இராமநாதபுரம் புனித அந்திரேயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக சுற்றுப்புற சூழல் பேரணி..

இராமநாதபுரம் புனித அந்திரேயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சிஎஸ்ஐ மதுரை இராமநாதபுரம் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனத்துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபென்சன் கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் சேவைக்கு ஆலய குருவானவர் கிறிஸ்டோபர் டேவிட் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கரிசனத்துறை சேர்மன் அருள் திருமாறன் செயலாளர் பால்சன் ஆலிவர் முத்துராஜா மேல்நிலைப்பள்ளி முதல்வர் பால்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர் பேரணி முக்கிய வீதிகள் வழியாக வருகை தந்து சிஎஸ்ஐ சர்ச் வளாகத்தில் வந்தடைந்த பின்னர் அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!