பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு;- 1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி… 1.கும்மிடிப்பூண்டி 2. பொன்னேரி (தனி) 3. திருவள்ளூர் 4. பூந்தமல்லி (தனி) 5. ஆவடி 6. மாதவரம் 2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி. 1.திருவொற்றியூர் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பெரம்பூர்4. கொளத்தூர் 5. திரு.வி.க. நகர் (தனி) […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
மதுரை – மண்டபம் இடையே 02/01/2019 வரை சிறப்பு ரயில்கள்..
மதுரை – மண்டபம் இடையே 26.12.2018 முதல் 02.01.2019 வரை பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, அதன் விபரங்கள்:- 1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 26.12.2018, 29.12.2018, 31.12.2018 மற்றும் 02.01.2019 காலை 05.00 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 08.00 மணிக்கு மண்டபம் சென்றடையும். 2. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 27.12.2018 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.00 மணிக்கு மண்டபம் சென்றடையும். 3. பயணிகள் ரயில் […]
கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் 26.12.2018 இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடலாடி , சாயல்குடி , பெருநாழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்றைய தினம் காலை 9:00 முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். செய்தி:- முருகன், இராமநாதபுரம்
மதுரை – மண்டபம் வழித்தடத்தில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்…
பாம்பன் ரயில் பாலத்தை பலப்படுத்தும் பணிகளுக்காக 2019 ஜன.2 வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வழித்தடத்தில் சென்னை ரயில்கள் நீங்கலாக, ஏனைய ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை – மண்டபம் மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மதுரை ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயில் நாளை (டிச.24) அதிகாலை 04: 30 மணிக்கு புறப்பட்டு காலை 07: 30 மணிக்கு மண்டபம் சென்றடையும். மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து நாளை காலை […]
இராமேஸ்வரம் ரெட் கிராஸ் தாலுகா கிளை சேர்மன் தேர்வு..
இராமேசுவரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை நிர்வாக குழு கூட்டத்தில் ராமேஸ்வரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை துணை சேர்மனும், ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினருமான ஜி.பாலசுப்ரமணியன் ராமேஸ்வரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செய்தி:- முருகன், இராமநாதபுரம்
20/12/2018 முதல் 02/01/2019 வரை ரத்தாகும் ரயில்கள்..
பாம்பன் ரயில் பாலம் பலப்படுத்தும் பணிகளுக்காக மதுரை – ராமேஸ்வரம் ரயில்வே பிரிவில், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன 1. மானாமதுரை – ராமேஸ்வரம் பிரிவில் இயக்கப்படும் அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களும் 20.12.2018 முதல் 02.01.2019 வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது 2. வண்டி எண் 16779/16780 திருப்பதி -ராமேஸ்வரம் – திருப்பதி வாரம் மும்முறை விரைவு ரயில் 22.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது 3. வண்டி எண் 22622/22621 கன்னியாகுமரி -ராமேஸ்வரம் – கன்னியாகுமரி வாரம் மும்முறை விரைவு ரயில் 22.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது 3.வண்டி எண் 56734/56735 மதுரை – செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 2018 டிசம்பர் 20, 22, 23, 24, 26, 27, 29, 30, 31 மற்றும் 2019 ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 4. வண்டி எண் மதுரை – பழனி – மதுரை பயணிகள் ரயில்கள் 20.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை – கூடல்நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செய்தி:- முருகன், இராமநாதபுரம்.
தமிழகத்தில் முழுமையாக முன்பதிவில்லா முதல் ரயில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் தொடங்கியது..
இன்று முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரை முழுவதும் முன்பதிவு இல்லாதது அடிதட்டுமக்களுக்காக புதிய ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தில்…புதுக்கோட்டை வழியாக … Chair Car வசதியுடன்… முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில். தாம்பரம் – செங்கோட்டை ரெயில் எண் 16189. தாம்பரம் பு. நேரம் …….….07:00 செங்கல்பட்டு………………..07:30 விழுப்புரம் ………………….…09:20 மயிலாடுதுறை …………….11:35 கும்பகோணம் ………………12:10 தஞ்சாவூர்……………………..12:45 திருச்சிராப்பள்ளி………….14:25 *புதுக்கோட்டை……………..15:15* காரைக்குடி……………………16:00 மானாமதுரை………………..15:30 அருப்புக்கோட்டை…………18:15 விருது நகர்……………………18:45 சிவகாசி………………………..19:05 ராஜபாளையம்……………..19:40 சங்கரன்கோவில்………….19:55 தென்காசி……………………..20:35 செங்கோட்டை……………….22:30 செங்கோட்டை-தாம்பரம் […]
கீழக்கரை வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) நடத்தும் கிராத் மற்றும் பயான் போட்டி ..
NASA வின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் சார்பாக அவ்வமைப்பின் மாணவர்கள் அபிவிருத்தி குழு நடத்தும் கீழக்கரை மதரஸாக்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி கிராத் மற்றும் பயான் போட்டி என இரு பிரிவாக 15 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் மதரசா வளாகத்தில் ஆண்களுக்கு ஜனவரி 6ம் தேதியும், பெண்களுக்கு ஜனவரி 5ம் தேதியும் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய கடைசி நாள் […]
கீழக்கரையில் நாளை (19/12/2018) புதன் கிழமை மின் தடை..
கீழக்கரையில் நாளை (19/12/2018) – புதன் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.45 மணி முதல் மாலை 04.45 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தொிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பதிவு – ஒரு முக்கிய அறிவிப்பு 2018 பிறப்பு சான்றிதழ் வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…
01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது நாம் அறிந்த விசயம், ஆனால் இந்த வருடம் அதன் சட்ட திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய வழிமுறையின் படி 01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PIC ME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ அல்லது 102 என்ற இலவச எண்ணிற்க்கு போன் செய்தோ அந்த நம்பரை […]
நாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்!!
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் […]
மதுரை மார்க்கம் ரயில் சேவையில் மாற்றம்…
மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை ஒன்றில் இருப்பு பாதை தரை தளம் மேம்படுத்தும் பணிகள் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் 13.12.2018 மற்றும் 14.12.2018 தேதிகளில் கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 2. வண்டி எண் 56710 மதுரை – பழனி பயணிகள் ரயில் 14.12.2018 மற்றும் 15.12.2018 தேதிகளில் […]
பாம்பனில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்..
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை (டிச.14) புயலாக வலுப்பெறும். இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. செய்தி:- முருகன், இராமநாதபுரம்..
முன்னாள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் ..
முன்னாள் திமுக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.தனப்பால் காலமானர். அவரின் மறைவுக்கு வேலூர் மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர். மேலும் அவருடைய உடலுக்கு உறவினர் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கே, எம்.வாரியார், செய்தியாளர்-வேலூர்
திருச்சிராப்பள்ளியில் பல ரயில்கள் ரத்து – நேரம் மாற்றம்..
திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வண்டி எண்:- 56822 திருநெல்வேலி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி – தஞ்சாவூர் இடையே 31.12.2018 வரை பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. (ஞாயிற்றுக்கிழமை தவிர). வண்டி எண்:- 56821 மயிலாடுதுறை – திருநெல்வேலி பயணிகள் ரயில் தஞ்சாவூர் – திருச்சிராப்பள்ளி இடையே 31.12.2018 வரை பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. (ஞாயிற்றுக்கிழமை தவிர). செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
மதுரையில் காவல்துறை சார்பாக 13/12/2018 அன்று மனுதாரர்கள் குறை தீர்க்கும் நாள்..
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் (குடும்ப பிரச்சனைகள், வரதட்சணை கொடுமைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகள் தொடர்பான மனுக்களை ஏற்கனவே காவல் ஆணையர் அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள், காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்களிடம் நேரடியாக மனு கொடுத்த மனுதாரர்கள் காவல் உதவி ஆணையர் (வரதட்சணை ஒழிப்பு பிரிவு) அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான தல்லாகுளம், திருப்பரங்குன்றம், தெற்கு, […]
கீழக்கரையில் தொலை தொடர்பு சம்பந்தமான நிறை குறைகளை தெரிவிக்க ஒரு வாய்ப்பு ..
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் TRAI – Telecom Regulatroy Authority of India எனும் தொலை தொடர்பு ஆணையம் கீழக்கரைக்கு வருகின்ற 10.12.18 திங்கள் கிழமை வருகை தர உள்ளனர். அன்று மாலை 3.00 மணியில் இருந்து கீழக்கரை ஹீசைனியா மஹாலில் நடக்கவிருக்கும் நிகழ்வில் தொலை தொடர்பு சாதனங்களில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களை பற்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ குறைகளை கூறலாம். இந்நிகழ்வில் AIRTEL, JIO, VODAFONE, IDEA, BSNL மற்றும் இன்ன பிற அதிகாரிகளும் […]
மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து ..
பாம்பன் ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பராமரிப்பு பணிகள் நேற்று (04.12.2018) முதல் துவங்கியுள்ளது. இந்த பணிகள் கூடுதல் பாதுகாப்புக்காக செய்யப்படுகிறது. இதன் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இராமேஸ்வரம் பகுதியில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு […]
கீழக்கரை அல்-அமீன் அமைப்பின் மூன்றாம் ஆண்டு மாபெரும் கட்டுரை போட்டி..
கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் அமைப்பு சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் (2018 – 2019) ஆண்டின் மூன்றாவது கட்டுரை போட்டி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போட்டியின் விபரங்கள் கீழே:- 👉இந்த கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு மற்றும் விதிமுறைகள் அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 👉மதிப்பெண் வழங்கும் முறையும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். 👉நம் ஊரில் […]
இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…
இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. இன்று (05.12.2018) இரவு 07.00 மணிக்கு […]
You must be logged in to post a comment.