சமூக வலைதளங்களில் உதவி தேடிய கீழக்கரை சிறுவனுக்கு… நேச கரம் நீட்டிய சட்டமன்ற உறுப்பினர்..

இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சில நாட்களுக்கு முன்பு மரணித்தார், அவருக்கு ஆறுதல் கூற வருகை தந்த  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழகச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், அவருடைய  வீட்டிற்கு சென்ற பின்பு சமீபத்தில் சமூக வலைதளங்களில்  கீழக்கரை பெத்திரி தெருவைச் சேர்ந்த அல் நிதுசான் என்ற 10 வயது ஏழை சிறுவன் தன் உடலில் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக பணம் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இசசெய்தி அறிந்த சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சிறுவனுக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான முழு பணம் உதவியையும் செய்தார், இச்செயலுக்கு சிறுவனின் குடும்பத்தார்கள் நன்றி தெரிவித்தனர்.

பின்பு கீழக்கரை 7 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஓட்டு வீடு உடைந்த காரணத்தினால் அவ்வீட்டை சரி செய்வதற்காக தன் சொந்த நிதியில் உதவி செய்ததோடு,  அரசு சார்பில் செய்ய வேண்டிய உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிகழ்வின் போது கீழக்கரை தாசில்தார் முருகேசன் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி, கீழக்கரை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது இளைஞரணி,  அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!