பேரையூர் அருகே சேடப்பட்டி யில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரபு தலைமையில் என்சிசி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து ஒவ்வொரு கிராமமாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக சேடப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தொற்று நோய்கள் பற்றியும், பிளாஸ்டிக் பைகள் மக்காமல் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளை சீரழித்து வரும் பிளாஸ்டிக்கே உபயோகப்படுத்தக் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர் அதனை தொடர்ந்து மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கி வைத்தனர் மஞ்சள் பை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைப்பதால் மஞ்சள் பை மற்றும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பேரணியில் ஈடுபட்டனர், இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!