தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில், தென்காசி, பொட்டல் புதூர், முதலியார் பட்டி, செங்கோட்டை, அச்சன் புதூர், வடகரை, வீராணம், சங்கரன் கோவில், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், திரிகூடபுரம், உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.   நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெருநாள் சிறப்பு தொழுகை […]

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

ரம்ஜான் பண்டிகை: ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்புத் தொழுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, ராமநாதபுரம் கீழக்கரை புதுமடம் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈத்கா திடலில் […]

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய விழா.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முன்நின்று நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் இலக்கிய விழா  நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா மொழிதான் நம் உயிர் மொழிதான் நம் வாழ்வு என்பதை உணர்ந்து இலக்கிய வாசிப்பில் மாணாக்கர்கள் ஈடுபடவேண்டும்  அதன் மூலம் ஒரு நல்ல அறிவுச் சமூகத்தை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் சிந்துவெளியும் தமிழும் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு.!

*மேட்டுப்பாளையம் நகராட்சி தூய்மை பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய CITU தொழிற்சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் மனு*     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள TECTUS INFRA Pvt லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எடுத்திருந்தது மேற்படி ஒப்பந்த நிறுவனத்திடம் சுமார் 180 க்கு மேற்பட்ட ஆண் பெண் உட்பட தூய்மை பணியாளர்கள் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு […]

மேட்டுப்பாளையத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் தொழில் சார்ந்த மையங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன நகர்ப்புற உள்ளாட்சி விதிப்படி புதிதாக தொழில் தொடங்குபவர்கள் புதியதாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் ஏற்கனவே தொழில் உரிமம் பெற்று தொழில் செய்பவர்கள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் தொழில் உரிமம் இல்லாமல் வியாபாரம் […]

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்.!

*மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா அவர்களின் மேற்பார்வையில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி சம்பந்தமாகவும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தும் போக்சோ சட்டம் […]

பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி இராமநாதபுரத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் சார்பில் ராம்நாட் ஓலை உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் பனை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் 20 பனை ஓலை கைவினைஞர்களுக்கு ஆறு நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியினை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் ராம்நாட் […]

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு.!

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பாடல்கள் வெளியீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2-6 தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி கவிஞர் யுகபாரதி எழுதி, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் இசைகோர்வையில், தம்மா தி பேண்ட் குழுவினர் பாடிய மாநாட்டு முன்னோட்ட பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிபேழை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஒலிப்பேழையை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு […]

தமிழகத்தில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், வட மாவட்டங்களில் இன்று 103°F வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டிலும் இன்று வெயில் சுட்டெரிக்கும்.   குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்ப நிலை அதிகரிக்கும். பகல் நேர வெப்ப நிலை அதிகரித்தாலும் தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பதிவாக […]

கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்: ஆபத்தான வயர்களை அகற்றக் கோரிக்கை..!

கீழக்கரையில் மின்கம்பங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் இணையதள இணைப்பு வயர்கள்: ஆபத்தான வயர்களை அகற்றக் கோரிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மின் கம்பங்களில் தனியார் இணையதள வயர்கள் மற்றும் கம்பிகள் பொருத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால், கீழக்கரை நகர் முழுவதும் மின்வெட்டுகள் ஏற்பட்டு அவ்வப்போது பழுது பார்க்க வரக்கூடிய ஊழியர்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மின்வாரியத்தூருக்கு தகவல் கொடுத்தால் கண் துடைப்பிற்காக அரசு கேபிள்களை துண்டித்து விட்டு தனியார் கம்பிகளை விட்டு செல்கின்றனர் என […]

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி தேவகோட்டை முகமதியார் பட்டினம் பகுதியில் தனியார் மஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் அஸ்ரி சஹ்ரின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் பாஸ்டர் மார்க், தமுமுக மாநிலத் தொண்டர் […]

இராமநாதபுரத்தில் தொடங்கியது 7வது புத்தகத் திருவிழா.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முகவை சங்கம், மாவட்ட நிர்வாகம் பள்ளிகல்வித்துறை பொது நூலக இயக்கம்,மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தக திருவிழாவானது பத்து நாட்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறும் இந்த 7-வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் இதில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் முன்னதாக மாவட்ட ஆட்சியரை […]

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மண்டல அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுத் திறன் போட்டி.!

இளைஞர் பாராளுமன்ற பேச்சு போட்டி மதுரை மண்டல அளவில் அமெரிக்கன் கல்லூரியில் இரண்டு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் நிகழ்வில் திட்ட அலுவலர் முனைவர். யேசுராஜன் பிரார்த்தனை செய்தார். மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். அமெரிக்கன் கல்லூரித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆ. செல்வன் வரவேற்புரை வழங்கினார். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர். ம. தவமணி கிறிஸ்டோபர் தலைமை உரை ஆற்றினார் மாணவர்களுக்கு ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற கட்டமைப்பு பற்றியும் விளக்க உரையாற்றினார். […]

மேட்டுப்பாளையம் மகாஜன சங்க கட்டிடத்திற்கு நிதியுதவி .!

மேட்டுப்பாளையம் சின்ன மத்தம்பாளையம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கட்டிடத்திற்கு SMT. K.கல்யாணசுந்தரம் 20 லட்சம் ரூபாய் நன்கொடை நிதியுதவி கோவை மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அமைப்புகளால் சின்னமத்தம் பாளையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளையின் அறங்காவலரும் காரமடை எஸ் எம் டி குழும நிர்வாக இயக்குனருமான கே கல்யாணசுந்தரம் அவர்கள் கட்டிட நிதி நன்கொடையாக இருபது 20 லட்சம் ரூபாய் வழங்கினார் இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து […]

கடும் மழையிலும் மீட்பு பணியை மேற்கொண்ட கோவை மேட்டுப்பாளையம் காவல்துறையினர்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மாலை பரவலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது இதனால் மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையான ரயில் நிலையம் சாலையில் சிவன் தியேட்டர் அருகில் மிகப் பிரமாண்டமான மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்துவிட்டது இந்த சாலையை கடந்து தான் மேட்டுப்பாளையத்தில் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் இதனால் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சின்னக்காமணன் தலைமையில் காவல்துறையினர் பலத்த மழை இருக்கிடையே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக […]

ஷாம்பியன்ஷிப் கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறை; துணை முதலமைச்சர் பாராட்டு..

இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றது. கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறையினருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். 25-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் […]

இலஞ்சி பி.எட் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில், தென்காசி வி.டி.எஸ்.ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் கல்லூரி மாணவிகள் இடையே நடந்தன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) கலா வென்சிலா வரவேற்றார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதலை தடுத்தல், வனப் பாதுகாப்பு, போதை தடுப்பு ஆகியவற்றை […]

தேவகோட்டையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை.!

தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ முளைக்கொட்டு பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழா ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு காமாட்சி அபிராமி சரஸ்வதி சந்தான லட்சுமி பகவதி அம்மன் மீனாட்சி வைஷ்ணவி போன்ற சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் […]

தென்காசியில் இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம்..

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி, பணி மற்றும் சிகிச்சைக்குச் செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் (22.03.2025) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. […]

பிள்ளையார்பாளையம் ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா.!

மதுரை மாவட்டம் வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோடு பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் பதினோராம் ஆண்டு வருடாபிஷேக விழா மதுரா பில்டிங்ஸ் உரிமையாளரும் கோவில் அறங்காவலருமான வி கே தர்மராஜ் தலைமையில் மதுசூதனன் என்ற கணேஷ்ஐயங்கார் முன்னிலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மதுர விநாயகர் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் தீபாரதனையும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிழவகராஜன் பாண்டியன் ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!