வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழக்கூடிய கோவில் அர்ச்சகர்கள் மற்றும் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்..

144 தடை உத்தரவு வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழக்கூடிய கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் இந்து அறநிலையத்துறை உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் 144 தடை உத்தரவால் கோவிலை திறக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருவதை அறிந்த விருதுநகர் மாவட்ட இந்து அறநிலையத்துறை உறுப்பினர் பரமசிவம் ஏற்பாட்டில் அர்ச்சகர்கள் மற்றும் வறுமையில் வாழக்கூடிய பொதுமக்கள் என 500 குடும்பங்களுக்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி போன்ற அத்தியாவசிய நிவாரண பொருட்களை இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் மற்றும் இந்து அறநிலையத் துறை உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் வழங்கினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!