கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் 26 கூட்டமைப்பு இணைந்து ஈதிக மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தினர் தமிழகம் முழுவதும் இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள் பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் […]
Category: உலக செய்திகள்
காவலர்களுக்கு கீழை நியூஸ் பாராட்டு..
விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையினரை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், (இ.விலக்கு ரவுண்டானா அருகில்) வைக்கப்பட்ட பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் விழுந்து காணப்படுகிறது என்றும், விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கீழை நியூஸில் 06.06.2025 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி சமூக ஆர்வலரால் தென்காசி மாவட்ட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு […]
தென்காசி இ.விலக்கு பகுதியில் ஆபத்தான நிலையில் பேரிகார்டு..
தென்காசி இ.விலக்கு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சாய்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இ.விலக்கு ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு சாலையில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. தென்காசி பகுதியில் இ.விலக்கு சாலை அதிக போக்குவரத்து நிறைந்த முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் […]
தென்காசி மாவட்டத்தில் (ஜூன்-04) மின்தடை..
திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஊத்து மலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக்குளம், […]
வீரவநல்லூர் நூலகத்தில் பாராட்டு விழா..
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இசக்கி சரவணன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுழற்கழக தலைவர் நவமணி எழுச்சி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சுழற் கழக செயலாளர் (தேர்வு) பரமசிவன் […]
CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு.!
CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு மற்றும் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது கோவையில் வருகின்ற 2025 நவம்பர் மாதம் 6.7.8.9. ஆகிய தேதிகளில் கோவையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது இந்த மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது இதில் சி பி ஐ எம் மாநில மாவட்ட நிர்வாகிகளும் சிஐடியு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட சி ஐ டி யு […]
ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம்விழா.!
திருவாடானை அருகே ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம் விழா. பக்தர்கள் திரளாக பங்கேற்பு ராமதாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அ.கீழக்கோட்டை கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வோர் நாளும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. திருவிழாவான இன்று பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கருப்பசாமி கையில் அரிவாளுடன் பிள்ளையார் கோவிலில் இருந்து கரகம், மதுக்குடம், சந்தன குடம், […]
திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது. முன்னதாக, அனுஞ்சை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னர், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுள்களின் […]
ஊரணியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், ஊரணியில் மூழ்கி ஒன்பது வயது ரோஷினி மற்றும் பதினொரு வயது பிரசன்னியா ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் இந்த இரண்டு சிறுமிகளும் குளிக்கச் சென்று வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தேடத் தொடங்கினர். ஊரணியின் கரையில் குளிப்பதற்கான பொருட்கள் (வாளி, துண்டு, சோப்பு டப்பா, செருப்பு) கண்டெடுக்கப்பட்டதால், ஊரணிக்குள் தேடுதல் வேட்டை […]
என் மனம் கொண்டான் மற்றும் கோரவள்ளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரவள்ளி மற்றும் என் மனம் கொண்டான் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை என்ற திட்டத்தினை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இம்முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா வரவேற்புரை வழங்கினார். உழவரைத் தேடி வேளாண்மை என்ற பெயருக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அந்தந்த கிராமங்களில் மாதத்தின் இரண்டாம் […]
மேட்டுப்பாளையம் நகராட்சி பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பள்ளிகளில் தேர்வு விடுமுறைக்கு பின்பு வருகின்ற ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளிகள் துவங்க உள்ளதால் தூய்மைப் பணி மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்த பணிகளை நகராட்சி ஆணையாளர் அமுதா பார்வையிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைகளின் படியும், மேட்டுப்பாளையம் நகராட்சிப்பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளிகள் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்திலும் தூய்மைப்பணிகள் மற்றும் […]
வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய 7 பேர்கள் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு..
தென்காசி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் பதவி உயர்வுடன் துணை வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, தென்காசியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருக்மணி கோசலை ராணி வீரகேரளம் […]
திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்.!
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் […]
திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!
திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ‘பனிச்சகுடி’ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு கருப்பன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவிழாவை ஒட்டி பரபரப்பு நிலவி வருகிறது. கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு […]
திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!
திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும் நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் முகூர்த்த நாளான இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!
பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..! மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் […]
வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!!
வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..! ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென […]
தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை.!
தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை தாய் உள்ளிட்ட யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் இரண்டு நாளாக முயற்சி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் நீர் தேக்க பகுதி அமைந்துள்ளது இப்பகுதியில் (மே 26 அன்று) ஆண் குட்டி யானை ஒன்று தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு ஆற்று மீனவர்கள் மூலமாக தகவல் கிடைத்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் […]
காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து கட்டிடம் சேதம்!
நீலகிரி எல்லநல்லி உள் வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம் அடைந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியில் புதிதாக […]
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் […]