கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது […]
Category: கீழக்கரை மக்கள் களம்
All about KMK
கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு
கீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கீழக்கரை நகரில் நிலவும் சுகாதரக்கேட்டினை சீர் செய்து டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக உள்ளூரில் இருக்கும் பொதுநல அமைப்புகள், சமூக நல சங்கங்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை […]
கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் […]
கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மனு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் கீழக்கரை வனச் சரக ஆய்வாளர் சிக்கந்தர் பாட்சா குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் குரங்குகளை பிடித்து அதன் வாழ்வாதார பகுதிகளில் விட பரமக்குடியில் இருந்து பிரத்யேக […]
கீழக்கரையில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம், சென்னை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இன்று (30.03.2018) மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவி தொகை, முதியோர், வேலையில்லா பட்டதாரிகளுக்கான ஊக்கத் தொகை உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி அமீர்கான் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு […]
கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது
கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இனிதே ஆரம்பமாகியது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?
கீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த டெங்கு கொசு எங்கு உற்பத்தியாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. தற்போது இந்த டெங்கு கொசுவின் உற்பத்தி தொழிற்சாலை கீழக்கரை நகரின் மைய பகுதியான லெப்பை டீக்கடை அருகாமையில் […]
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பல நேரங்களில் சென்னைக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் சீட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ என்கிற பெயரில் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்
மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு தொலைபேசி வாயிலாக பேசும் மர்ம ஆசாமிகள் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை ரெனீவல் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி வங்கி ATM இரகசிய தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு மர்ம ஆசாமிகள், […]
கீழக்கரை நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது..
கீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் இஸ்லாமிய மக்களும் நாய்களின் தொந்தரவால் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கீழக்கரை நகரில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களையும் மூத்த […]
கேஸ் சிலிண்டர் வினியோக குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.03.2018) எரிவாயு உருளை விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், கீழக்கரை சட்ட போராளிகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு […]
கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு
அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் […]
கீழை மாநகருக்கு வருகை தந்த வரலாற்று ஆய்வாளர் ‘ராஜா முஹம்மது’ – வரவேற்ற ‘பாதன் ஹெரிடேஜ் லீக்’ அறக்கட்டளை
தொன்மை வரலாறுகளை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் கீழக்கரை நகருக்கு சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர் தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது நேற்று முன் தினம் வருகை தந்தார். அவரை கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர். சட்டப் போராளி. அபு சாலிஹ் வரவேற்று கீழை மாநகரின் பல்வேறு சரித்திர பின்னணியுள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்றார். கீழக்கரை பகுதியில் எண்ணற்ற பழங்காலத்து கல்வெட்டுகளும், ஓலை சுவடிகளும், நினைவு தூண்களும், சிற்பங்களும் காணப்படுகிறது. இவற்றையெல்லாம் முறையாக தொகுத்து, பாதன் ஹெரிடேஜ் லீக் எனும் […]
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில தலைவருடன் ‘கீழை நியூஸ்’ நிர்வாகிகள் சந்திப்பு
ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் சிறப்புடன் செய்வதற்கு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் போன்றோரின் அர்ப்பணிப்பு எழுத்துக்களால் சொல்லி விட முடியாது. இந்த பத்திரிகை துறை நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (தமிழ்நாடு பத்திரிகை ஊடகவியலாளர் யூனியன்) என்கிற […]
கீழக்கரையில் கவிழ்ந்து கிடக்கும் ‘தூய்மை இந்தியா’ – சீர்படுத்தி ‘சிறுவர் பூங்கா’ அமைக்க சட்டப் போராளிகள் கோரிக்கை
கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகை நிலமானது ‘அரசுக்கு சொந்தமான நிலம்’ என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி கீழக்கரை நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது. இதனால் இந்த பகுதி மக்கள் டெங்கு. சிக்கன் குன்யா, மலேரியா போன்ற வியாதிகளினால் தொடர்ச்சியாக பாதிப்புக்கு […]
கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்
கீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்களை சூறையாடி வருகிறது. மேலும் கைக் குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தாவித் திரியும் இந்த குரங்குகளை கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் காட்டு குரங்குக்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் […]
கீழக்கரையில் உள்ளூர் ‘வரலாற்று சுற்றுலா’ – அல் பையினா பள்ளி மாணவர்களுடன் வரலாற்று ஆரய்ச்சியாளர்கள் பங்கேற்பு
‘வரலாறு தெரியாதவர்கள் ; வரலாறு படைக்க மாட்டார்கள்’ என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் இன்று நம்முடைய தொன்மையான சரித்திரமும், மூதாதையர் வழி வரலாறும் முறையாக தெரியாததன் விளைவாக நம்முடைய பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய விழுமங்கள், விருந்தோம்பல், சமத்துவ நட்புறவு சித்தாந்தம், ஆதி தொழில், பொருளாதாரம், உள்ளூர் பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு மொழி, ஆரோக்கியம், மருத்துவ முறை, சத்தான உணவு முறை, முத்தான உறவு முறை, பண்டைய உள்ளூர் விளையாட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய விஷயங்கள் எல்லாம் காலப் […]
‘மார்ச் 26’ – கேஸ் சிலிண்டர் வினியோகம் குறித்த ‘குறை தீர்க்கும் கூட்டம்’ – பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ‘மார்ச் 26’ திங்கள் கிழமையன்று மாலை 5.15 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற இருக்கும் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களான இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, […]
‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் […]
‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் […]
You must be logged in to post a comment.