளார். “மூணாறிலிருந்து மெரினா வரை” எனும் தலைப்பில் எழுதிய அந்த நூலில் “அரசியல்வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பது சரியில்லை” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டிஜிபி வால்டர் தேவாரம். அவர் எழுதிய புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்டர் தேவாரம் என்ற பெயரைக் கேட்டாலே கூன் விழுந்த முதுகும் நிமிர்ந்து நேராகும். […]

நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று மின்தடை..

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உபமின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய்க் கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் […]

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் – உயர்வுக்குப் படி 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் – உயர்வுக்குப் படி 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இதில் தென்காசி மண்டலத்தில் வரும் […]

சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்; தமிழ்செல்வன் எம்எல்ஏ மற்றும் விழித்தெழு இயக்கம் வலியுறுத்தல்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பை – தென் தமிழகம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் மற்றும் ரயில் எண் 11021 தாதர் – நெல்லை சாளுக்கியா எஸ்பிரஸ் ரயிலை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சீயோன் – கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன் மற்றும் மும்பை விழித்தெழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் ஆகியோர் கூடுதல் பொது மேலாளர் பிரபாத் ரஞ்சனை நேரில் சந்தித்து […]

பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவன்; தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து..

பாராலிம்பிக்ஸ்-2024 பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, பாராலிம்பிக்ஸ் 2024-ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது இந்தச் சிறந்த சாதனை; மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. […]

கடையம் அருகே உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம்; விரைந்து சீரமைக்க சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..

உயிர் பலி வாங்க துடிக்கும் ஆபத்தான மெகா பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக சரி செய்திட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, திருமலையப்பபுரத்தில், தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில், வெங்கடாம்பட்டி விலக்கு, ரவண சமுத்திரம் விலக்கு என நான்கு சாலைகள் பிரியும் பகுதி உள்ளது. இதில் வெங்கடாம்பட்டி செல்லும் சாலை கடையம் யூனியனுக்கு சொந்தமானதாகும். இந்த சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான மெகா பள்ளத்தில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் விழுந்து […]

சோழவந்தான் அருகே மயானத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தான் அருகே மயானத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகுதியில் வைகை ஆற்றங்கரையில் மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக அங்கிருந்த மரங்களை வெட்டி எடுத்து சென்றதாகவும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எங்களுக்கே தெரியாமல் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளதாக கூறியதாகவும் ஆகையால் மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு […]

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்..

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 11.09.2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்வோர்கள் கடைப்பிடிக்கபட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவுறுத்தல்களை மாவட்ட எஸ்.பி வழங்கினார். அஞ்சலி செலுத்த செல்வோர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள். அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சொல்வோர் பயணியர் பயணிக்க […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் நடந்த தேசிய கருத்தரங்கம்..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ தங்கம் முன்னிலை வகித்தார். மாணவ ஆசிரியர் காவ்யா வரவேற்றார். குஜராத் அதானி துறைமுக இனோவேஷன் மேலாளர் சுப்பிரமணியன் கல்வியின் சிறப்பு, தனித்திறன் வளர்ச்சி, வளரும் நவீன தொழில் நுட்பம் குறித்து பேசினார். சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பிரான்சிஸ் […]

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் பணம் இழக்கும் அபாயம்; நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் எச்சரிக்கை..

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் (செயலி) மூலம் பணம் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா.மூர்த்தி தெரிவித்ததாவது, Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. […]

ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு அதிகாரிகளுக்கு நன்றி..

ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம் செய்யப்பட்டதற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் ரயில்வே மேலதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தை, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், வீராசமுத்திரம், மந்தியூர், தர்மபுரம் மடம், கோவிந்தப்பேரி, வாகைகுளம், நாணல்குளம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், உள்ளிட்ட பல கிராம மக்கள், ரயில் பயண தேவைகளுக்காக, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் தெரியாத நபர், ரயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்ததால் […]

தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்கள்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள்,  ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, […]

மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சாலை மறியல்..

மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்களுக்கான 105 மாத DA நிலுவை தொகை வழங்க வேண்டும், 20 மாத பணபலன்களை உடனடியா விடுவிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் […]

முக்கிய சரித்திர குற்றவாளியை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசார்; மாவட்ட எஸ்.பி பாராட்டு..

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து குற்றவாளி பாலமுருகனை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் வெகுவாக பாராட்டினார். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு […]

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி; அதிக பயணிகள் இல்லாததால் உயிர்பலி தவிர்ப்பு..

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்தது. பயணிகள் அதிக அளவு இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பசுமலை,  மூலக்கரை அருகில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பிகள் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் அந்த வழியாக  வந்த தமிழ்நாடு அரசு மாநகர  பஸ் மீது  மின்சார கம்பி தாழ்வாக இருந்ததால் அதன் மீது மோதியதில் மின்சாரக் கம்பி  […]

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மதுரை எம்.பி..

மதுரை துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ 46 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சு. வெங்கடேசன் எம்பி நன்றி. தெரிவித்துள்ளார். திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் – மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். […]

சமயநல்லூர் அருகே தனியார் ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்..

மதுரை சமயநல்லூர் அருகே 6 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ட புலி நகர் பகுதியில் உள்ள சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45 கோடியை உடனடியாக வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு […]

தாம்பரம் ரயில் கீழக்கடையம் பகுதியில் நின்று செல்ல வேண்டும்; நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை..

தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், தட்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களையும், மக்கள் தாமதமின்றி பெற டிக்கெட் கவுண்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் ரவணசமுத்திரம், ரயில் நிலையத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக டிக்கெட் […]

தென்காசியில் கொல்கத்தா மாணவிக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவி பணியின் போது கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையும் இணைந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!