புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு விசிகவினர் எதிர்ப்பு! தனியார் ஹோட்டலில் போலீசார் குவிப்பு! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..
வத்தலகுண்டு வருகை புரிந்த,
புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்திக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் தங்கியுள்ள ஹோட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி தலைமையில் அக்கட்சியின் மாநில இளைஞரணி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புரட்சித் தமிழகம், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி கலந்து கொள்வதற்காக வத்தலக்குண்டு வருகை புரிந்தார்.
அவர் வத்தலகுண்டுவில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த நிலையில், அவர் தங்கி உள்ள தனியார் ஹோட்டலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்கம் மாநில துணைச் செயலாளர் உலகநம்பி தலைமையில், விடுதலை சிறுத்தை கட்சியினர் குவிந்தனர். இதனால் அவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் ஓட்டலில் இருந்து வெளியில் செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால், அந்த தனியார் ஹோட்டலில், நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநாடு முடிந்து தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அந்த ஹோட்டலுக்கு சென்று, ஏர்போர்ட் த.மூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த ஹோட்டலில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
You must be logged in to post a comment.