அதிகாலையில்  கரை ஒதுங்கிய  பீடி இலை பண்டல்கள்: போலீசார் விசாரணை..

இராமநாதபுரம், செப்.14 – இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் கருப்பு நிற பாலித்தின் பையால் நன்கு பேக்கிங் செய்த பண்டல்கள் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை பரவிக் கிடந்தன. கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய அப்பண்டல்கள் பீடி இலைகள் என தெரிய வந்தது. இது அப்பகுதி மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு நள்ளிரவில் கடத்திச் சென்றபோது மர்மப்படகில் இருந்து கடல் கொந்தளிப்பால் நழுவி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!