அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய தோழராகவும் பெருமானாரின் மொழி பெயர்ப்பாளராகவும் பெருமானாரால் சொர்க்கவாசி என அடையாளம் காட்டப்பட்டவராகவும் திகழ்ந்தார்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள். நபிகளாரின் தாயிஃப் பயணத்தில் உடன் சென்று பெருமானாருக்கு உறுதுணையாக இருந்தார்கள். தாயிஃபில் இருந்து மக்கா திரும்பும் வழியில் நக்லா பள்ளத்தாக்கில் நபிகளாருடன் தங்கியவர்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் என்பதை ரமலான் சிந்தனை 4ல் பார்த்தோம். ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:- இரண்டு விஷயத்தில […]
Category: கட்டுரைகள்
இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதிகளை வழங்கிய உத்மான்(ரலி) அவர்கள்! ..ரமலான் சிந்தனை – 13..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
கலீஃபா உத்மான்(ரலி) காலத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு பிரதிகள் எடுக்கும் வேலை முழுவேகத்துடன் தொடங்கியது. ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பணி துவங்கியது. கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு “யமாமா” போர் நடந்தது. அதில் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும், நன்றாக மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்களும் கலந்து கொண்டனர். அந்த யுத்தத்தில் ஹாபிஸ்களில் 70 பேருக்கு மேல் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து […]
இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதியாக்கிய உத்மான்(ரலி)!..ரமலான் சிந்தனை – 12..கீழை ஜஹாங்கீர் அரூஸி…
ஜைத் பின் தாபித் (ரலி) நன்றாக ஓதத் தெரிந்தவர், எழுத்தறிவு உள்ளவர் என்று அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் பின் தாபித் (ரலி) ஓதுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார். எழுதுவதிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்ததை அண்ணலார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். இம்மாதிரி தகுதி கொண்டவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டார்கள். பின்பு அண்ணலார் […]
இறையில்லங்களை நிர்வகிக்கும் முறையை கற்றுத்தந்த உத்மான்(ரலி)…ரமலான் சிந்தனை – 11..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்கா, மதீனா பள்ளிகளை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பினை பலப்படுத்தியதும் இவர்களின் ஆட்சியில் தான். மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியை சுற்றி இருந்த யூதர்களுக்கு சொந்தமான தோட்டங்கள், காலி மனைகளை தமது சொந்த பணத்தில் கூடுதல் விலைக்கு வாங்கி பெருமானாரின் குடும்பத்தவர்களுக்கு இருப்பிடங்களாக்கி கொடுத்தார்கள் கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள். மஸ்ஜிதுன் நபவியை சுற்றி ஏராளமான நிலங்களை வைத்திருந்த யூதர்கள் காலப்போக்கில் தங்களின் ஒன்றிரண்டு இடங்களையும் […]
இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) வரலாறு!..ரமலான் சிந்தனை- 10..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்களின் இறுதி காலம் (மரணம்) நெருங்குவதை உணர்ந்து உடனடியாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து மூன்றாம் கலீஃபாவை தேர்வு செய்யுமாறும் இந்த தேர்வு மூன்று நாட்களுக்குள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்கள். இந்தக் குழுவில் பெருமானாரால் சுவர்க்கவாசிகள் என கூறப்பட்ட உத்மான்(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), சஅது(ரலி), அப்துர்ரஹ்மான்(ரலி), அலி(ரலி) போன்றோர் இடம்பெற்றனர். இவர்களில் அலி(ரலி) அவர்களை தவிர மற்ற ஐவரும் இஸ்லாத்தின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையாளர்களாகும். உமர் (ரலி) […]
அபூபக்கர்(ரலி) அவர்களை அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? ..ரமலான் சிந்தனை – 9.. கீழை ஜஹாங்கீர் அரூஸி.
அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களில் முதலாவது நபராகும். எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அவர்களது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும். இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா […]
முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி…ரமலான் சிந்தனை – 8…கீழை ஜஹாங்கீர் அரூஸி…
குல வம்சம் கோலோச்சிய அன்றைய மக்காவின் குறைஷியர் வம்சத்திலேயே “பனீதைம்” என்ற உயரிய கோத்திரத்தில் உதுமான் இப்னு ஆமிர் – சல்மா பின்த் சக்ர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், தமது வம்சத்தை சார்ந்த முன்னோடிகளின் வரலாறு மற்றும் முன்சென்ற சமுதாயங்கள் குறித்த தெளிவான ஞானம் கொண்டவர்களாவும், மிகச்சிறந்த வணிகராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். மக்காவின் மிக முக்கிய 10 நபர்களில் அன்னை ஹதீஜா பிராட்டியாரும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களும் முதன்மையானவர்களாக திகழ்ந்தார்கள். மக்காவின் […]
திருக்குர்ஆன் வசனத்தை செவிமடுத்த உமர்(ரலி) அவர்களின் மாபெரும் பிம்பம்! – ரமலான் சிந்தனை – 7..
இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார்கள். காலங்கள் செல்கின்றன, இஸ்லாம் அழகாக மலரும் காலத்தில் எதிர்பாராத விதமாக அரபுச் சக்கரவர்த்தியும் இறுதி நபியுமாகிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 9 அல்லது 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் இம் மண்ணுலகை விட்டு பிரிகிறார்கள். […]
சகோதரியின் குரல்வளத்தில் குர்ஆன் வசனங்களை கேட்டு மாபெரும் சகாபியான வரலாறு!- ரமலான் சிந்தனை – 6..கீழை ஜஹாங்கீர் அரூஸி.
‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் (ரலி) அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமர் (ரலி) இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான “அதீ” என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் […]
ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர்ஆன்… ரமலான் சிந்தனை – 5, கீழை ஜஹாங்கீர் அரூஸி.
தாயிஃப் அருகே உள்ள “நக்லா”(Nakhlah) என்னும் மலைப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்த நபிகளார் தொழுகை நேரத்தில் தித்திக்கும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிய போது அவர்களின் இனிமையான குரல் வளம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த மலைப்பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. உடனிருந்த ஜைது(ரலி) அவர்களைத் தவிர மனித நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நபியவர்கள் ஓதிய இறை வசனங்களை “ஜின்”கள் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டன. இதனை நபியவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய வேத வசனங்களில் அதை […]
ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர் ஆன்!, ரமலான் சிந்தனை – 4 – கீழை ஜஹாங்கீர் அரூஸி…
நபியவர்களின் ஏகத்துவ பரப்புரையின் ஆரம்ப காலக்கட்டத்தில் தாயிஃப் சென்று அங்கே ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தும் அம்மக்கள் பெருமானாரின் தூது செய்தியை காது கொடுத்து கேட்காமல் ஏளனம் செய்வதும் தாக்குவதுமாய் அழிச்சாட்டியம் செய்தனர் தாயிஃப்வாசிகள். அன்னை ஆயிஷா பிராட்டியார் ஒருமுறை பெருமானாரிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! உஹதுப்போரின் போது உங்களுக்கு ஏற்பட்ட வேதனைப் போன்று வேறு ஏதேனும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளதா? “ஆம்; உன் கூட்டத்தினர் எனக்கு கொடுத்த தொல்லைப் […]
இருப்பதை கொண்டு திருப்தி கொள்வோம்! ரமலான் சிந்தனை-2.
ரமலான் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக உணவு தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் மக்களுக்கு இவ்வருட ரமலான் கொஞ்சம் நெருக்கடி கலந்த காலமாய் அமைந்து விட்டது. இதற்கு கொரோனா என்னும் வைரஸ் பரவலும் அதற்கான ஊரடங்குமாகும். ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர ஆடை விற்பனையகம் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. புத்தாடை உடுத்தாத தலைபிறையை நாங்கள் கண்டதில்லை, ஆனால் இவ்வருட ரமலான் புத்தாடை அணியாத தலைபிறையாகி விட்டது என்னும் […]
ரமலான் சிந்தனைகள் -1, ஷஹீதுகளின் அளப்பரிய உயர்வுகளும்! கொரோனா ஷுஹதாக்களும்!
இறைவனின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீதுகளைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லும்போது அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என இயம்புகிறான். “இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூற வேண்டாம்; மாறாக, (அவர்கள் “பர்ஜக்” எனும் மறைவான உலகில்) உயிரோடிருக்கிறார்கள்; எனினும் (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள்? என்பதை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”.(அல்குர் ஆன் – 2:154) ஷஹீதுகளுக்கான இந்த சிறப்பான அந்தஸ்து குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, யார் […]
ஜன. 12-தேசிய இளைஞர் தினம்: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்..
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன.12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினம் என்று அரசு அறிவித்தது. இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக பெரிதும் முயற்சித்தவர் விவேகானந்தர். அவர் தன்னிடம் 100 இளைஞர்களை அனுப்பினால், அவர்கள் மூலம் நாட்டை வலிமையான இந்தியாவாக மாற்றுவதாகக் கூறினார். அந்த அளவுக்கு இளைஞர்கள் மீது அவர் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். இளைஞர்களால்தான் இந்தியாவை மாற்றிக் காட்ட முடியும் என்று அவர் நம்பினார். அமெரிக்க நாட்டில் சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் […]
புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரில் ஜனவரி 10ல் பொங்கல் விழா
பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள்.அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள்.இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுதான் இன்றைய பொங்கல் விழா. இந்திர விழா அக்காலத்தில் கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு கொண்டாடப்பட்டதாம். இந்திரனுக்கான விழாவாக இது […]
திருவள்ளுவரின் “மத” அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதா.?
இயற்கையின் எல்லா வண்ணங்களும் அழகானவைதான். கறுப்பும் வெள்ளையும் மஞ்சளும் சிவப்பும் மாநிறமும் கலப்புமாய் தோல் வண்ணங்கள் மாறுபடுவதால் மனித இனம் ரசனைக்கு உரியதாக இருக்கிறது. மானுட வண்ணத்தில் வர்ணம் புகுத்தப்பட்டு, பிறப்பால் மனிதர்கள் சமமானவர்கள் அல்ல என்ற பாகுபாடு ஒரு தர்மமாக்கப்பட்ட பிறகுதான் அழகு சீர்குலைந்தது. ஆதிக்கச் சித்தாந்த அடக்குமுறைகளாலும், அதற்கு எதிரான எழுச்சிகளாலும் இயற்கையான வண்ணங்களுக்கு அரசியல் அர்த்தங்கள் ஏற்றப்பட்டன. உலகெங்கும் சிவப்பு உழைப்பாளிகளின் போராட்ட வண்ணமாகியது. நீலம் இங்கே ஒதுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையைக் குறிப்பதாகியது. […]
அறிவியல் கண்ணோட்டமா,அப்படியென்றால்?
“அறிவியல் கண்ணோட்டம் தேவை,” என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். அறிவியல் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்ல. அரசியல் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலாளர் சங்கத்தினர்… என சமுதாயத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்குவோரும் இக்கருத்தை முன்வைப்பார்கள். ஐ.நா. சபையின் மனித உரிமை, கல்வி வளர்ச்சி, மொழிகள் பாதுகாப்பு உள்ளிட்ட அமைப்புகள் அறிவியல் கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றன. இந்தியாவின் அரசமைப்பு சாசனம் அறிவியல் மனநிலையை ஒரு சமுதாயக் கடமையாக வளர்க்க அறிவுறுத்துகிறது. புயலாகவோ பூகம்பமாகவோ வருகிற […]
இலங்கை ஜனாதிபதி தேர்தல்; சில முக்கிய தகவல்கள்..!
யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சில முக்கிய தகவல்கள்.இலங்கையில் நடைபெற்று வந்த பிரதமர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் மூலம் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி, இலங்கை மக்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் பதவி வகித்தல் வேண்டும் என்பதும் அவசியமாகின்றது. ஜனாதிபதியாக பதவி வகிப்பவரே அரசின் […]
ஆதரவற்ற முதியோர்களின் துயர் துடைப்போம் – அக்.1 முதியோர் தின சிந்தனை
ஆதரவற்ற முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த உலகில் லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடல் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1 இன்று உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய அவசர உலகில் குடும்ப உறவுகளை பேணுதல் என்பது வெற்றிடமாக காட்சியளிக்கிறது. மேலும் குடும்ப அமைப்புகளை சிதைக்கும் வண்ணம் பிரபல […]
மழைக்குப் பிராா்த்தனை…
மெல்ல மெல்ல பசுமை இழந்து வரும் தமிழக மாவட்டங்களில் நாகை மாவட்டம் ஒன்று. இப்பொழுதெல்லாம் மழை அந்தக் காலத்தைப் போல வந்து எட்டிப் பார்ப்பது கிடையாது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாகை மாவட்டத்தில் மூன்று நான்கு மணி நேரங்களாக தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது .இது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .நாகை மாவட்டத்திலும் நீர் தட்டுப்பாடு உண்டு. விளைநிலங்கள் அந்த அளவுக்கு இல்லை .ஆனால் இப்படி பெய்யும் மழையின் வருகை […]
You must be logged in to post a comment.