இன்று (19-05-2017) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த வரும் விருதுநகர் மாவட்டம் , கன்னியாகுமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் என முதல் மூன்று இடங்களில் வந்துள்ளது. இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 17979 மாணவர்கள் பரிட்சை எழுதினர். இதில் மாணவர்கள் 8814 பேரும், மாணவிகள் 9165 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 96.46 சதவீதமும், மாணவிகள் 98.83 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் […]
Category: அரசு அறிவிப்பு
கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கீழக்கரை ஆணையர் வசந்தி மற்றும் தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையில் பணி உத்தரவு இன்று (18-05–2017) கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது.
தொகுதி-II A நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.05.2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும். தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகளை வழங்கினார். பயிற்சி வகுப்பினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்க்கைக்கு இலவச ஆன் லைன் வசதி..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி விண்ணப்பம் பூர்த்தி செய்வதகு உதவி செய்ய ஏற்பாடு துவக்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவையை கல்லூரி சேர்மன் SM. முஹம்மது யூசுப் துவக்கி வைத்தார். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். http://www.annauniv.edu இது பற்றி அறக்கட்டளை இயக்குநர். ஹாமீது இபுராஹிம் மற்றும் கல்லூரி […]
கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்…
கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையராக வசந்தி நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார். இவர் முன்னர் கொடைக்கானல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது. இதற்கு முன்னர் அரசியல்வாதிகளின் பணிக்காலம் முடிந்த பின்னர் சந்திரசேகர் பொறுப்பு ஆணையராக பணியாற்றி மக்கள் எளிதாக அணுகக்கூடியவராகவும், மக்களின் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க கூடியவராகவும் இருந்தார். அவர் ஆற்றிய பணிக்கு இத்தருணத்தில் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
இராமநாதபுரம் எஸ்.பி பணியிட மாற்றம்.. புதிய எஸ்.பி நியமனம்..
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றி வந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பி ஆக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான சேர்க்கை…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை மற்றும் ஈரோடு […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்..
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (GROIP II – NON INTERVIEW) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய பெயர் மற்றும் முகவரியினை இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10.05.2017க்குள் பதிவு செய்யலாம். மேற்படி பதிவு செய்தவர்கள் 12.05.2017 முதல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9043260689 […]
இன்று ‘ஏப்ரல் 30 ‘ – குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பெற்றோர்கள் மறந்துடாதீங்க…
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மறக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்குமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 43,051 சொட்டுமருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி […]
TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, நேற்று 27.04.2017 வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953 தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் […]
உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா?? “வாட்ஸ் அப்” மூலம் உங்கள் குறைகளை தீர்க்கலாம்..
உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான பிரச்சனையா இனி 9585994700 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.நடராஜன் அறிவித்துள்ளார். குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, புகார், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக 04567-230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சலுகையை நழுவ விடாதீர்கள்..
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் அதை உறுதிபடுத்தக்கூடிய குறுஞ்செய்தி நாம் பதிவு செய்யும் மொபைல் எண்ணுக்கு வரும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் போன்ற அனைத்து […]
அரசு மீன்பிடி துறைமுக வேலைவாய்ப்பு..
அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகதேர்வு நடத்தப்படவுள்ளது. அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2016 அன்றுள்ளபடி கணக்கிடப்படும். சம்பள விகிதம் ரூ.4,800.00- ரூ.10,000.00, தர ஊதியம் ரூ.1300.00 ஆகும். இப்பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் […]
இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் இன்று முதல் ஆதார் சேர்க்கை மையங்களில் செய்யலாம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று 17.04.17 […]
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு விரைவு ரயில் ஆரம்பம்..
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என்று அறியப்படுகிறது. எண். 06062 கோயம்பத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, இராமநாதபுரம் […]
தமிழக அரசின் பொது விநியோக திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியீடு
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் முதன்மை குறிக்கோளாக, எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் இருக்கிறது. அதே போல் பொது விநியோக திட்டம் மூலமாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்கவும், அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்கவும், அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் […]
தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – மறந்துடாதீங்க…
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஏப்ரல் 2 முதல் தவணையாகவும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30 அன்றும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை […]
கீழக்கரையில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் – பொதுமக்கள் பயப்பட வேண்டாம் – வட்ட வழங்கல் அலுவலர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இன்று ஏப்ரல் 1 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு…
கீழக்கரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பின்வரும் சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர். செல்வராஜ், செயலாளர். புல்லாணி, பொருளாளர். கோகிலா, துணைத்தலைவர். ரவிச்சந்திரன், […]
குடும்ப அட்டைதார்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ தரும் இடம், தேதி செல்போனில் அறிவிக்கப்படும் – உணவு வழங்கல் துறை செயலாளர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:- பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1 ஆம் தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் […]
You must be logged in to post a comment.