கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” எனும் நூலை தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். நூலின் முதல் படியை நியூஸ் -18 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ச. கார்த்திகைச் செல்வன் பெற்றுக் கொண்டார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நெல்லையில் கவிஞர் பேரா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவர் கவிஞர் பே.இராஜேந்திரன். நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநரும், தமிழ் […]
Category: உலக செய்திகள்
தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர காலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும், அமைச்சர்களை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருப்பத்தூர் […]
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 07.10.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மூளை முடக்குவாதம் புற உலக சிந்தனையற்ற மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் […]
கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( நாசா) நிதி உதவி..
கேரளா வயநாடு நிலச்சரிவு பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கட்டமைப்பு பணிகளுக்காக கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( நாசா) நிதி உதவி வழங்கியது . பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கட்டமைப்பு , பணியில் முண்ணனியில் செயல்படும் கேரளாவை சார்ந்த *பீப்புல்ஸ் ஃபவுண்டேஷன்* அமைப்பின் வயநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.கே .சமீர் அவர்களிடம் , நாசா அமைப்பிற்கு நல்லுள்ளங்கள் வழங்கிய வயநாடு நிவாரண உதவித் தொகை ₹ 2,55,000 /- ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்திற்கான […]
பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..
Grindr App உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பொது மக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், Google Play Store – Grindr (Gay Chating App) என்ற செயலி (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. […]
Grindr ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பல் அதிரடி கைது..
Grindr எனும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த ஒருவரை தவறான உறவுக்கு தூண்டும் grindr-app மூலம் தொடர்பு கொண்டு சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு அவரை வரவழைத்து முறைகேடாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டி அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர், […]
பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி; 13 வருடங்களுக்கு பிறகு நெல்லையில் மீட்பு..
பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி 13 வருடங்களுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் மீட்கப்பட்டு பஞ்சாப் மாநில காவல்துறை உதவியுடன் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். கடந்த 17.09.2024ஆம் தேதி விஜயநாராயணம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வயது முதிர்வாலும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், தன்னை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க இயலாத நிலையிலும், எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் […]
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி? போலீசார் தீவிர விசாரணை..
தென்காசி மாவட்டம் சங்கனாப்பேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன் கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சங்கனாப்பேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட […]
தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், தட்டம்மை (மீசல்ஸ்) ரூபலா கண்காணிப்பு பணி, பருவ கால நோய்கள் தடுப்பு, புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் அயோடின் பயன்பாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தர கட்டுப்பாடு மற்றும் மாவட்ட சுகாதார பேரவை நடவடிக்கைகள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறை […]
மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது..
மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகார் தாரர் ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whatsapp ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பண பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே […]
தென்காசியில் புத்தக கண்காட்சி..
தென்காசியில் நேஷ்னல் புக் டிரஸ்ட், புதுடில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பால்சுதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை முன்னிலை வகித்தார். செங்கோட்டை நல்நூலகர் ராமசாமி முதல் […]
திருவேங்கடம் மூன்று நபர்கள் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..
திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் ஐந்து நபர்களுக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் […]
சாம்பவர் வடகரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்; பொதுமக்கள் அச்சம்..
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் அதிகமான அளவில் சாலைகளில் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் அதிகமான அளவில் சுற்றி திரிவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை தொடர்கிறது. எனவே சாலையில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை […]
திருவேங்கடம் மூன்று நபர் கொலை வழக்கு; 11 நபர்கள் குற்றவாளி என தீர்ப்பு..
திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட […]
காணாமல் போனவர்கள் பற்றிய சிறப்பு விசாரணை முகாம்..
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பதியப்பட்ட வழக்குகளின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் விதமாக மாபெரும் விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அந்த உட்கோட்டங்களில் விசாரணை முகாம் ஏற்பாடு செய்து புகார் தாரர்களை […]
நில அதிர்வுகளை ஏற்படுத்தும் குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
நில அதிர்வுகளை ஏற்படுத்தும் கல்குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி பொட்டல்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளதாக சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டி, பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், நெல்லை மாவட்டத்தில், ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், கடந்த 22.9.24 அன்று காலை 12 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயந்து சில மணி நேரங்கள் […]
தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நன்றி..
தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் பயன்பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதும் ஆகும். தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார […]
கல்லிடைக் குறிச்சி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து மனு..
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என அமைச்சரிடம் கல்லிடை இரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறனர். நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் அதிக வருவாய் தரும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் உமர் பாரூக், ஆலோசகர் ஜான் பால் […]
விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தல்..
உயிர்பலிகள் ஏற்படும் முன் விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட நிர்வாகத்தை எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளை ஒட்டியுள்ள வடகரை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, புளியரை போன்ற பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் விவசாயிகளையும், வேளாண் நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு மாதமாக வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களை […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு..
நெல்லை தென்காசி மாவட்டங்களில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு ஆகிய பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம், உள்ளிட்ட இடங்களில் சுமார் 11.45am மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.