இன்று (ஆகஸ்ட், 12) யானைகள் தினம்…

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 12ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் […]

கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்…

1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். 2. கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். 3. கிரிக்கெட் காதலர் கருணாநிதி […]

கலைஞர் கருணாநிதி – ஒரு சகாப்தம் – பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்தார்..

கலைஞர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மு.கருணாநிதி இன்று (07/08//2018) மாலை 6.10 மணிக்கு இந்த உலகை விட்டு மறைந்து விட்டார்.  இந்தியா ஒரு மூத்த தலைவரை இழந்து விட்டது.  அவர் அரசியலில் மத்தியில் நேரு முதல் மோடி வரையிலும், மாநிலத்தில் பெரியார் முதல் எடப்பாடி வரை சந்தித்த அனுபவமுள்ளவர்.  தொடர்ந்து அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமை உடையவர்.  திமுக எனும் மாபெரும் இயக்கத்துக்கு 50வருடம் தொடர்ந்து தலைமை பொறுப்பு வகித்தவர்.  அவர் கடந்து […]

மறக்க முடியுமா ?? அந்த 2001 ஆகஸ்ட் 6 – கருகிய நாட்களை..

இன்று (06-08-2018) அதிகாலை ஏர்வாடியில் சமய நல்லிணக்க திருவிழாவாக ஏர்வாடி சந்தனக்கூடு கோலகலமாக கொண்டாடிய களிப்பில் மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் கடந்த 18 வருடங்களாக தீயில் கருகிய உள்ளங்கள் இன்னும் விழித்து கொண்டுதான் இருக்கும். இன்றைய தேதியில் கடந்த கால வரலாற்று பக்கங்களை புரட்டினால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் எண்ணற்ற நிகழ்வுகளின் பதிவிருக்கலாம். சர்வதேச அளவில் ஐப்பானில் ஹிரோஷிமா நகரம் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்து அப்படி நகரம் இருந்த அடிச்சுவடு இல்லாமல் போனது. […]

நம் வங்கி கணக்கில் இருந்து எப்படி பணம் திருடப்படுகிறது?? “விழிப்புணர்வு பதிவு”..

உங்கள் வங்கி கணக்கை எப்படி ஹேக் செய்து, பணம் திருடுகிறார்கள்? 1. உங்கள் பெயர் மற்றும் பிறந்த நாளை, உங்கள் முகப்புத்தக கணக்கில் இருந்து முதலில் எடுக்கிறார்கள். 2. இதை வைத்து, வருமான வரித்துறை தளத்திற்கு சென்று, அங்கு அப்டேட் செய்கிறார்கள். அங்கிருந்து, உங்கள் பான் கார்டு மற்றும் மொபைல் நம்பர் எடுக்கிறார்கள். 3. அதை வைத்து, ஒரு மோசடியான பான் கார்டு தயார் செய்கிறார்கள். 4. இதை வைத்து, காவல் நிலையத்தில், மொபைலை காணோம் என்று […]

அறிவோம் சட்டம் – “கிராம சபை”..

“கேள்வி கேட்கும் சமுதாயமே, சிறந்த சமுதாயம்”.. வாருங்கள் கேள்வி கேட்போம்.. கிராம சபையில்… நாம் கீழே விவாதித்திருக்கும் விசயங்களை நாம் நடைமுறை படுத்த தொடங்கினாலே ஊராட்சியில் பல பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும்:- கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?? நாம் என்ன செய்ய வேண்டும் ?? * நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம் * கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம் * கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் * சட்டசபைக்கு இணையான வலிமை= […]

டிராக் வியூ வலையில் சிக்கிய பெண்கள் .கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது.. விழிப்புணர்வு பதிவு …

ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய டிராக் வியூ செயலியை பதவிறக்கம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விவகாரங்களை படம் பிடித்து மிரட்டிய இராமநாதபுரம் கம்ப்யூட்டர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்த வாலிபரை செமத்தியாக கவனித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் இழுத்து வந்தனர். 24 வயது வாலிபரான தினேஷ் குமார். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்வில் விளையாடிய விபரீத சைக்கோ என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. […]

அறிவோம்.. பக்கவிளைவு இல்லா வீட்டு மருத்துவம்…

நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய  ஆரம்பிக்கும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில்  உள்ள அழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது. சிலருக்கு முன், பின் கழுத்து கருமையாக காணப்படும். இதைப் போக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்  பீர்க்கங்காய் கூடு […]

எங்கே செல்கிறது நம் பத்திரிக்கை சமுதாயம்…

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை துறை. ஆனால் அந்த நான்காவது தூணை மற்ற துணை தூண்களே சேதப்படுத்த எத்தனித்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். சமீபத்தில் பிற நிருபர்கள் எடுத்த நிலைபாட்டுக்கு ஒத்து வராத ஒரு நிருபரை மற்ற நிருபர்கள் தாக்கிய சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தேனி பிரஸ் கிளப் செயலாளர் மற்றும் சத்தியம் டிவி மாவட்ட நிருபர் ஒருவர் சக நிருபர்களால் பொதுமக்கள் மத்தியில் தாக்கப்பட்டது மிகவும் […]

அறிவோம் மேட்டூர் அணை வரலாறு..

நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ளஇந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம். மேட்டூர் அணையை இதுவரை இரண்டுமுறை மின்னல் தாக்கியது,  இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் […]

ரத்த புற்று நோயை குணமாக்குவது இனி எளிது தான் – சென்னை அரசு மருத்துவமனையின் புது முயற்சி.

இரத்தப் புற்று நோயை குணமாக்கும் வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. உயிர்க்கொல்லி நோயான ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர் சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன்த,னியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் திறக்கப்பட்டதை அறிந்ததும் அங்கு வந்து சீனிவாசன் சேர்ந்துள்ளார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று […]

தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் – நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?…

மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, மாமா, அண்ணா என்றழைத்த வெகுளிக் குழந்தை. அந்தத் தாத்தாக்களும் மாமாக்களும் அண்ணன்களும்தான் அவளைக் குதறிப்போட்டுள்ளார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை வக்கிரம்? மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல. அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா […]

அறிவோம் – பட்டா வகைகள்…

*பட்டா* ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். *சிட்டா* குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். *அடங்கல்* நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். *கிராம நத்தம்* ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம். *கிராம தானம்* கிராமத்தின் பொது […]

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

*சிக்கன்* கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம். *கீரை* கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் […]

1977 தமிழக அரசியல் வரலாறு மீண்டும் திரும்புமா? – சிறப்புக் கட்டுரை..

பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக கலைஞர் கருணாநிதியும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் இருந்து வந்தார்கள். அப்போதைய திமுகவின் மாநில பொருளாளராக எம்.ஜி.ஆர் சிறப்பாக பணியாற்றி வந்த நேரமது.அண்ணாவின் மறைவுக்கு பின் திமுகவின் அரசியல் பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறியது. கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியினால் திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறி அண்ணா திமுக என்னும் தனிக்கட்சி உருவாக்கிய போது அப்போதைய தலைவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியாய் இருந்த திமுகவுடனே இருந்தார்கள். […]

நாங்கள்தான் பத்திரிக்கையாளர்கள் – எங்களையும் அறிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள்..

உண்ண நேரத்திற்கு உணவில்லை… ஆனால் தினம் ஒரு அமைச்சருடன் சந்திப்பு.. உறங்க இடமில்லை.. உழைப்புகேற்ற ஊதியம் இல்லை.. உழைப்புகேற்ற ஓய்வில்லை.. வாழ்க்கையில் நிம்மதியில்லை.. எங்களுக்காக பேச ஆளுமை இருந்தும், இயலவில்லை.. எதிர்த்து கேட்க துணிவும் இருந்தும்.. கேட்க முடியவில்லை.. ஆதரவாக அரவணைக்க அருகில் உறவுகள் இருந்தும்.. காண இயலவில்லை.. பண்டிகைகள் அனைத்தும் வரும்.. ஆனால் எங்களுக்கு பாதி பண்டிகை சாலைகளில்.. வாழ்வும் இல்லை சாவும் இல்லை.. முழுவதும் போராட்டமே.. எண்ணிலடங்கா பிரச்சனையுடன் அரசு சபைக்கு சென்று தீராவிட்டாலும்.. […]

இதற்குதானே ஆசைப்பட்டாய் மானிடா.. ஒரு புறம் மரம் வெட்டப்படுகிறது .. மறுபுறம் ஆக்சிஜன் விற்பனைக்கு…

இந்தியாவில் ஒரு புறம் மரம் வளப்போம் என்ற தட்டிகளை வைத்துக்கொண்டு மறுபுறம் நவீன சாலைகள் உருவாக்க மரங்கள் வெட்டப்பட்டு வருவதை நாம் தினமும் பார்த்த வண்ணம்தான் உள்ளோம். இவற்றுக்கு காரணம் லட்ச கணக்கான செடிகள் நடப்படுகிறது என கூறினாலும், நடப்படும் செடிகள் ஆக்ஸிஜனை தர பல வருடங்கள் அதற்குள் இன்னும் பல உயிர்கள் செத்து மடியும். இப்பொழுது சென்னை கடற்கரை மற்றும் இன்னும் பல பகுதிகளில் ஆக்ஸிஜனை கூறில் விற்பதை காண முடியும்.  காரணம் மக்கள் தொகைக்கு […]

இந்த நாள் இனிய நாளாக விடியட்டும்.. ஆடியோ பதிவுடன்..

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்! எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது […]

கஞ்சாவின் தாக்கத்தால் வன்முறை பூமியாகி வரும் கீழக்கரை…சிறப்புக்கட்டுரை..

வலிமார்களும் இறைநேசர்களும் நிறைந்து வாழும் மண்ணில் போதிய மார்க்கப்பற்றுதலும் கண்ணியம் பேணப்படுதலும் இல்லாமல் போனதால் இன்றைய இளம் தலைமுறை கஞ்சா, பான்பராக், பீடி, சிகரெட்,குடி போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறது. ஒரு காலத்தில் சிறார்களின் சண்டை என்பது கையால் ஒருவருக்கொருவர் குத்தி கொள்வதும் பிறகு பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்தது. ஆனால்…இன்றோ,உயிர் மற்றும் உடல் சேதம் உண்டாக்கும் வகையில் இரும்பு ஆயுதங்களை கொண்டு எடுத்த எடுப்பிலேயே வெறி கொண்டு தாக்கும் குரூர புத்தியை […]

மனதில் விரியும் அந்த நாள் பெருநாள் தினம்…

கீழக்கரை… ரமலான் மாதம் பிறை 27 பிறந்தவுடனே எல்லோருடைய மனிதிலும் பெருநாள் குதூகலம் கிளம்பிவிடும்.  சிறப்பான முறையில்  26 நோன்பு திறந்தவுடனே 27 இரவுத் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள்.. வயதானவர்கள் வரை சிறு குழந்தைகள் வரை..  பள்ளிவாசலை மிதிக்காதவர்கள் கூட சொந்தங்களுடனும், பந்தங்களுடனும் நீண்ட 27ம் நாள் இரவுத் தொழுகை.  பள்ளி வாயிலில் சில மணித்துளிகள் தொழுது விட்டு கடைசியில் கேட்க இருக்கும் சிறப்பு துஆவுக்காக காத்து இருக்கும் இஞைர் கூட்டம்.  இரவு நேரத் தொழுகையில் கொடுக்கப்படும் சிறப்பான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!