கீழக்கரையில் சிறப்பாக நடைபெற்ற ரத்த தான முகாம் ..

தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நவீன காலத்தில் கேட்டறியாத நோய்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. மனிதனை பிறப்பாலும், இனத்தாலும், நிறத்திலும் வேறுபட்டு நின்றாலும் இரத்தத்தின் நிறத்தில் மட்டுமே பிரிக்கமுடியாத அளவு இணைந்தே இருக்கிறான்.

கீழக்கரையில் இன்று (15-10-2017) ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம் (CVC) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து இரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாம் மஹ்தூமியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் உயிர் காக்கும் தானமான இரத்த தானம் செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!