குணசித்திர நடிகை தண்டட்டி பெருமாயி காலமானார்

இயக்குனர் பாரதிராஜா வின் படங்கள், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் உயிரிழந்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி., 73 வயதான இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி அந்த சீரியல் துவங்கி பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்., தண்டட்டியுடன் காணப்படும் இந்த மூதாட்டி,நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய் ன் வில்லு உள்ளிட்ட படங்கள் […]

திண்டுக்கல் – நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கம்..

திண்டுக்கல் – நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை (மே 5) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் – நாகா்கோவில் இடையே மே 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (புதன், வியாழன் தவிர) சிறப்பு ரயில் (06322) இயக்கப்படுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 9.05 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில், அம்பாத்துரை, […]

நெல்லையில் கடும் வெயில் பதிவாகும்..

தென் மாவட்டங்களில் இன்று (04.05.2025) கடுமையான வெயில் சுட்டெரிக்கும் எனவும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைவாக பதிவாகி வந்த நிலையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தும். தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக புழுக்கம் காணப்படும். எனவே இன்று நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெளியே செல்வதை […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -16 நாடாளுமன்ற விவாதங்களில் பேசப்படும் கருத்துக்கள் அவைக்குறிப்புகளில் பதியப்பட்டு அது ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது. சில சமயங்களில் இவர்கள் எல்லாம் பேசி என்ன பயன்? அவர்களின் பெரும்பாண்மை பலத்தில் சட்டங்களை நிறைவேற்றி சாதித்து விடுகிறார்களே என்று ஒரு போதும் மனச்சோர்வு அடையக்கூடாது. ஒரு ஜனநாயக நாட்டின் உயர்ந்த அவையாக கருதப்படுகிற நாடாளுமன்ற பதிவுகளுக்கு எப்போதும் மரியாதையும் மதிப்பும் உண்டு. சில சமயங்களில் தேவைப்படும் நேரங்களில் அந்த பதிவுக்குறிப்புகள் நீதிமன்றங்களுக்கு […]

சிறந்த கல்வி அளித்து வரும் டிரஸ்ட் இந்தியா பள்ளி..

தென்காசி மாவட்டம் கடையம்- பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது வெங்காடம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் சிறந்த கல்விச் சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டு “டிரஸ்ட்-இந்தியா” எனும் பள்ளியை நிறுவினார். கடந்த 14 ஆண்டுகளாக கல்வி சேவை வழங்கி வரும் இப்பள்ளியின் முதல்வராக சாந்தி திருமாறன் இருந்து வருகிறார். “எட்டு வருடங்கள் உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கட்டும் – அதன் மாற்றம், ஏற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் உங்களுக்குப் புரியும்” என்கிறார் இப்பள்ளி நிறுவனர் […]

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் வாரச்சந்தை அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் 5 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணியானது சுமார் 10,000 க்குமமேற்பட்ட பொதுமக்கள் கூடும் பாலமேடு வாரச்சந்தை நடைபெறும் மையப் பகுதியில் கட்டுமான […]

சோழவந்தான் – பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். ஆர் பி உதயகுமார் சிறப்புரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் அம்மா பேரவை துரை தன்ராஜ் வெற்றிவேல் வக்கீல் திருப்பதி மகளிர் அணி லட்சுமி […]

சோழவந்தான் ரயில் நிலையத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அரை மணி நேரம் ரயில்கள் தாமதமாக புறப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணி அளவில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் வழியாக செல்லும் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றதால்ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர் இன்று காலை 8 மணி அளவில் சோழவந்தான் ரயில் நிலையம் வழியாக பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் […]

கீழமாத்தூர் ஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் கோப்பைகளில் அள்ளி கால்வாயில் ஊற்றும் அவலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -15 பாசிசம் எப்போதும் மக்களை பதட்டத்திலேயே வைத்திருக்கும். பாசிச‌ சித்தாந்தம் மக்களை துன்புறுத்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகிற கொள்கையில் பயணிப்பதால், நாட்டின் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், சமூக நல்லிணக்கம் என்று மக்கள் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் ஆட்சி செய்வதால் மக்களின் சிந்தனைகளை சிதறடித்து, மழுங்கடித்து, மதப்பிளவுகளை உருவாக்கி மக்களை ஒருவித மனப்பதட்டத்தில் வைத்திருப்பது சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தின் ஒரு உத்தியாகும் (Techniqe). குறிப்பாக […]

மே தின விழா..

நெல்லையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் சார்பாக பாளை மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கி மே தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பாளை பகுதி மஜக செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அலிஃப் A..பிலால் ராஜா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மே தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பாளை மண்டல செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -13 பழைய காலங்களில் பொதுவாக வஃக்ப் அதிகமாக செய்யப்பட்டதால் பழைய பள்ளிவாசல்கள்மற்றும் மதரசாக்களுக்கு ஏராளமான சொத்துக்கள் கொடையாக கிடைத்தன. சமீபகாலங்களில் கட்டப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களுக்கு எந்த புதிய வஃக்ப்களும் கிடைப்பதில்லை. புதிய பள்ளிவாசல் மற்றும் மதரசாக்களை கட்டவே பலரின் உதவியை நாடி வசூல் செய்து கட்டி விடுகிறார்கள். ஆனால் அவைகளுக்கான நிரந்தர வருமானம் இல்லாமல் ஆகிவிடுவதால் நிர்வாக செலவுகளுக்கே பெரும் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. ஹஜ்ரத் சம்பளம் முஅத்தின் […]

சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் பேரூராட்சி மூலம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் 2.5.25 மற்றும் 3.5.25 ஆகிய இரண்டு நாட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் முன்பு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தால் தாங்களாகவே அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் […]

கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்.கிராம சபை கூட்டத்தை பாதியிலேயே முடித்துச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழ மாத்தூர் ஊராட்சியின் 5 வது வார்டு ஆதிதிராவிடப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்லாமல் தேங்கி இருப்பதாகவும் மேலும் 200 குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு இதுவரை கழிப்பறை வசதி கூட கட்டித்தரவல்லை எனக்கூறி திருப்பரங்குன்றம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் அவர்களை முற்றுகையிட்டு […]

சோழவந்தானில் சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் மனித உரிமைகள் கழகம் சார்பில்உழைப்பாளர் தின கொண்டாட்டம்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சோழவந்தான் தொகுதி மாவட்டத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பரத் கவுசிகன், மாவட்ட செயலாளர் இளவரசன் துணைச் செயலாளர்கள் குருசாமி, பாபு ராஜ், காசி மாயன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தனர் மதுரை மண்டல மாநிலத் துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்து […]

சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். திரௌபதை அம்மன் அர்ச்சுனன் அலங்கரித்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.திருமண மேடையில் வந்து திருமண கோலத்தில்அலங்காரம் செய்தனர். இதை தொடர்ந்துபிரசாந்த் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை […]

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சாமி திருவீதி உலா வரும் சப்பர தேருக்கும் அபிஷேகம் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும் திருத்தேர் ஊர்வலம் 9ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி தீர்த்தவாரி […]

ஆபரணத் தங்கம் அதிரடி குறைவு! ஒரு சவரனுக்கு 1640 குறைந்தது..

தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 […]

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -13 முஸ்லிம் சமூகம் இன்று குறைகளை மட்டுமே பேசி சண்டையிட்டு கொள்கிறது. இன்றைக்கு பாசிச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க கொஞ்சம் கொஞ்சமாக சட்டங்களை வெளிப்படையாகவே அமல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இன்னமும் முஸ்லிம் சமூகம் விழித்து கொள்ளவில்லை எனில் முஸ்லிம்களின் எதிர்கால சந்ததியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள். இனி முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை பேசி பெரிதாக்காமல், அதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். […]

மையோனைஸ் விற்பனைக்கு தடை; கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் முட்டையில் இருந்து தயார் செய்யப்படும் மையோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அரசிதழ் எண்: 161, ஏப்ரல் 8, 2025 இன் படி, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ ஷவர்மா போன்றவை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!