திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும்; கனிமொழி எம்.பி பேச்சு..

திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும் என கனிமொழி எம்.பி உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவின் போது தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அமர் சேவா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்ட விழா, கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று (28/12/2024) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். […]

தமிழக அரசின் சார்பில் சிங்கப்பூர்  சுற்றுலா: சடையனோடை அரசு பள்ளி மாணவி பவித்ரா சிறப்பு பேட்டி..

திருவண்ணாமலை மாவட்டம் சடையனோடை அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவி  பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடத்தில் , சென்னையில் மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். வெற்றி  பெற்ற  மாணவியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.கவிதா மாணவியின் பெற்றோர் ரமேஷ் […]

மாவூர் பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மானியத்திட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் மாவூர் பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மானியத்திட்டத்தின் மூலம் கறவைமாடுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு பயனாளிகளிடம் பயன்கள் குறித்து கேட்டறிந்ததுடன் சிறப்பாக கறவை மாடுகள் பராமரித்து வரும் மகளிர்களுக்கு ரூ 3000/ – ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார் மாவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயன்பெற்று வரும் பயனாளி வசந்தா முருகேசன்  தெரிவிக்கையில்,எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளாக […]

கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி காலங்களில் வேலைவாய்ப்பை அடைதல் என்ற தலைப்பில் இன்போசிஸ் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐசிடி அகடமின் மேலாளர் பூர்ண பிரகாஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினார் முஹம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை […]

பெண்களின் பாதுகாப்பு திராவிட மாடல் அரசுக்கு மிக முக்கியமானது; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..

பெண்களின் பாதுகாப்பும் முன்னேற்றமும் திராவிட மாடல் அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு நன்றிகள், பாராட்டுகள். ஏனென்றால், நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகள். இவ்வாறு பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால் தான் குற்றச் செயல்கள் […]

தொடர் கன மழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா பகுதியில் தொடர் கனமழையால் நெற்கதிர்கள், நெல் பயிர்கள், கடலை பயிர்கள் என பல ஏக்கர் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இடைப்பழம் நோய் தாக்கப்பட்ட நெல் கதிர்கள் மற்றும் பயிர்களுடன் சென்று ஆட்சியரிடம் பயிர்களை காண்பித்து உரிய அரசு நிவாரணமும், காப்பீடு செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு […]

தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்..

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.12.2024 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிய விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தேவையான நலத் […]

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தம் அளித்த ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்காமலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ இ பி எப் போன்ற தொகைகளை முறையாக செலுத்தாததாலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடந்த 18ஆம் தேதி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து அமைதி மற்றும் சமூக பேச்சுவார்த்தைக்கு […]

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு .!திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பாக அஞ்சலி.!!

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் இந்திய பாரத பிரதமர் பொருளாதார மேதை .டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவர்கள் திருஉருவ படத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காந்தி, ராஜி, மாரி, சுப்பிரமணி, காமராஜ் நேரு அண்ணாமலை ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து  திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் […]

கோமுகி அணை 46 அடி ஆழம் இருந்தும் 28 அடி நீரே சேமிக்க முடிகிறது நீர்பிடிப்பு முழுவதும் மண் மேடாக மாறிய கோமுகி அணை, தூர்வாரி ஆழப்படுத்த கோரிக்கை

கோமுகி அணை கடந்த 1967ம் ஆண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மை கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது முதன்மை பாசன கால்வாய் மூலம் வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூர் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த […]

கரியாலூர் காவல் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு !

*கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி திடீர் ஆய்வு கொண்டார்.* *இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.*

தென்காசி நகர முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..

தென்காசியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சம்சுதீன் கிராத் ஓதினார். மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில், நகர பொருளாளர் முகம்மது யூசுப், மாநில வர்த்தக அணி தலைவர் […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 வது ஆண்டையும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவர் கே, டி. கே, தங்கமணி நினைவு நாளையொட்டியும் முப்பெரும் விழாவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். […]

புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

தென்காசி நகராட்சியில் தூய்மை காவலர்களுக்கு சமபந்தி விருந்து..

தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், […]

“டாம்ப்கால்” நடமாடும் சித்தா மருந்துகள் விற்பனை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பயன்படும் விதம் “டாம்ப்கால்” நடமாடும் சித்தா ஆயுர்வேதா யுனானி மருந்துகள் விற்பனை நிலையத்தினை (24.12.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நடமாடும் டாம்ப்கால் விற்பனை நிலையம் குற்றால அருவிகளின் அருகில் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தரமற்ற, உரிமம் பெறப்படாத மருந்துகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]

நெல்லையில் மின்வாரிய இணைப்பு பணி; பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மஜகவினர் கலெக்டரிடம் மனு..

நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு […]

ஆதரவற்ற பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் அமைப்பினர்; பொதுமக்கள் பாராட்டு..

குற்றாலம் பகுதியில் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த ஆதரவற்ற பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி, கவுன்சலிங் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சாலையில், ராகிணி என்ற 55வயது பெண் ஆதரவற்ற நிலையில் குற்றாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆதரவற்று இருந்த இந்த பெண்மணி மீட்கப்பட்டு குற்றாலம் கலைவாணர் […]

துபாயில் கிரீன் குளோப் மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்..

இன்று (22-12-2024) Green Globe மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், துபாயின் ஜதாஃப் பகுதியில் உள்ள Dubai Health Blood Donation Centreல் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர். Green Globe சார்பில், இரத்த தானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துபாய் ஹெல்த் மையத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்  ஏற்பாடுகளை Green Globe அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் […]

நெல்லையில் பழிக்கு பழி நடந்த கொலை; காவல்துறை விசாரணையில் தகவல்..

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திருநெல்வேலி மாநகரம் பாளையங் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு 20.12.2024 ஆம் தேதி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!