உளுந்தூர்பேட்டை அருகே சோதனையில் இருந்த தலைமை காவலருக்கு கத்தி குத்து ..

உளுந்தூர்பேட்டை அருகே இருவேல்பட்டு கிராமத்தில் திருவெண்ணைய் நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார்(35) என்பவர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்ட போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தலைமை காவலர் செந்தில்குமாரை கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு ஓட்டம்.

தப்பி ஓடிய 3 பேரும் பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

படுகாயம் அடைந்த தலைமை காவலர் செந்தில்குமார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!