கல்லூரி மாணவியின் கல்விக்கு உதவிய தென்காசி காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..

குற்றாலம் மாணவியின் கல்விக்கு உதவிய தென்காசி காவல் ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது குடும்ப வறுமை காரணமாக தேர்வு கட்டணம் செலுத்த சிரமப்பட்ட நிலையில், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கட்டண தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை மாணவியிடம் உடனடியாக வழங்கி உரிய நேரத்தில் உதவி செய்துள்ளார். மேலும் வேலையில்லாமல் இருந்த அவருடைய அண்ணன் பட்டதாரியான செல்வகணேஷ் தென்காசியில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுத்து அந்த குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார். காவல் ஆய்வாளர் பாலமுருகனின் இந்த மனிதாபிமானமிக்க செயல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!