தேசிய ரத்த தான தினத்தையொட்டி ரத்த தான முகாம்…

தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் உறுப்பு கல்லூரி என் எஸ் எஸ் , ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். முதல்வர் சேகர் வரவேற்றார். அரசு ரத்த வங்கி டாக்டர் ஞானக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி தலைமையில் 50 மாணவர்களிடம் மருத்துவ குழுவினர் ரத்த தானம் சேகரித்தனர். தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு சங்க மேற்பார்வையாளர் முருகேசன் கலந்து கொண்டார். என் எஸ் எஸ் திட்ட அலுவலர் மணிராஜன், ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!