கீழக்கரையில் வேலை செய்த வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தமிழகமெங்கும் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் அவர்கள் வேலை இன்றி உணவுக்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். தமிழக அரசு சார்பில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக இன்று (01/06/2020) பீகாரைச் சேர்ந்த 25 நபர்களும் மேற்கை வங்காளம்தை சேர்ந்த 37 நபர்களும் கீழக்கரையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயில்வே நிலையத்திற்கு சென்றார்கள்.

கீழை நியூஸுக்காக… SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!