சமுதாய வித்தகருக்கு “சிறந்த சமுதாய சிந்தனையாளர் விருது”..

தூத்துக்குடி மாவட்டம், கேம்பலாபாத் யங் முஸ்லிம் சொசைட்டி சார்பாக கல்வி விழா(23.08.18) நடைபெற்றது. இவ்விழா  நல்லாசிரியர் ஷண்முக சுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியை கலைவாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வெல்ஃபேர் பார்ட்டியின் தேசிய பொருளாளர் SN.சிக்கந்தர் கலந்துகொண்டு பள்ளி இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு முத்தய்ப்பாய் வெல்ஃபேர் பார்ட்டி தேசிய பொருளாளர் SN.சிக்கந்தருக்கு  YMS சார்பாக சிறந்த சமுதாய சிந்தனையாளர் 2018  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

————————————————————————

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!