கல்வி நகரமான கீழக்கரையில் ஏராளமான கல்வி நிலையங்களும், அரபி மதரஸாக்களும் உள்ளன. இதில் அரபி மதரஸா கல்வி கூடங்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த ஆய்வுகளின் போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், நன்னடத்தை, வருகை பதிவு, பள்ளியின் சுகாதாரம், மாணவர்களின் ஆரோக்கியம், தொழுகை, சுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று 25.03.17 கீழக்கரை MP தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா பள்ளிக்கு இராமநாதபுரம் […]
Category: ஆன்மீகம்
இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு
பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர். மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய […]
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் மதரஸத்துல் ராழியாவின் மாணவர் முஹம்மது ஸஃப்வான் மார்க்க சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் மற்றும் சட்டப் போராளி […]
கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…
கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA Trust) கீழ் இயங்கி வரும் அல்மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு கல்வி அமைப்புகளும் கடந்த வருடங்களில் நடத்திய கோடைகால இஸ்லாமிய சிறப்பு வகுப்புகளில் பல மாணவர்கள் கலந்து […]
கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் எதிர்வரும் அன்று 26.03.17 ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு தெரு கட்டாலிம்சா பங்களா சமீபம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் SM பாக்கர் தலைமையேற்று இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறதா..? பாதுகாக்கிறதா..? என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹம்மது முஹைய்யத்தீன் நீதியும் நிர்வாகமும் என்கிற தலைப்பில் பேசுகிறார். இது சம்பந்தமாக நகரின் முக்கிய […]
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி..
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக கீழக்கரை நகர் கூட்டத்தில் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையின் தேவைகளுக்காக ரூபாய்.6000/- மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் கே. எம். முரளி, மாவட்டதுணைத்தலைவர் ஆர். ஜி. சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Y. S. சீனி சேகு, கீழக்கரை நகர் தலைவர் செல்வம், நகர் துணைத்தலைவர் ஜே. ஏ. பெருமாள், நகர் பொருளாளர் முஹம்மது இர்பான், நிஷா பவுண்டேஷன் எஸ். சித்திக், நகர் […]
இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை
கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று மார்ச் 22. சர்வதேச தண்ணீர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து […]
கீழக்கரையில் நபித் தோழர் அபூபக்கர் (ரழி)பற்றிய சிறப்பு நிகழ்ச்சி – நடுத் தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது
கீழக்கரையில் 21/3/2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் முஸ்லிம் சமுதாயத்தின் முதல் கலீஃபா அமீருல் முஃமினீன் அபூபக்ர் அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீகி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக அல் மத்ரஸத்துல் ஜாமிஆ மாணவர் பஷீர் கிராஅத் ஓதினார். மாணவர் முஷ்ரப் தமிழாக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் உதவி […]
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…
இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி. இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை […]
ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்லும் பயணிகளுக்கான குலுக்கல் தேர்வு இன்று சென்னை புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது
தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஹஜ் கமிட்டி மூலம் விண்ணப்பித்த பயணிகள், சென்னை புதுக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் இன்று 17.03.17 தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2017-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு சுமார் 13 ஆயிரத்து 584 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது. அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஹஜ் பயணிகளை […]
ஆதரவற்ற முதியவர்களை தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியில் ‘நிஷா பவுண்டேசன்’
மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிஷா பவுண்டேசன் ஆதரவற்ற ஏழை எளிய மக்களையும், முதியவர்களையும் தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியினை இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி சிறப்பாக செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆம்புலன்ஸ் சேவை, முதியோர் மீட்பு குழு, பொதுமக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் என பொது நல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து நிஷா பவுண்டேசன் நிறுவனர் சித்தீக் கூறுகையில் […]
இன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்
கட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், அறியாமையினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக […]
புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்
இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் […]
ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 70ம் ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி..
அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் எழுச்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70 வது ஆண்டு நிறுவன தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2017) அன்று நடைபெற்றது. அமீரக காயிதே மில்லத் பேரவையின் துணைத் தலைவர் காயல் நூஹு ஸாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை மாணவர் கீழக்கரை எச். முஹம்மது ஹாலித் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் முன்னிலை வகிக்க, துபை மண்டல […]
மக்காவுக்கு 6750 கி.மீ சைக்கிளில், ஹஜ் பயணம் துவங்கி இருக்கும் தமிழக முதியவர்
வாணியம்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் பயாஸ் அஹமது கடந்த வாரம் வாணியம்பாடியில் இருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு சைக்கிளில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னையை வந்தடைந்துள்ளார். இன்றைய நவீன உலகில் இருக்கும், துரித வாகன போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத காலக் கட்டத்தில் ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் கால்நடையாக நடந்தே பல்லாயிரம் மைல்களை கடந்து ஹஜ் கடமைகளை நிறைவேற்றி உள்ளனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள், குதிரை, […]
இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளை மற்றும் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் பொது நல சங்கம் சமூக சேவை..
இன்று 26.02.2017 இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த பகுதியினை செய்யது அம்மாள் அறக்கட்டளை மற்றும் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொதுநலச்சங்கத்தினர் சுத்தம் செய்தனர். பின்னர் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொது நலச்சங்கத்தின் தலைவர் பிரபு தலைமையில் வண்டிக்காரத்தெரு மற்றும் வண்டிக்காரப்பிள்ளையார் கோவில் தெரு சார்பில் மரங்கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகபாஸ்கர், பாலா, கார்த்திக், சுரேஷ்மேத்தா, ராஜசேகரன், ஜெய்பாரத், சகுபர்சாதிக் ராஜேந்திரன், மாணிக்கம், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்களே […]
இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்…
அறிவிப்பு கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 500 ப்ளாட் கிளை சார்பாக 26-02-2017 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அபூபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் போலிகள் ஜாக்கிரதை மற்றும் யார் சுன்னத்துல் வல் ஜமாத்? ஆகிய தலைப்புகளில் மாலை 07.00 மணியளவில் சிறப்பரையாற்றுகிறார்கள் இந்நிகழ்ச்சி ரோஸ் கார்டன் பகுதியில் தினாஜ்கான் தலைமையில் நடைபெறுகிறது..
ஆலந்தூர் வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சார்பாக குடியரசு தின வாழ்த்து…
சென்னை ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக குடியரசு தின நலவாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது வர்தா புயலால் செடிகளையும் மரங்களையும் இழந்த பொதுமக்களுக்கு மரகன்றுகள் , பழ மரகன்றுகள் மூலிகை செடிகள் மற்றும் கொசுவிரட்டி (துளசி ) செடிகளும் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளர்காளாக திரு. செல்வின் சாந்தகுமார் ஆய்வாளர் S1- காவல் நிலையம் , S.ஜிந்தா மதார் காஞ்சி மாவட்ட வடக்கு செயலாளர், மனித நேய ஜனநாயக […]
பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..
அறிவிப்பு 27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது . இடம் : சாலைத் தெரு உரை சகோதரி ;- ஹமிதா பர்வின் தலைப்பு : கொள்கை உறுதி உரை சிறுமி :-ஃபபௌஸியா நிஃபானாஸ் தலைப்பு : உறுதியான ஈமான்தான் மறுமைக்கு வெற்றி இந்நிகழ்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு கிளை கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரையில் தொடரும் தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணி..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகமெங்கும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் வீரியமாக செயல்பட்டு வருவது அறிந்ததே. கீழக்கரையிலும் பல கிழைகள் அமைத்து பல பணிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு அடையாள நிற வண்ணம் அடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். சமீபத்தில் முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை புதிதாக போடப்பட்ட சாலைகள் முறையாக போடப்படாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட காரணமாகி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை […]
You must be logged in to post a comment.