பாலமேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வர முடியாத நிலையில் பொதுமக்கள் அவதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்காக பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது இதனால் பாலமேட்டில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கும் […]
Category: உலக செய்திகள்
40வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 40-வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு.செல்வ பாலா ஆகியோர் தலைமையில், கண் மருத்துவர் ராஜலட்சுமி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மூத்த கண் மருத்துவர் மரு.ராஜலட்சுமி, மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் […]
மாநில நல்லாசிரியர் விருது .!மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா.!!
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – மாநில அளவிலான “நல்லாசிரியர்” விருதைப் பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அவர்களுக்கு, இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, சென்னை நகரில் நடைபெற்ற மாநில விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், பள்ளிக்கல்வித் துறை […]
மேட்டுப்பாளையம் ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு லயன்ஸ் இன்டர்நேஷனல் நல்லாசிரியர் விருது.!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கோஇன்டியா வளாகத்தில் லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் “நல்லாசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்காக சென்னை சென்றிருந்ததால், அவரின் சார்பில் மனைவி நர்மதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழா கோவை மாவட்ட கவர்னர் Ln. ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. விருதை அண்ணா பல்கலைக்கழக சேர்மன் […]
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா .!
கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாரிமுத்து (மு.கூ.பொ.) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமது உரையில் அவர், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, அறம் காப்பது மற்றும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி, “விதைத்தவன் உறங்கினாலும் […]
மாதாந்திர மின் பராமரிப்பு பணி; செப்.06 (நாளை) மின்தடை
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் வரும் 06.09.2025 சனிக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 06.09.2025 அன்று பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி பகிராமான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் […]
இலஞ்சி பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..
இலஞ்சி பி.எட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலா வின்சிலா தலைமை வகித்தார். நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்களை மாணவ ஆசிரியர்கள் வாழ்த்தினர். தொடர்ந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், […]
புகையிலை பொருட்கள் கடத்திய நபர் கைது..
கேரள மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை புளியரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 496 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை […]
TNUSRB-TNPSC கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..
தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத […]
கோவை காரமடையில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை பிரச்சாரம்.!
கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர். மாணவ-மாணவிகளிடம் சிறப்பு விருந்தினர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றினர். இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை […]
தென்காசி செங்கோட்டை பகுதிகளில் காவல்துறை அணிவகுப்பு..
விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது மக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், தென்காசி மற்றும் செங்கோட்டையில் காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி யானை பாலம் சிக்னல், மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காசி விஸ்வநாதர் கோவில், சுவாமி சன்னதி வீதி, ஜெமினி லாலா […]
தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் சங்கம் முக்கிய கோரிக்கை..
தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனக் கூறி, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் […]
கடையில் பணம் திருடிய நபர் அதிரடி கைது..
புளியங்குடி பகுதியில் கடையில் இருந்து பணம் திருடிய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள ஓர் கடையில் கடந்த 16.08.2025 அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஷாம் சுந்தர் மற்றும் சார்பு […]
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.08.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொது […]
மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்
கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் “அன்னை சாரதா நடமாடும் மருத்துவ முகாம்” என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் சங்கர் நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர் நந்தா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு, […]
சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா
அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் அன்பு சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வித் துறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து வெள்ளி விழா கண்ட கணினி பயிற்றுநர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பழனி அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், பெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஹரி பிரகாஷ் வரவேற்புரை வழங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ […]
இராஜசிங்கமங்களம் ஒன்றிய தேசியக்கொடி யாத்திரை.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி இராஜசிங்கமங்களம் ஒன்றிய தலைவர் S.M.A. வடிவேலன் தலைமையில் தேசியக்கொடி யாத்திரை சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆரம்பித்து, ஸ்ரீ சமயா கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், காந்திநகர் நூலகம் வழியாகச் சென்று ஸ்ரீ பாண்டிகோவிலில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிவசங்கர், திரங்கா யாத்திரை பொறுப்பாளர் முன்னாள் ஒன்றியத் தலைவர் சசிகனி, மற்றும் M.R. […]
கமுதியில் லஞ்சம் வாங்கிய விஏஓ ப்ரோக்கர் கைது.!
கமுதியில் லஞ்சம் கேட்ட VAO, ரசாயனம் தடவிய ரூ.4,000-உடன் கையும் களவுமாக சிக்கினார்! இராமநாதபுரம்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த ஒருவரிடம், கமுதி தாலுகா தவசிக்குறிச்சி VAO பிரேமானந்தன் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நேராக இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசை அணுகினார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4,000-ஐ ஏற்பாடு செய்தனர். VAO-வின் உத்தரவுப்படி, அந்த பணத்தை கமுதியை சேர்ந்த S.P. டிரேடர்ஸ் உரிமையாளர் […]
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரில் முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி முத்து பரப்புடன் தொடங்கிய விழா ஏழு நாட்கள் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இரவு கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. செவ்வாய்க்கிழமை வழுதூரில் இருந்து கரக ஊர்வலம் கொண்டு […]
மாற்றுத்திறன் படைத்தோரை மகிழ்வித்த வனத்துறை..
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அருவியில் குளிக்க செய்து மகிழ்வித்த தென்காசி மாவட்ட வனத்துறையை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் பொதிகை மலையின் வனப் பகுதிகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்கும் குற்றால அருவிகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அருவிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குளிப்பதற்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் […]
You must be logged in to post a comment.