வேதாளை தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்..

இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிளை சார்பில் ஊராட்சி தூய்மை காவலர் 20 பேருக்கு பேரிடர் கால நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறி தொகுப்பை ஊராட்சி தலைவர் ஜெ.அல்லாபிச்சை தலைமையில் மாவட்ட செயலர் கே.செந்தில் செல்வானந்த் இன்று (30.5.2020) வழங்கினார். மாவட்ட மகளிரணி துணை செயலர் கோகிலா தமிழ் குமரன், மாவட்ட வர்த்தக அணி செயலர் எஸ்.முருகானந்தம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் வி.ரஜினி, ராமேஸ்வரம் நகர் செயலர் எஸ்.முருகன் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!