நிலக்கோட்டை அருகே வேன் மீது கல்வீச்சு டிரைவர் படுகாயம்…

சின்னாளபட்டியில்  உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்பவர்களை நிலக்கோட்டைக்கு ஏற்றி வந்த வேன் மற்றும் அப்பகுதியில் இருந்த லாரி மீது  பதுங்கி இருந்த சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி வாகனங்களின் கண்ணாடியை உடைத்தனர். கண்ணாடி உடைந்ததில் வேன் டிரைவர் நாகமுத்து வயது 52 பல் உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல் வீசித் தாக்கப்பட்ட வேனில் இருந்த சுமார் 10 மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்த காயமின்றி தப்பினார். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரனுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரனை நடத்தினர். இருப்பினும் கல் வீசி தாக்கிய நபர்கள் யாரும் பிடிபடவில்லை. இதுகுறித்து அளிக்கப்பட்ட டிரைவர் புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!