RTE இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். RTE சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த வேண்டாம்.நடப்பாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் தொடங்கி மே 18 – ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை தமிழக […]
Category: கட்டுரைகள்
வறண்டு அடையாளம் மறைந்து வரும் மஞ்சளாறு அணை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிற்கு முதலில் இருந்த பெயர்வெற்றிலைக்குன்று ஆகும். நாளடைவில் மருவி வத்தலக்குண்டு ஆனது. இங்குவெற்றிலை அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டதால் இங்கிருந்து பல ஊர்களுக்குவெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊரின் அடையாளமாக இருந்த வெற்றிலைக் கொடிக்கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது ஒரே ஒருவெற்றிலைகை் கொடிக்கால் மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மஞ்சளாறுஅணையில் ஆக்கிரமிப்பு அதிகரித்ததாலும், தூர்வாராததாலும் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் வந்தது போல இப்போது வருவதில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக போதிய […]
தினம் கடன் தருவதாக வரும்தொலைபேசி அழைப்புகள்.. ஏமாறும் பொழுது பொது மக்கள்…
பிசினஸ் லோன் தருவதாக கூறி தினம்தினம் மக்களை ஏமாற்றி வரும் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் .பொது மக்களிடம் உள்ள விவரங்களைப் பெற்றுக் கொண்டு நீங்கள் இவ்வளவு அனுப்பி வையுங்கள் நான் கேட்கும் டாக்குமெண்டை கொடுங்கள் என பெற்றுக் கொண்டு உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது நீங்கள் டெபாசிட் மணியாக குறிப்பிட்ட தொகையை இந்த வங்கியில் செலுத்துங்கள் என சொல்கிறார்கள் இதனை நம்பி பலர் ஏமாந்து வருகிறார்கள் இது போன்ற ஏமாற்று பேர்வழியை கண்டு யாரும் […]
மத்திய மாநில அரசுகளின் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனத்தை நோக்கி நகரும் தமிழகம்
மத்திய மாநில அரசுகளின் ஹைட்ரோகார்பன் (பேரழிவு) திட்டத்தால் பாலைவனத்தை நோக்கி நகரும் தமிழகம் கலாச்சாரத்தின்சுவடுகளையும்,இயற்கைவளங்களின் பங்களி ப்பையும் பெரும்பான்மையாக கொண்டுள்ள தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு அழிக்கும் விதமாக பேரழிவு திட்டங்கள் தமிழகத்தினுள் நுழைவதை காண முடிகிறது.குறிப்பாக ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணு உலை விரிவாக்கங்கள், எட்டு வழி சாலை,ஸ்டெர்லைட் விரிவாக்கம், பாக்ஸைட் எடுப்பு, எரிவாயு குழாய் பதிப்பு,சாகர் மாலா, பாரத் மாலா போன்ற எண்ணற்ற பேரழிவு திட்டங்கள் தமிழகத்தில் புகுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான பேரழிவு திட்டங்களை […]
ஒழிக்க வேண்டியது தீவிர”வாதம்” அல்ல… தீவிரவாத ”செயல்கள்”..
தீவிரவாதத்திற்கும் தீவிர வாத செயலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. வாதம் என்பது நாம் நினைப்பதை நம்முடைய தீவிரமான வாதத்தால் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது. அவ்வாதம் மக்களுக்க பயன் உள்ளதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அவ்வாதம் சமுதாயத்திற்கு பயனளிக்காத பட்சத்தில் முழுமையாக நிராகரிக்கப்படும். இச்செயலால் மக்களின் உயிருக்க எந்த பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் அந்த வாதத்தை மக்களிடன் திணிக்க முற்பட்டு அதை செயல்படுத்தும் பொழுதே அத்தீவிரவாத செயல் தலையெடுக்கிறது. இந்த தீவிரவாத செயலை நுனியிலேயே கிள்ளி […]
அறிவோம் புதிய டிஜிட்டல் ATM கார்டுகளை எப்படி உபயோகிக்க தொடங்குவது….
புதிய டிஜிட்டல் ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு ( ACTIVATE ) கொண்டு வருவது???. இப்போது அனைத்து வங்கிகளும் சிப் பொருத்தப்பட்ட ATM கார்டுகளை வழங்கி வருகின்றன புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது எனப்பார்ப்போம் 1.முதலில் ATM இயந்திரத்தில் உங்கள் புதிய ATM கார்டை எப்போதும் போல insert செய்யவும். PIN GENERATE என வரும் அதை தேர்வு செய்யவும். 2.ACCOUNT NUMBER கேட்கும் அதை பதிவு செய்யவும். 3. PHONE NUMBER […]
அறிவோம் – கடனுதவியில் வாங்கிய வண்டியை, தவணை பணம் கட்ட தவறினால், வங்கி நிர்வாகம் வலுக்கட்டாயமாக திருப்பி எடுக்க கூடாது – டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், கடன் பெற்றவர், கடனை சரியாக கட்டவில்லை என்று, வங்கி, வலுக்கட்டாயமாக வண்டியை தூக்க கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கடன் ஒப்பந்தம் சிவில் காண்ட்ராக்ட் ஆகும், அதனால், சிவில் ரெமெடி மூலமே, அதாவது, நீதிமன்றம் மூலமே, வண்டி பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ICICI வங்கி எதிர் பிரகாஷ் கௌர் என்ற வழக்கில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வங்கி, கடன் வாங்கியவர் வீட்டுக்கு சென்று, […]
விரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..
யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் (NPCI – National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன. விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் […]
மறக்கவில்லை அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட தினத்தை..
மறக்கவில்லை நெஞ்சம்… மறந்திடுமா காவிகளின் வஞ்சம்! நாங்கள் இழந்தது எங்களின் இறையில்லத்தை மட்டுமல்ல… எங்களின் வழிபாட்டு உரிமையை! இந்த நாளில் இழிவடைந்தது நாங்களல்ல… இந்தியாவின் இறையாண்மை! அய்ந்து நூறு ஆண்டுகால சின்னம்… அய்ம்பதாண்டு கால ஆரியத்தால் காரியம் முடிக்கப்பட்டது! கரசேவை என்ற பெயரில் காவிகள் இடிக்க கைகட்டி நின்றது இந்தியாவின் மனசாட்சி.. காவல் காத்தது காவி(காக்கி)யுடை தரித்த தரித்திரங்கள்! இல்லாத ராமனுக்காக இறையில்லத்தை இடித்த தட்டுவானிகளுக்குத் தண்டனையோ ஒரே ஒருநாளாம்… அறிந்து கொள்க. ஓரிறையின் முன் ஒடுங்கி […]
அறிவோம் – மாடி படிக்கு அடியில் மின் மீட்டர் வைக்கலாமா??
மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின் வாரிய உரிமம் பெற்ற மின் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம், தரமான பொருட்களைக் கொண்டு மின் கம்பி அமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல நில இணைப்பு (எர்த்) கொண்ட மும்முனை குழல் உறைகளில் (த்ரீ பின் சாக்கெட்) மட்டுமே, மின் கருவிகளைப் பொருத்தவேண்டும். மின் வாரிய மீட்டர், கருவிகளைத் தாங்களாகவே மாற்றவோ, சேதம் விளைவிக்கவோ கூடாது. கட்டிடம் […]
பால் அருந்தாத டாக்டர் வெர்கீஸ் குரியன் – வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)..நவம்பர்,26.. தேசிய பால் தினம்.
இந்தியாவில் டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சியின் தந்தை என்று அறியப்படுவது நாம் அறிந்ததே. இந்த புகழுக்குப் பின்னால் குரியன் அவர்களின் விசாலமான கனவும், கனவை மெய்ப்படுத்தும் திட்ட வரைவுகளும், அதை செயல்படுத்த தேவையான கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் உள்ளன என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறிலிருந்து புரிந்து கொள்ள முடியும். பிறப்பும், இளமைக் கால கல்வியும்:- டாக்டர் குரியன் அவர்கள் 1921ஆம் ஆண்டு நவம்பர்26ஆம் நாளன்று கேரள மாநிலத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தார். […]
பயணம்-8, பயணங்களும், பாடங்களும் தொடர்கிறது…
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]
இஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..
இன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது. அதன் முதல் அமர்வில் வென் வைட், ஷஃபீக் மோர்டன், ஜோனாதன் ஸ்டீல், ஷஃபி அல்-கப்ரா ஆகிய நால்வரும் பேசினார்கள். உலகம் முழுவதும் இயங்கும் வரும் பெரு ஊடங்கள் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி அனுகிவருகிறார்கள் என்பதி குறித்து பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் கேள்வி-பதில் அரங்கு […]
பாம்பனில் 8ம் எண் புயல் எச்சரிக்கை ….. கூண்டின் எண்களும் விளக்கமும்..
புயல் காலங்களிலும், மழை காலங்களிலும் அடிக்கடி தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் பல வகையான புயல் கூண்டு எண்கள் கூறுவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம், ஆனால் நம்மில் அனேகருக்கு அதனுடைய விளக்கம் தெரிய வாய்ப்பு குறைவாகும். அதை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கீழே படத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பாசமயம் பாம்பனில் 8 வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை கொடி (கூண்டு ) எண்ணின் விளக்கம். 1 – காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 2 – புயல் […]
புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்..
வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள். வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள். வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை […]
பயணம் – 7, பயணங்களும்… பாடங்களும் தொடர்கிறது..
பயணங்களை எல்லா மதங்களும் வரவேற்கிறது. புனிதப்பயணங்களை எல்லா மதங்களும் ஊக்குவிக்கிறது. பயணிக்க அதற்கான காரணங்களை அறிவித்து புனித இடங்களுக்கு ஈர்க்கும் பணியை செய்கிறது. உலகத்தின் சில பகுதிகளில் பரவி வாழ்ந்தாலும் இன்றைக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கட்டமைத்து அந்த நாட்டை யூதர்களுக்கான நாடாக ஆக்கப்பட்டு இருக்கிறது. சிரியாவின் ஆளுகைக்கு கீழே இருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தனர். ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் யூதர்களை கூண்டோடு கொன்றொழிக்க பலவகை அடக்குமுறைகளை செய்தார். சிறைகளில் அடைக்கப்பட்டு விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு கொத்துகொத்தாக யூதர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற கொடிய நிகழ்வுகளுக்கு யூதர்களின் அராஜகங்களும், தாங்கள்தான் இந்த உலகத்தை ஆளப் பிறந்தவர்கள், யூதர்கள்தான் கடவுளின் குழந்தைகள் என்ற மனோபாவமும், அதை ஒட்டிய செயல்பாடுகளும் யூதர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கியது. யூதர்கள் நாடட்டற்ற நாடோடிகளாக சுற்றி வந்தனர். இறுதியில் ஏகாதிபத்திய நாடுகளின் அழுத்தத்தால் குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க வல்லரசுகளின் ஆதரவுகளால் பாலஸ்தீனப் பகுதிகளை கூறுபோட்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது. வட்டி […]
கேன்சருக்கு வழிவகுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு!…
ஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்ட்டியூட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம், ரேடியோ கதிர்களின் விளைவுகள் குறித்து NTP (National Toxicology Programme) எனும் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில் எலிகளின் உடலில் ரேடியோ கதிர்களைச் செலுத்தி அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோதனை […]
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களால் பலரும் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, பன்றிக் காய்ச்சல் பற்றிய பயம் அதிகமாகவே உள்ளது. சாதாரணக் காய்ச்சல் வந்தாலே பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் மக்களை வாட்டுகிறது. காய்ச்ச்ல் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன… பரிசோதனைகள் மூலம் கண்டறிவது எப்படி… காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி… அதற்கான […]
அரசு பள்ளி மாணவர் நிலை – பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை – விழிப்புணர்வு தேவை…
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?. அரசு – ஆசிரியர் – மாணவர் – பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் […]
இன்று புதுச்சேரி விடுதலை பெற்ற நாள்.. ஒரு பார்வை..
இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலையில் புதுவை பகுதி மட்டும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்ந்து புதுவை பிரெஞ்சு ஆட்சியின் கீழே செயல்பட்டு வந்தது. பின்னர் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் விடுதலை பெற்று புதுவை மாநிலம் இந்தியாவோடு இணைந்தது. இந்த நாளை புதுவை விடுதலை நாளாக அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. அதன்படி இன்று புதுவை […]
You must be logged in to post a comment.