ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் கீழக்கரையில் அரசு மருத்துவமனை 10 கோடியில் புதிய கட்டிடம் , புதிய மீன் மார்க்கெட் அறிவு சாரா மையம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்தார். முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர் .இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் கீழக்கரை ஆணையர் செல்வராஜ் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா பொறியாளர் அருள் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் அபிதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் நகர்மன்ற உறுப்பினர்கள் சித்தீக் சப்ராஸ் நவாஸ் . மீரான் அலி சுஹைது ஃபயாஸ் நசுருதீன் பாதுஷா சக்கினா பேகம் ராணி திமுக நகர் செயலாளர் பஷீர் துணைச் செயலாளர் ஜெய்னுதீன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









