உசிலம்பட்டியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 15 ஷேர் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல்

உசிலம்பட்டியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 15 ஷேர் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 1 மாதங்களாக ஷேர் ஆட்டோக்களினால் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்ற நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 15ஷேர் ஆட்டோக்களை உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!