மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் பி எம் எஸ் பள்ளி வளாகத்தில் வருவாய்த் துறையினறால் சேகரிப்பட்டு வருகிறது..

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் பி எம் எஸ் பள்ளி வளாகத்தில் வருவாய்த் துறையினறால் சேகரிப்பட்டு வருகிறது.

மதுரை அவனியாபுரத்தில் நாளை தைத்திங்கள் முதல் நாளான பொங்கள் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துகின்றது. .

இதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் , தனி நபர்கள் அளிக்கப்படும் நன்கொடை பொருட்களை அவனியாபுரம் — திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பி எம் எஸ் பள்ளியில் வருவாய் துறையினறால் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை தெற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி மற்றும் துணை வட்டாட்சியர் கோபி ஆகியோர் நன்கொடையாக பெறப்பட்ட பொருட்களுக்கு ரசீதுகள் வழங்கி பொருட்களை சேகரித்து வருகின்றனர்

இதுவரை 5 பீரோக்கள் 30 கட்டில் 30 மிக்ஸி 50 குக்கர் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. பெறப்படும் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரசீது வழங்கப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!